Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

இயந்திரம் மூலம் வரிகள் செலுத்தும் வசதி

Print PDF

தினமணி 20.04.2010

இயந்திரம் மூலம் வரிகள் செலுத்தும் வசதி

திண்டுக்கல், ஏப். 19: சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி மற்றும் வரி இல்லாத பிற இனங்களுக்கான தொகையை இயந்திரங்கள் மூலம் செலுத்தும் வசதியை திண்டுக்கல் நகராட்சி அறிமுகப்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை அலுவலக நாள்களில், அலுவலக நேரங்களில் கணினிமயமாக்கப்பட்ட மையத்தின் மூலம் செலுத்தி வந்தனர். தற்போது 24 மணி நேரமும் எப்போது வேண்டுமானாலும் இவ்வரிகளை நகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தின் மூலம் செலுத்தி அதற்கான ரசீதினை இயந்திரத்தின் மூலமே பெற்றுக் கொள்ளும் வசதியை நகராட்சி ஏற்படுத்தி உள்ளது.

பணம், காசோலை மூலம் வரியை செலுத்தலாம். செலுத்த வேண்டிய பணத்தினை ஒவ்வொன்றாக இயந்திரத்தில் வைக்கும்போது அது குறித்த விவரம் திரையில் தெரியும். செலுத்த வேண்டிய முழு தொகையையும் இயந்திரம் பெற்றுக் கொண்ட பின்னர், வரிதாரருக்கு அதற்கான ரசீதினை வழங்கும். ரொக்கமாக மட்டுமின்றி காசோலையையும் இயந்திரம் பெற்றுக்கொண்டு வரிதாரருக்கான ரசீதினையும் இயந்திரம் உடனடியாக வழங்கிவிடும்.

இயந்திரத்தினை திங்கள்கிழமை இயக்கி வைத்த நகர்மன்றத் தலைவர் ஆர். நடராஜன் கூறிகையில், நகரின் பல்வேறு மக்களுக்கும் பலனளிக்கும் வகையில் இந்த இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது; வரிதாரர் தனக்கு சௌகரியப்பட்ட நேரத்திலும், நாள்களிலும் வரி செலுத்தும் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளோம் என்றார்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் அர.லட்சுமி, நகராட்சிப் பொறியாளர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 20 April 2010 10:02
 

வீட்டு,குடிநீர் வரி செலுத்த மிஷின்

Print PDF

தினமலர் 20.04.2010

வீட்டு,குடிநீர் வரி செலுத்த மிஷின்

திண்டுக்கல் : ண்டுக்கல் நகராட்சியில் வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் வரி, கடை வரி செலுத்துவதற்கு ஏ.டி.எம்., மையம் போன்று பில்லிங் மிஷின் அமைக்கப்பட்டுள் ளது. இதில் பணத்தை செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.இந்த மிஷினில் பயனாளிகள் தங்களுக்கு கொடுக் கப்பட்ட வரி விதிப்பு எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்பு டச் ஸ்கிரின் மூலம் நிலுவையில் உள்ள வரி பாக்கி, செலுத் திய நாள், ஆண்டு, முழு முகவரியும் வரும். அங்குள்ள பாக்சில் பணத்தை செலுத்தினால், உடனடியாக இதற்கு ரசீதும், இன்னும் செலுத்த வேண்டிய நிலுவை வரி பாக்கியும் உடனடியாக ரசீதுடன் வரும்.

நகராட்சி கமிஷனர் லட்சுமி கூறியதாவது:

திண்டுக்கல் நகராட்சியில் தற்போது ஏ.டி.எம். மிஷின் மாதிரி வரி செலுத் தும் மிஷின் அமைக்கப் பட்டுள்ளது.இந்த மிஷின் தற்போது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இதனால் பொதுமக்கள் வரிகளை உடனடியாக செலுத்தி ரசீது பெறுவதற்கு இந்த வசதி செய்யப் பட்டுள்ளது. இந்த மிஷின் வருகையால் பொதுமக்கள் யாரும் அலுவலர்கள் முன்பு காத்திருக்க வேண் டிய அவசியமில்லை. இதற்கு தனியாக அறை அமைக்கப்பட்ட பின்பு 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும். இவ் வாறு அவர் கூறினார்.

Last Updated on Tuesday, 20 April 2010 07:15
 

120 பணிகளுக்கு ஆன்-லைனில் டெண்டர் :சேலம் மாநகராட்சிக்கு 2வது இடம்

Print PDF
தினமலர் 13.04.2010

120 பணிகளுக்கு ஆன்-லைனில் டெண்டர் :சேலம் மாநகராட்சிக்கு 2வது இடம்

சேலம்:தமிழகத்தில் கோவை மாநகராட்சிக்கு அடுத்தபடியாக சேலம் மாநகராட்சியில் ஆன்-லைன் மூலம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. குறுகிய காலத்தில் 120 பணிகள் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அரசு நிதி மற்றும் மானியம், உலக வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு நிதி மூலம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என்று மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் கோடிக்கணக்கான ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை சார்பாக, சிறிய மற்றும் நடுத்தர நகர்ப்புற அடிப்படை வசதி மேம்பாட்டு திட்டம், பெரு நகர அடிப்படை வசதி மேம்பாட்டு திட்டம், டுபிட்கோ அடிப்படை வசதி திட்டம் ஆகியவற்றின் மூலம், சுகாதாரம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.உள்ளாட்சி அமைப்புக்களின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளில் கால தாமதங்களை தவிர்க்கும் பொருட்டு, அனைத்து பணிகளுக்கும் டெண்டர் விடுவது தான் நடைமுறை வழக்கம். ஆனால், அனைத்து கட்டுமான நிறுவனங்களாலும் அரசு பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோர முடியாது.சம்மந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் ஆளுங்கட்சி பிரமுகர்களின் விருப்பத்துக்கு ஏற்பவும், அவர்கள் கைகாட்டும் நபர்கள் மட்டுமே அரசு கட்டுமான பணிக்கான டெண்டரில் கலந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. சம்மந்தப்பட்ட உள்ளாட்சி துறை உயர் அதிகாரிகளால் இதை தவிர்க்க முடியாத சூழல் நிலவி வருகிறது.கட்சி பிரமுகர்களின் பின்னணியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை சேர்ந்த பெரும்பாலோனோர், அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் தரமில்லாமல் மேற்கொள்ளும் பணிகளால், பணி முடிக்கப்பட்ட ஒரு சில ஆண்டுகளிலேயே மீண்டும் அவற்றை புதுப்பிக்கும் சூழல் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி இழப்பு ஏற்படுகிறது.ஆளுங்கட்சி பிரமுகர்களின் கட்டப்பஞ்சாயத்துக்களை தவிர்க்கவும், டெண்டரில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் விதமாகவும் உள்ளாட்சி துறை சார்பில் கட்டுமான பணிகளுக்கு ஆன்-லைன் மூலம் டெண்டர் விட முடிவு செய்யப்பட்டது.மாநகராட்சி பகுதிகளில் 10 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட கட்டுமான பணிகளை மேற்கொள்ள ஆன்-லைன் மூலம் டெண்டர் விட அரசு அனுமதி வழங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன் சேலம் மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிக்கு ஆன்-லைன் மூலம் டெண்டர் விடப்பட்டது. தற்போது 120 பணிக்கு ஆன்-லைன் மூலம் டெண்டர் கோரப்பட்டுள்ளன.அதில் ஒரு சில பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடந்து வருகின்றன. ஆளுங்கட்சி பிரமுகர்களின் குறுக்கீட்டை தவிர்க்க 10 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பணிகள் தொடர்ந்து ஆன்-லைன் மூலம் டெண்டர் விடப்பட உள்ளன. அதன் மூலம் பல்வேறு பகுதிகளில் இருந்து தகுதி வாய்ந்த கட்டுமான நிறுவனங்கள் விண்ணப்பிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி கூறும்போது, ''சேலம் மாநகராட்சி பணிக்கான ஆன்-லைன் டெண்டருக்கு கட்டுமான நிறுவனங்களிடையே வரவேற்பு உள்ளது. குறுகிய காலத்தில் 120 பணிக்கு ஆன்-லைன் மூலம் டெண்ர் கோரப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே கோவை மாநகராட்சிக்கு அடுத்தபடியாக ஆன்-லைன் மூலம் அதிக பணிகள் மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டுள்ளது சேலம் மாநகராட்சியில் தான். தொடர்ந்து பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரப்பட உள்ளன,'' என்றார்.

Last Updated on Tuesday, 13 April 2010 06:53
 


Page 31 of 41