Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

மாநகராட்சியில் புவியியல் மையம் துவக்கம் : தகவல்களை அறிந்து கொள்ள புது வசதி

Print PDF

தினமலர் 08.04.2010

மாநகராட்சியில் புவியியல் மையம் துவக்கம் : தகவல்களை அறிந்து கொள்ள புது வசதி

கோவை: கோவை மாநகராட்சி குறித்த தகவல்களை எளிதாக திரையில் காண 'தொடு திரை புவியியல் மையம்' ஒன்றை, டி.சி.எஸ்., நிறுவனத்துடன் இணைந்து, மாநகராட்சி உருவாக்கி வருகிறது. கோவை மாநகராட்சியில் 72 வார்டுகளில் குடிநீர், சுகாதாரம், பாதாள சாக்கடை வசதிகள் மாநகராட்சி சார்பில் செய்து தரப்பட்டுள்ளது. சொத்துவரி, வர்த்தகவரி, குடிநீர்வரி ஆகியவை வசூலிக்கப்படுகின்றன. பில்லூர் இரண்டாவது குடிநீர் திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பாதாளசாக்கடை, நவீன குப்பை மாற்று நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியின் புவியியல் அமைப்பு, தட்பவெப்பம், மழைபெய்யும் மாதங்கள், மழையளவு, பனி மூட்டத்தின் நிலை போன்ற இயற்கை சூழல்களை, மாநகராட்சி பணியாளர்கள் கணக்கெடுக்கின்றனர். இவை அனைத்தும், புவியியல் மையத்தில் பதிவு செய்யப்படும். கோவை மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களிலும் அனைத்து புள்ளி விரபங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக மாதிரி வார்டுகளான 60, 27, 16, 49 ஆகிய வார்டுகளில் புவியியல் மையத்திற்கான தகவல் சேகரிக்கும் பணி துவங்கியுள்ளது.

சேகரிக்கப்பட்ட தகவல்கள் துறை சார்ந்து தனித்தனியாக இனம் பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளது. இதுவரை 21 வார்டுகளில் கணக்கெடுப்பு பணி முடிந்துள்ளது. மீதமுள்ள 47 வார்டுகளில் பணிகள் நடக்கின்றன.

தகவல்கள் அனைத்தும் சேகரம் செய்யப்பட்டவுடன் கோவை நகரிலுள்ள ஒரு வீடு அல்லது அங்காடிக்கடையில் இருக்கும் வசதிகள் அனைத்தையும் மாநகராட்சி அலுவலகத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம். வீட்டு கட்டட அமைப்பு, முகப்பு தோற்றம், எவ்வளவு அறை, என் னென்ன அறை, வரி செலுத்தப் பட்டுள்ளதா, இல்லையா, எவ்வளவு செலுத்த வேண்டும் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒட்டு மொத்த மாநகராட்சி பகுதிகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். இவையனைத்தும் மாநகராட்சியிலுள்ள தொடுதிரை தகவல் மையத்தில் வைக்கப்படும். தகவல் சேகரம் செய்யப்படும் பணியை தொடர்ந்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் தொடு திரை தகவல் கருவிகள் அமைக்கப்படும். அங்குவரும் பொதுமக்கள் தகவல்களை எளிதாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Last Updated on Thursday, 08 April 2010 06:38
 

கோவை மாநகராட்சியில் 'இ-ஆக்ஷன்' அறிமுகம் : முறைகேடுகளை ஒழிக்க புதிய முறை

Print PDF

தினமலர் 25.03.2010

கோவை மாநகராட்சியில் '-ஆக்ஷன்' அறிமுகம் : முறைகேடுகளை ஒழிக்க புதிய முறை

கோவை: வெளிப்படையான,நேர்மையான ஏலம் நடத்தவும், சிண்டிகேட் முறையை ஒழிக்கவும் கோவை மாநகராட்சியில் '-ஆக்ஷன்' முறை அமலுக்கு வந்தது.கோவை மாநகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்களில் சுங்கம் வசூலிக்கும் உரிமம், கட்டணகழிப்பிடங்களில் கட்டணம் வசூலிக்கும் உரிமம், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலித்தல் போன்றவைக்கு, இதுவரை மூடிமுத்திரையிட்ட டெண்டர்கள் பெறப்பட்டன.

டெண்டரில், குறிப்பிட்டுள்ள அதிகபட்ச தொகை ஏலத்தொகையாக அறிவிக்கப்படும்.இதையடுத்து, நடைமுறை ஏலம் துவங்கும்; கூடுதலாக கேட்போருக்கு கான்ட்ராக்ட் கொடுக்கப்படும்.இதில் சிண்டிகேட் அமைத்தல், டெண்டர் பெட்டியை அலுவலகத்திற்குள் மறைத்து வைத்தல், ஏலத்தில் பங்கேற்க விடாமல் ஆட்களை தடை செய்தல், ஆட்களை கடத்துதல் என பல பிரச்னைகள் எழுந்தன.இப்பிரச்னைகளை சமாளிப்பது பெறும் சவாலாக இருந்தது. சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் தலைதூக்கியது.எனவே, மாநகாரட்சியின் அன்றாட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டதோடு, டெண்டர் பணியும் பாதிப்பிற்குள்ளானது. பல முறை மறு தேதி குறிப்பிட்டு ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. சமீபத்தில், மேற்குமண்டல அலுவலகத்தில் நடந்த ஏலத்தில் பிரச்னை ஏற்பட்டு ஏலம் நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்டது.இப்பிரச்னைக்கு தீர்வு காண மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா இ-ஆக்ஷன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

'
- ஆக்ஷன்' முறையில் ஏலதாரர்கள் '-டெண்டர்' குறிப்பிடவேண்டும். அதிகபட்ச தொகை கோரியவர்களுக்கு உரிமம் கொடுக்கப்படும்.'-டெண்டர்' குறிப்பிடும் போது யாரும் எளிதில் பார்க்க முடியாதபடி மாநகராட்சி நிர்வாகம் புதிய சாப்ட்வேரை இணைத் துள்ளது. ஏலம் நடக்கும் நாளில்,'மல்டிமீடியா' உதவியோடு பெரிய ஸ்கிரீனில், ஏலதாரர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் டெண்டர் திறக்கப்படும். இத்திட்டத்திற்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இத்திட்டத்தை உடனடியாக கோவை மாநகராட்சி அமல் படுத்தியுள்ளது.'-ஆக்ஷன்' (மின்ஏலம்) திட்டத்தை, கோவை மேயர் வெங்கடாசலம் நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:

கோவை மாநகராட்சியின் நான்கு மண்டலங்களில் உள்ள மார்க்கெட், கழிப்பிடம், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தம் ஆகிய 33 குத்தகை இனங்களுக்கான உரிமம் வழங்க இ-ஆக்ஷன் (மின் ஏலம்) அறிமுகம் செய்யப்பட்டு நடத்தப்பட்டது.காலை 11.30 மணி முதல் 1.30 மணி வரை ஆறு இனங்களுக்கான ஏலம் நடந்தது. மதியம் நான்கு இனங்களுக்கான ஏலம் நடந்தது. இன்று காலை 12 இனங்களுக்கும், மதியம் 11 இனங்களுக்கும் ஏலம் நடைபெறும். வெளிப்படையான நேர்மையான முறையில் ஏலம் நடத்தப்படுவது உறுதிப்படுத்தப்படும்.இவ்வாறு மேயர் வெங்கடாசலம் பேசினார்.துணை கமிஷனர் சாந்தா, துணை மேயர் கார்த்திக், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், ஏலதாரர்கள் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 25 March 2010 08:24
 

மாநகராட்சி ஊழியர்களுக்கு கணினி பயிற்சி

Print PDF

தினமலர் 06.03.2010

மாநகராட்சி ஊழியர்களுக்கு கணினி பயிற்சி

சென்னை : மாநகராட்சி அனைத்து துறைகளிலும் கணினிமயமாக்க 150 அலுவலர் களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் அனைத்து பள்ளிகளையும் கணினிமயமாக்க வசதியாக அலுவலர் களுக்கு வேளச்சேரி, எச்.சி.எல்., நிறுவனத்தில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியை துவக்கி வைத்து மேயர் சுப்ரமணியன் பேசியதாவது: மாநகராட்சியில் அனைத்து துறைகளிலும் கணினிமயமாக்க ஊழியர்களுக்கு பயிற்சி அளிக் கப்படுகிறது. ஏற்கனவே அண்ணா மேலாண்மை கழகத்தின் மூலம் ஊழியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப் பட்டது. மாநகராட்சியில் அனைத்து அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு கம்ப்யூட் டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதை கையாள்வது குறித்து, எச்.சி.எல்., நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக் கப்படுகிறது. அலுவலக பணிகள் கணினி மயமாக்குவதற்கு 150 அலுவலர்களுக்கு 60 மணி நேரம் பயிற்சி தரப் படும். ஒரு மாதத்தில் பயிற்சி முடிக்கப்படும். இதற்கு மாநகராட்சி நான்கு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவிடுகிறது. அதுபோல் மாநகராட்சியில் இருக்கக் கூடிய கணினி பழுதடைந்தால் ரிப்பேர் செய்ய, சம்பந்தப் பட்ட நிறுவனத்தினர் வரும் வரை காத் திருக்காமல் மாநகராட்சி ஊழியர்களே ரிப்பேர் செய்யும் வகையில் மாநகராட்சி மின்சாரத் துறையில் அலுவலர்கள் 60 பேருக்கு கணினி ரிப்பேர் செய்யும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு, 120 மணி நேரம் பயிற்சி கொடுக் கப் படும். இரண்டு மாதத்தில் பயிற்சி முடிக்கப் படும். இந்த பயிற்சிக்கு, மாநகராட்சி, மூன்று லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவிடுகிறது. இவ்வாறு மேயர் சுப்ரமணியன் பேசினார்.

நிகழ்ச்சியில், துணை கமிஷனர் பாலாஜி, எதிர்க்கட்சித் தலைவர் சைதை ரவி, எச்.சி.எல்., நிறுவன தலைவர் ஸ்ரீனிவாஸ் சக்கரவர்த்தி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Last Updated on Saturday, 06 March 2010 09:44
 


Page 32 of 41