Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

நாகர்கோவிலில் பஸ் நிறுத்தங்களில் ஒரே மாதிரியான ஸ்டீல் நிழற்குடைகள்

Print PDF
தின மணி             20.02.2013

நாகர்கோவிலில் பஸ் நிறுத்தங்களில் ஒரே மாதிரியான ஸ்டீல் நிழற்குடைகள்


நாகர்கோவில் நகரப் பகுதியை அழகுபடுத்தும் வகையில் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் ஒரே மாதிரியான அமைப்பில் ஸ்டீல் நிழற்குடைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் குறித்து ஆட்சியர் கூறியதாவது:

நாகர்கோவில் நகரின் அனைத்துப் பகுதிகளையும் அழகுபடுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, நகரப் பகுதியில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் உள்ள நிழற்குடைகளை ஒரே மாதிரியான அமைப்பில் ஸ்டீல் நிழற்குடைகளாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் நகராட்சி 52 வார்டு பகுதியில் பேருந்துகள் செல்லும் சாலைகளில் 158 பேருந்து நிறுத்துமிடங்களில், 60 பேருந்து நிறுத்துமிடங்களில் மேற்கூரையுள்ளன.

98 பேருந்து நிறுத்துமிடங்களில் மேற்கூரையில்லாமல் பழுதடைந்த நிலையில் உள்ளன. 158 பேருந்து நிறுத்துமிடங்களையும் ஒரே மாதிரியான வடிவமைப்பில் இருக்கைகள், மேற்கூரைகள், வண்ணங்கள் கொண்ட வகையில் பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிழற்குடைகளை அமைக்கும் பணியை விளம்பர நிறுவனங்கள் மேற்கொண்டு, பராமரிப்பு செய்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரங்கள் ஆண்டு ஒன்றுக்கு நகராட்சியால் நிர்ணயிக்கப்பட்ட விளம்பர கட்டணத்தின் அடிப்படையில் வசூலிக்க அனுமதி வழங்கப்படும். அரசியல், சமுதாயம் மற்றும் மதம் ரீதியான விளம்பரங்கள் செய்யக்கூடாது.

ஆபாசம் மற்றும் கேலி சித்திரங்கள் விளம்பரங்கள் கூடாது. வியாபார நோக்கமுள்ள விளம்பரங்கள் மட்டும் செய்யப்பட வேண்டும். அமைக்கப்படும் பயணிகள் நிழற்குடை பாதுகாப்பாகவும், வெயில், மழைக் காலங்களுக்கு ஏற்றதாகவும் அமைக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாகர்கோவில் நகராட்சி அலுவலர்கள் மேற்கொள்வர் என்றார்.
Last Updated on Thursday, 21 February 2013 12:22
 

"திருவாரூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கு விரைவில் அடிக்கல்'

Print PDF

தின மணி           18.02.2013

"திருவாரூரில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்கு விரைவில் அடிக்கல்"

திருவாரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்றார் நகராட்சித் தலைவர் வே. ரவிச்சந்திரன்.

திருவாரூர் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் வே. ரவிச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

வரதராஜன்: நகராட்சி அலுவலகத்தில் எந்த பணிக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்படவுள்ளனர். எந்த முறையில் அவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்?.

அன்வர் உசேன்: 25-வது வார்டிலுள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

ஜாகீர் உசேன்: இடிந்து விழுந்துள்ள கமலாலயக் குளக்கரையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

துணைத் தலைவர் செந்தில்: துப்புரவுப் பணியாளர்கள் சரியாக வேலை செய்வதில்லை. துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறையெனில் அதை சரி செய்ய வேண்டும்.

தலைவர் ரவிச்சந்திரன்: நகராட்சிப் பணியாளர்கள் தேர்வு குறித்த முறையான அறிவிப்பு, விளம்பரம் செய்யப்பட்டு நியமனம் நடைபெறும். 25-வது வார்டிலுள்ள சாலைகள் நெடுஞ்சாலைத் துறையினரின் கீழ் வருகின்றன. சாலையை சீரமைப்பது குறித்து அவர்களிடம் தெரிவிக்கப்படும்.

விளமல் கல்பாலம் அருகில் ரூ. 6 கோடியில் புதியப் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அரசாணை பிறக் கப்பட்டது.

கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் புதியப் பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்படும். நகரில் தெருவிளக்குகள், சாலைகள் பழுது பார்க்கப்படும் என்றார் அவர்.

Last Updated on Monday, 18 February 2013 07:57
 

போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நெல்லையில் ‘ரிங்ரோடு’ திட்டம் மாநகராட்சி புதிய கமிஷனர் தகவல்

Print PDF
தினகரன்             28.08.2012

போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நெல்லையில் ‘ரிங்ரோடு’ திட்டம் மாநகராட்சி புதிய கமிஷனர் தகவல்
 
நெல்லை, : நெல்லையில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க ரிங் ரோடு திட்டம் நிறைவேற்றப்படும் என்று மாநகராட்சி புதிய கமிஷனர் தெரிவித்தார்.

நெல்லை மாநகராட்சி கமிஷனர் பொறுப்பு வகித்த மோகன் மீண்டும் நகராட்சிகளின் மண்டல இயக் குனராக நியமிக்கப்பட்டார். மாநகராட்சி புதிய கமிஷனராக சீனி அஜ்மல்கான் நேற்று பொறுப்பேற்றார்.ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், முனிசிபல் கமிஷனர் சர்வீஸ் படிப்பு முடித்து, 1992ல் குளச்சல் நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றார்.

பின்னர் குற்றாலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, ஊட்டி ஆகிய நகராட்சிகளில் பணியாற்றிய அவர் மதுரையில் நகராட்சி களின் மண்டல இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தில் முதன்மை தேர்தல் அதிகாரியாகவும் தூத்துக்குடி மாநகராட்சியில் 10 நாட்கள் ஆணையாளராகவும் பணியாற்றினார். பின்னர் வேலூரில் ஒன்றரை ஆண்டுகள் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி தற்போது நெல்லை மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். அவரிடம் ஆணையர் (பொறுப்பு) மோகன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

புதிய ஆணையர் சீனி அஜ்மல்கான் நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லை மாநகராட்சி மற்ற மாநகராட்சிகளோடு போட்டி போடும் வண்ணம் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் நிதி ஆதாரங்களை பெருக்கவும் நடவடிக்கை மேற்கொள்வேன். கொசு ஒழிப்பு, கழிவுநீர் ஓடை சரி செய்தல், குடிநீர் ஆகிய அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும். நெல்லையை வெளிநாடுகளில் உள்ள மாநகராட்சி போல் மாற்ற நடவடிக்கை  எடுக்கப் படும்.

வரி விதிக்காமல் இருக்கும் கட்டிடங்கள், வரிபாக்கி வசூல் செய்தல், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் ஆகியவற்றை  ஆய்வு செய்து மாநகராட்சிக்கு வருமானத்தை பெருக்குவேன். ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்.நெல்லையில் போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற்கு மற்ற துறைகளோடு இணைந்து  ரிங்ரோடு போன்ற பெரிய திட்டங்கள் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
 


Page 9 of 57