Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

ஈரோட்டில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மூன்று இடங்கள் பரிசீலனை

Print PDF

தினமலர்       26.07.2012   

ஈரோட்டில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மூன்று இடங்கள் பரிசீலனை

 ஈரோடு: ஈரோடு நகரில் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் வகையில் புறநகர் பஸ் ஸ்டாண்டு அமைக்க, மூன்று இடங்களை மாநகராட்சி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.இந்தியளவில் நூல், ஜவுளி, மஞ்சள் மார்க்கெட்டுக்கு ஈரோடு புகழ் பெற்றுள்ளது. முக்கிய நகரங்களை இணைக்கும் மையமாகவும் ஈரோடு உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு மட்டும், நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. எப்போதும் கூட்ட நெரிசல் நிலவுகிறது.ஈரோடு நகரில் உள்ள மெயின் ரோடுகள் அனைத்தும், ஏராளமான குறுக்கு ரோடுகள் சந்திக்கின்றன.குறுக்கு ரோடுகளில் இருந்து வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. நெரிசல் ஏற்படும் ரோடுகளை ஒரு வழிப்பாதையாக மாற்ற முடியாத நிலை நிலவுகிறது.டவுன் பஸ்களும், வெளியூர் பஸ்களும் இந்த ரோடுகள் வழியாகவே செல்வதால், அனைத்து இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதில் சிக்கும் மக்கள், ஓரிரு கிலோ மீட்டர் தூரத்தை மணிக்கணக்கில் காத்திருந்து, கடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதிலிருந்து விடுபட ஈரோடு நகரின் மையத்தில் செயல்படும் பஸ் ஸ்டாண்டை டவுன் பஸ் ஸ்டாண்டாக மாற்றவும், புறநகர் செல்லும் பஸ்களுக்காக புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. சோலார் பகுதியில் உள்ள மாநகராட்சியின், 20 ஏக்கர் நிலம், பெரியசேமூர் அல்லது சூரியம்பாளையத்தில் பஸ் ஸ்டாண்டு அமைக்க ஆய்வு நடக்கிறது.சூரியம்பாளையம் அருகே ஆளும்கட்சியினர் நிறைய இடங்களை வாங்கி போட்டுள்ளதால், அங்குதான் பஸ் ஸ்டாண்டை இடம் மாற்றுவர் என்ற தகவல் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்தால் நிலங்கள் தாறுமாறாக விலையேறும். பெரியளவில் லாபம் பார்க்கலாம் என்ற அடிப்படையில் சிலர் காய் நகர்த்தி வருகின்றனர்.

 

பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் நவீனமயமாகிறது :மாற்றுத்திறனாளிகளுக்கும் பல்வேறு வசதி

Print PDF

தினமலர்                         25.07.2012

பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் நவீனமயமாகிறது :மாற்றுத்திறனாளிகளுக்கும் பல்வேறு வசதி

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் 42.50 லட்சம் ரூபாய் செலவில் முழுமையாக புனரமைக்கப்படுகிறது. இதில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.

பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான பழைய பஸ் ஸ்டாண்ட் வடக்கு திசையிலும், புதிய பஸ் ஸ்டாண்ட் தெற்கு திசையிலும் செயல்பட்டு வருகிறது. பழைய பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.கட்டணக்கழிப்பிடம், இலவசக்கழிப்பிடம், கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் பாதை ஆகியவை சிதைத்து அப்படியே வெட்ட வெளியில் கழிவுநீர் வெளியேறி வந்தது. துர்நாற்றம் தாங்க முடியாமல் பஸ் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

அதே போல் பஸ்கள் நிறுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட டிராக்குகள் மற்றும் "பே' ஆகியவற்றில் பஸ்ஸை நிறுத்த முடியாமல் டிரைவர்கள் அவதிப்பட்டனர். அதோடு பஸ் "பே' யில் பஸ்ø\ நிறுத்தாமல் டிராக்கில் பஸ்ø\ வரிசையாக நிறுத்தாமல் ஏடாகூடமாக நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பஸ் ஸ்டாண்டை விட்டு பஸ் வெளியேறுவதில் சிரமம் ஏற்படுகிறது.

இப்பிரச்னைகளை சரிசெய்யவேண்டும் என்று சொல்லி நுகர்வோர் அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் பலமுறை புகார் கடிதத்தையும், கோரிக்கை மனுக்களையும் கொடுத்தனர். அதன் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறையின் அனுமதியை பெற்ற நகராட்சி நிர்வாகம் அதற்கான தீர்மானங்களை நிறைவேற்றி பணிகளை வேகமாக துவக்கியுள்ளது.தற்போது பஸ் ஸ்டாண்டை புனரமைக்கும் பணியை வேகமாக துவக்கியுள்ளது நகராட்சி நிர்வாகம். பஸ் ஸ்டாண்ட் வடிவமைப்பை மாற்றி முழுமையாக மாற்றி அமைக்கப்படுகிறது. இதற்காக பஸ்ஸ்டாண்டிலுள்ள ஒவ்வொரு டிராக்கின் மேல்தளத்தின் உயரத்தை இரண்டரை அடிக்கு உயர்த்தி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பழைய மேற்கூரைகள் அனைத்தும் அப்புறப்படுத்திவிட்டு ரூ. 6 லட்சம் செலவில் "கேல்வலன்' என்றழைக்கப்படும் ஷீட்டுகள் மேல்தளத்துக்கு போடப்படுகிறது. இவை மழை, வெயில், பனி, காற்று அனைத்தையும் தாங்கி நிற்கும் என்று சொல்கின்றனர் நகராட்சி அதிகாரிகள்.பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலுள்ள கட்டண முறை கழிப்பிடமும், இலவச சிறுநீர் கழிப்பிடமும் உள்ளது. ரூ.17.50 லட்சத்தில் இது நவீனப்படுத்தப்படுகிறது. இதன் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5 லட்சத்தில் நவீன கழிப்பிடம் அமைக்கப்படுகிறது.

பஸ் ஸ்டாண்ட் முகப்பு அழகுற அமைப்பதற்காக வடிவமைப்பு ( எலிவேசன்) பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ரூ. 24 லட்சம் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பழைய பஸ் ஸ்டாண்டிலுள்ள நான்கு டிராக்குகள் முழுமையாக செப்பனிடப்படுகிறது. முதற்கட்டமாக கோவை டிராக்கில் பணிகள் துவங்கியுள்ளது. இதற்காக மேற்கூரைகள் அப்புறப்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தொடர்ந்து பாலக்காடு பஸ்கள் முன்பு நிறுத்தம் செய்யப்பட்டு வந்த டிராக், பழநி டிராக், திருப்பூர் டிராக் ஆகியவை வரிசையாக மாற்றி அமைக்கப்படுகின்றன.இது குறித்து நகராட்சி உதவி பொறியாளர் மேனகா கூறுகையில்,"" பஸ் ஸ்டாண்ட் புனரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பணிகள் அடுத்த மாதம் 31 ம்தேதிக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம். ஆனால் அதற்கு முன்பே பணிகளை இறுதி செய்துவிடுவோம்,'' என்றார்.

 

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொகுதி நிதியில் வில்லிவாக்கம் பஸ் நிலையம் சீரமைப்பு ஜனவரியில் முடியும்

Print PDF

தினகரன்      30.12.2010

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொகுதி நிதியில் வில்லிவாக்கம் பஸ் நிலையம் சீரமைப்பு ஜனவரியில் முடியும்

சென்னை, டிச.30:

வில்லிவாக்கம் பஸ் நிலையம் சீரமைப்பு பணி அடுத்த மாதம் முடிவடையும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

வில்லிவாக்கம் பஸ் நிலையம் 1.4 ஏக்கரில் அமைந்துள்ளது. அங்கிருந்து தினமும் 55 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அடையாறு, வேளச்சேரி, பட்டினப்பாக்கம், பிராட்வே, வள்ளலார் நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் மொத்தம் 720 டிரிப் இயக்கப்படுகிறது. சுமார் 50 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த பஸ் நிலையத்தின் இரு பக்கமும் உள்ள தார் சாலைகள் உயர்த்தப்பட்டதால் மழைக்காலத்தில் பஸ் நிலையத்துக்குள் தண்ணீர் தேங்கி விடுகிறது.

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், இந்த பஸ் நிலையத்தை மேம்படுத்த தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 60 லட்சம் ஒதுக்கினார்.

இதன் மூலம் தரைதளத்தை 2 அடி உயர்த்துவது, நேரக்காப்பாளர் அறை மற்றும் கழிவறையை சீரமைப்பது, மின்சார வசதி மேம்படுத்துதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று காலை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், வரும் ஜனவரி இறுதிக்குள் இந்த பணிகள் நிறைவடையும் என்றார்.

அவருடன் புரசைவாக்கம் வி.எஸ்.பாபு எம்எல்ஏ, 4வது மண்டல குழு தலைவர் சீனிவாசன், மண்டல அலுவலர் ராஜரத்தினம், மாநகர போக்குவரத்து கழக சிறப்பு அலுவலர் மணி ஆகியோர் வந்தனர்.

 


Page 13 of 57