Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

புறவழிச்சாலை முழுமையானால் நகரில் வாகன நெரிசல் குறையும் நகரமைப்பு அலுவலர் தகவல்

Print PDF

தினகரன்                   29.11.2010

புறவழிச்சாலை முழுமையானால் நகரில் வாகன நெரிசல் குறையும் நகரமைப்பு அலுவலர் தகவல்

பொள்ளாச்சி. நவ 29: பொள்ளாச்சி நகரத்தை ஒட்டிய புறவழிச்சாலை திட்டம் முழுமையடைந்தால் நகரில் வாகன போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறை யும் என்று நகரமைப்பு அலு வலர் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப வாகன பயன்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக நகரில் வாகன போக்குவரத்து அதிகரித்து பெரும்பாலான ரோடுகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது கோட்டூர் ரோடு ரயில்வே மேம்பாலம் பணி நடைபெற்று வருவதால் வாகனங்கள் மாற்றுபாதையில் திருப்பிவிடப்பட்டு போக்குவரத்து மேலும் ஸ்தம்பித்து வருகிறது. இனிவரும் காலங்களிலும் வாகனங் களின் எண்ணி க்கை அதிகரித்து மேலும் போக்குவரத்து ஸ்தம்பிக் கும் சூழல் ஏற்பட்டுள்ளது. புறவழிச்சாலை திட்டத்தை முழுமைப்படுத்தினால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று நகரமைப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நகராட்சியின் நகரமைப்பு அலுவலர் வரதராஜன் கூறியதாவது:

நகரில் மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரோடுகளின் அகலம் போதுமானதாக இல்லை. ஆகவே இப்பிரச்னைக்கு தீர்வு காண பல ஆண்டுகளுக்கு முன்பு புறவழிச்சாலை திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதில் கோவை ரோட்டை பாலக்காடு ரோட்டுடன் இணைத்தல், பல்லடம் ரோட்டை உடுமலை ரோட்டுடன் இணைத்தல் ஆகிய இரு பணிகள் மட்டும் நகராட்சி வசம் உள்ளது.

கோவை ரோட்டில் மகாலிங்கபுரம் ஆர்ச் எதிரே இருந்து 80 அடி அகல சாலை ஒன்று சுமார் 1.2 கி.மீட்டர் தூரம் சென்று வடுகபாளையம் பிரிவு வழியாக பாலக்காடு ரோட்டை அடையும். இந்த இடைப்பட்ட தூரத்தில் சுமார் 6.52 ஏக்கர் நிலம் தனியார் பட்டா நிலங்களுக்குள் வருகிறது. இவை முழுக்க முழுக்க ரோடு பயன்பாட்டுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளதால் தனியார் இதில் கட்டடங்களை கட்டுதல் உள்ளி ட்ட எதற்கும் பயன்படுத்த முடியாது. தற்போது மேற்படி இடத்தில் 121 மீட்டர் மட்டும் நகராட்சி வசம் உள்ளது. மீதமுள்ள 1.08 கி.மீட்டர் தூர இடத்தினை தனியார்கள் நகராட்சிக்கு ஒப்படைக்க தாங்களாக முன்வர வேண்டும்.

அதேபோல் பல்லடம் ரோட்டில் இருந்து உடுமலை ரோட்டை அடைய .75 கி.மீட்டர் தூரத்தில் சிலர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதில் நகராட்சிக்கு சாதகமான தீர்ப்பு வரும்பட்சத்தில் மேற்படி இடத்தை கையகப்படுத்தி ரோடு போடப்படும். கோவை ரோட்டையும் பாலக்காடு ரோட்டையும் இணைக்கும் திட்டத்திற்கு ரூ. ஒரு கோடியே 25 லட்சத்தை வழங்க அரசு தயாராக உள்ளது. தனியார்கள் முன்வந்து இடத்தை ஒப்படைத்தால் மேற்படி ரோடு வழியாக கனரக வாகனங்கள் திருப்பி விடப்பட்டு நகருக்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை வெகுவாகக் குறைக்கலாம்.

மேலும் பாலக்காடு ரோட்டில் இருந்து திருச்சூர் ரோட்டையும், திருச்சூர் ரோட்டில் இருந்து வால்பாறை ரோடு வழியாக உடுமலை ரோட்டையும் இணைக்கும் பணிகள் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளின் வசம் உள்ளது. இவ்வாறு உள்ளாட்சி அமைப்புகள் முனைப்புடன் செயல்பட்டு புறவழிச்சாலை திட்டத்தை முழுமைப்படுத்தினால் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

அண்ணா பஸ்நிலைய பணிகள் 4 மாதத்தில் முடிக்க நடவடிக்கை நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினகரன்               26.11.2010

அண்ணா பஸ்நிலைய பணிகள் 4 மாதத்தில் முடிக்க நடவடிக்கை நகராட்சி தலைவர் தகவல்

நாகர்கோவில், நவ.26: நாகர்கோவில் அண்ணா பஸ் நிலைய சீரமைப்பு பணி ரூ1.29 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இதனால் வடசேரி பஸ்நிலையம் அருகே தற்காலிக பஸ்நிலையம் அமைத்து பஸ்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காத வகையில் அண்ணா பஸ் நிலையம் மேம்பாடு செய்யப்பட உள்ளது. காங்கிரீட் தளம் உறுதியாக இருக்கும் வகையில் தரைதளத்திற்கு கீழ் உள்ள மண் பகுதியை உறுதிப்படுத்தும் பணிகள் முதலில் நடந்து வருகின்றன.

இப்பணிகளை நாகர்கோவில் நகராட்சிதலைவர் அசோகன்சாலமன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அண்ணா பஸ் நிலைய தளத்தில் துளைகள் போடப்பட்டு அவற்றில் சுண்ணாம்பு கரைசல் ஊற்றும் பணி துவக்கப்பட்டுள்ளது. 1 மீட்டர் ஆழம் வீதம் 9 ஆயிரம் துளைகள் போடப்படுகிறது. அவற்றில் சுண்ணாம்பு கரைசல் ஊற்றப்படுகிறது. இதன் மூலம் அடித்தளத்தின் கீழ் உள்ள மண் உறுதிப்படுத்தப்படும். இதனை தொடர்ந்து காங் கிரீட் பணிகள் துவங்கும். 2 கட்ட காங்கிரீட் போடப்பட உள்ளது. முழுக்க முழுக்க சிமென்ட் காங்கிரீட் தளம் அமைக்கப்படும். இதனால் வரும் காலங்களில் தார் அமைக்க வேண்டிய தேவை எழாது. இரவு பகலாக பணிகளை செய்து 4 மாதத்திற்குள் சீரமைப்பு பணி களை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நகராட்சி துணை தலை வர் சைமன்ராஜ், பொறியாளர்கள் தாமஸ், சுரேஷ், கவுன்சிலர் ஐயப்பன், முன்னாள் கவுன்சிலர் முகம்மது ரபீக் ஆகியோர் உடனிருந்தனர்.

 

சேலம் மாநகராட்சி வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ்., பொருத்த ஏற்பாடு

Print PDF

தினமலர்           25.11.2010

சேலம் மாநகராட்சி வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ்., பொருத்த ஏற்பாடு

சேலம்: சேலம் மாநகராட்சியில் ஜி.பி.ஆர்.எஸ்., நவீன தொழில்நுட்பத்தின் மூலம் வாகனங்கள் செல்லும் தூரம் உள்ளிட்ட விவரங்களை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில் டிராக்டர் 46, பென்சன் லாரி இரண்டு, டிப்பர் லாரி 1, மினி லாரி ஐந்து, டெம்பர் பிளேஷன் ஆறு, தண்ணீர் லாரி ஆறு, கார் மற்றும் ஜீப் 17, வேன் இரண்டு, ஜே.சி.பி., இரண்டு, டோசர் நான்கு, சலேஜ் டேங்கர் நான்கு, ஃபாகிங் வண்டி மூன்று, ஸ்வராஜ் மஸ்தா 11, லாரி ஐந்து உள்பட 112 வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

மாநகராட்சியின் 21 வார்டு துப்புரவு பணி ரமணாரெட்டி என்ற தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 40 க்கும் மேற்பட்ட வாகனங்களில் குப்பைகளை அள்ளி வருகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்களை தவிர கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தனியார் டிராக்டர்கள் வாடகைக்கு எடுக்கப்படுகிறது.
மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்களுக்கு அடிக்கப்படும் பெட்ரோல், டீஸல் உள்ளிட்ட விவரங்கள் "லாக்' புத்தகத்தில் முறையாக பதிவு செய்யப்படும். தவிர, குப்பை அள்ளும் வாகனங்கள், டிராக்டர்கள் ஆகியவை சென்ற தூரம் குறித்த விவரமும் பதிவு செய்யப்படும்.சேலம் மாநகராட்சியில் குறிப்பிட்ட நடை(டிரிப்) மட்டும் குப்பைகளை அள்ளிவிட்டு, கூடுதல் நடை ஓட்டியதாக பல டிரைவர்கள் கணக்கு காட்டி வருகின்றனர். சில ஆண்டுக்கு முன், குடிநீர் டிராக்டர்களை கூடுதல் நடை ஓட்டியதாக பொய் கணக்கு காட்டியது பற்றி மாநகராட்சி தணிக்கை துறையில் சுட்டிக்காட்டப்பட்டது. தினமும் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் எங்கு செல்கிறது, அதன் பணி பயன்பாடு என்ன என்பது குறித்த விவரங்களை அறிய முடியாத சூழல் நிலவுகிறது. அதனால், மாநகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. பல டிரைவர்கள் மெத்தனமாக பணியாற்றும் நிலையும் உள்ளது.

மாநகராட்சி வாகனங்களின் அன்றாட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கண்காணிக்க ஜி.பி.ஆர்.எஸ்.,(ஜெனரல் பாக்கெட் ரேடியோ சர்வீஸ்) என்ற நவீன தொழில்நுட்பத்தை புகுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கருவியை வாகனங்களில் பொறுத்துவதன் மூலம் வாகனங்கள் எந்தெந்த பகுதிக்கு செல்கிறது என்ற விவரத்தை 100 சதவீதம் முழுமையாக கண்காணிக்க முடியும்.வாகனங்களுக்கு அடிக்கப்படும் பெட்ரோல், டீஸல் விவரங்கள், வாகனத்தை ஓட்டி செல்லும் டிரைவர், வாகனம் ஓட்டப்பட்ட நடை விவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் தேவையில்லாத எரிபொருள் செலவு குறைவதுடன், பணிக்காலத்தில் டிரைவர்கள் ஏமாற்றுவதும் தவிர்க்கப்படும். ஜி.பி.ஆர்.எஸ்., கருவியை பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர். விரைவில் இத்திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.

 


Page 16 of 57