தினகரன் 23.09.2010
பயணிகள் நிழற்குடை திறப்பு
ஏரல், செப் 23: தூத்துக்குடி எம்பி ஜெயதுரை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பண்டாரவிளையில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்க ரூ.2 லட்சம் ஒதுக்கியிருந்தார். இந்த நிதியில் பஸ் நிறுத்தம் அமைக்க பெருங்குளம் பேரூராட்சி தலைவர் சிவகுமார் தனக்கு சொந்தமான இடத்தை இலவசமாக வழங்கியிருந்தார். இந்த இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு பேரூராட்சி தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். ஜெயதுரை எம்பி பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். ஏரல் பேரூராட்சி தலைவர் கண்ணன், கவுன்சிலர் மணிவண்ணன், பெருங்குளம் திமுக இளைஞரணியை சேர்ந்த செந்தில், பண்டாரவிளை திமுக கிளை செயலாளர் சொர்ணபாண்டிமற்றும் பலர் கலந்து கொண்டனர். பண்டாரவிளையில் புதிய பயணிகள் நிழற்குடையை ஜெயதுரை எம்பி திறந்து வைத்தார்.