Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சென்னையில் 45 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி

Print PDF

தி இந்து     22.05.2018

சென்னையில் 45 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி


தொலைநோக்குத் திட்டம் 2023-ன்படி செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் குறித்த கருத்தரங்கை சென்னையில் நேற்று தொடங்கி வைத்து பயிற்சிக் கையேட்டை வெளியிடுகிறார் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

தற்போது திட்டமிடப்பட்டுள்ள 550 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடி நீராக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், அடுத்த 45 ஆண்டுகளுக்கு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, அரசின் தொலைநோக்கு திட்டம் 2023-ன்படி செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று கருத்தரங்கைத் தொடங்கி வைத்து பேசியதா வது:

2011-ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் குடிநீர் தேவை 1921 டிஎம்சி ஆக இருந்தது. இது 2050-ம் ஆண்டில் 2,039 டிஎம்சி ஆக உயரக்கூடும். அதை சமாளிக்க, அரசின் ‘தொலைநோக்கு திட்டம் -2023’ ஆவணப்படி, தமிழகத்தில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல் படுத்த ரூ.21 ஆயிரம் கோடியில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

நீரின் தேவை மற்றும் விநியோகத்தில் உள்ள பெரிய இடைவெளியை குறைப்பதற்கு ஏரி, குளங்களில் இதுவரை பயன்படுத்தப் படாமல் உள்ள நீரைச் சுத்தி கரித்து பயன்படுத்துவது, கடல் நீரைக் குடிநீராக மாற்றுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மேலும் சென்னையில் உள்ள 206 நீர்நிலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய இடங்களில் தலா 100 மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதைச் சமாளிக்க நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர், பேரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் நிறைவடைந்த பின், அடுத்த 45 ஆண்டுகளுக்கு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ், தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவன முதன்மை செயல் அலுவலர் அசோக் நடராஜன், நகர்ப்புற மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர் சந்திரகாந்த் காம்ப்ளே, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவை நிறுவன மேலாண் இயக்குநர் காகர்லா உஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

மழைநீர் சேமிப்பால் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும் வழிகாட்டுகிறார் ஓய்வுபெற்ற அதிகாரி

Print PDF

தி இந்து           15.05.2017

மழைநீர் சேமிப்பால் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும் வழிகாட்டுகிறார் ஓய்வுபெற்ற அதிகாரி

மாடியில் விழும் மழைநீரை வடிகட்டித் தூய்மைப்படுத்தி சேகரிக்க அமைக்கப்பட்டுள்ள தொட்டி. (அடுத்த படம்) குடி நீருக்கு சேகரித்தடுபோக எஞ்சிய மழை நீரை நேரடியாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் செலுத்தும் அமைப்பை காட்டுகிறார் குணற்றுக்குள் செலுத்தும் அமைப்பை காட்டுகிறார் குனசீலன். | படங்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மாடியில் விழும் மழைநீரை வடிகட்டித் தூய்மைப்படுத்தி சேகரிக்க அமைக்கப்பட்டுள்ள தொட்டி. (அடுத்த படம்) குடி நீருக்கு சேகரித்தடுபோக எஞ்சிய மழை நீரை நேரடியாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் செலுத்தும் அமைப்பை காட்டுகிறார் குணற்றுக்குள் செலுத்தும் அமைப்பை காட்டுகிறார் குனசீலன். | படங்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் தனது வீட்டில் மழைநீரைச் சேமித்து குடிநீராக பயன்படுத்தி வருகிறார்.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறையின்படி, ஒரு லிட்டர் குடிநீரில் 1.5 மில்லி கிராம் வரையில்தான் ப்ளோரைடு இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். மழைநீர் போன்ற தரமான நீரைக் குடித்தால் நோய் இருந்தால்கூட விலகிவிடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வறட்சியிலும் அரிதான மழைநீரைச் சேகரித்து சுத்திகரிப்பு செய்து, சமையலுக்கும், குடிக்கவும் பயன்படுத்தி வருகிறார் மதுரை ஆலங்குளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி குணசீலன். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஆலங்குளம் பகுதியில் நிலத்தடிநீர்மட்டம் குறைந்தது. மாநகராட்சி சார்பில் குடிநீர் ஏற்பாடு செய்யாத நிலையில், அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டியிருந் தது. இந்நிலையில், திருவாரூரைச் சேர்ந்த மழைநீர் சேகரிப்பு பொறியாளர் வரதராஜன் என்பவர் மூலம் மழைநீரைச் சேகரித்து குடிநீராக பயன்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தினோம்.

வறட்சியிலும் அரிதாக பெய்யும்மழைநீரைச் சேகரிக்க கடந்த ஆண்டு நவம்பரில் ரூ.60 ஆயிரம் செலவில் இத்திட்டத்தை நிறைவேற்றினோம். இதனால் குடிநீர் தட்டுப்பாடு இல்லை. தேவைக்கு ஏற்ப சேமித்த பின் எஞ்சிய நீரை ஆழ்துளைக் கிணறுக்கு அனுப்பி நிலத்தடி நீரைத் தக்க வைக்கிறோம். 500 சதுரஅடி மாடியில் விழும் மழைநீரைச் சுத்திகரிக்க மாடியில் ஒரு இயந்திரம் பொருத்தி உள்ளோம். இதற்காக, மாடியில் வெள்ளை சிமென்ட் பூசி சுத்தமாக் கினோம். சுத்திகரிப்பு தொட்டியில் 20 கிலோ சுத்தமான கரித்தூள், சிப்ஸ் கற்களை 4 அங்குலம் கனத்தில் பரப்ப வேண்டும். அதன்மேல் சிறுமணல் பரப்பி, வலைபோல புது வேட்டியை பொருத்த வேண்டும். மழை பெய்யும்போது மாடியில் சேகரமாகும் நீர் குழாய் வழியாக சுத்திகரிப்பு தொட்டிக்கு சென்று தூய்மைப்படுத்தப்படுகிறது. அதில்

இருந்து இணைக்கப்பட்ட குழாய்மூலம் வீட்டில் சமையல் அறையின் மேல் பொருத்தப்பட்ட 1000 லிட்டர்பைபர் டேங்கில் சேகரிக்கப்படு கிறது. அதில் இருந்து ஒரு குழாய்

வழியாக தண்ணீரைப் பிடித்துக் கொள்ளலாம். டேங்கின் உள்ளே தூசி புகாதவாறு வடிவமைத்தல் அவசியம். சமையலறை டேங்க் நிரம்பிய பின், எஞ்சிய சுத்திகரித்த நீரைத் தரைத்தளத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டி வழியாக ஆழ்துளைக் கிணறு குழாய்க்குள் அனுப்பும் வகையில் வடிவமைத்துள்ளோம்.

எங்கள் வீட்டில் தரைத்தளத் திலும், மாடியிலும் தலா 1000 லிட்டர் டேங்க் வைத்துள்ளோம். சமீபத்தில் பெய்த மழையால் 2 டேங்குகளும் நிரம்பின. இந்த நீரைத்தான் குடிக்க பயன்படுத்துகிறோம். ஒரு வீட்டில் இருவருக்கு தினமும் சமைக்க, குடிக்க தலா 20 முதல் 25 லிட்டர் தண்ணீர் போதும். சராசரி மழையை பயன்படுத்தி தேவையான அளவு தண்ணீரைச் சேகரிக்கலாம். குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. மழைநீரைக் குடிநீராக்குவது பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. ஒவ்வொரு வீட்டிலும், தேவைக்கேற்ப மழை நீரைச் சேகரிக்கலாம்.

இயற்கையாக பெய்யும் மழைநீரை வீணாக்காமல் குடிக்கவும்,சமைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டிடத்துக்கு அருகில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைப்பதைவிட, ஆழ்துளைக் கிணறுக்குள் நேரடியாக மழை

நீரைச் செலுத்துவதால் நிலத்தடி நீர் மட்டமும் அதிகரிக்கிறது. இத்திட்டத்தில் நீர்மூழ்கி மோட்டாருக்கு பதில் கம்ப்ரசர் மின்மோட் டாரை பயன் படுத்தலாம். தேவைக் கேற்ப குறைந்த செலவிலும் அமைக்கலாம்.

புதிதாக வீடு கட்டும்போதே இது போன்ற அமைப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும். மழைநீரைக் குடிநீராக்கும் திட்டம் பற்றி கட்டிடப் பொறியியல் மாணவர்களுக்கு ஒரு பாடமாக வைக்க வேண்டும். மக்கள் இயற்கையை பயன்படுத்த பழக வேண்டும். மழைநீரைக் குடிநீராக சேகரிக்க விரும்புவோருக்கு ஆலோசனை தந்து அமைத்துத் தர ஏற்பாடு செய்ய தயார் என்று கூறினார்.

 

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: அமைச்சர் வேலுமணி

Print PDF

தி இந்து        27.04.2017

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: அமைச்சர் வேலுமணி

தமிழகத்தில் கடந்த 142 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளதாகவும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் இன்று சென்னை மாநகராட்சி வளாக கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேசி உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பிவேலுமணி

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளது, இருப்பினும் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.

சென்னையை பொறுத்தவரை கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஏரி தண்ணீரை முறைப்படுத்தும் திட்டம் போன்றவற்றின் மூலம் குடிநீர் தட்டுப்பாடு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வேலுமணி கூறினார்.

சென்னையில் வடசென்ன, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் என பல்வேறு பகுதிகளில் நேற்று மின்வெட்டு ஏற்பட்டது. இது தொடர்பான கேள்விக்கு, "தமிழகத்தில் மின்வெட்டு என்ற ஒன்று ஜெயலலிதா ஆட்சிக்குவந்த பின்னர் இல்லை. நேற்று ஏற்பட்ட மின்தடை சீர்செய்யப்பட்டுவிட்டது" என்றார்.

 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 390