Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

மதுரை-தூத்துக்குடி தொழில் வழித்தடம்: சென்னை, கோவை குடிநீர் திட்டங்களுக்கு ஒப்புதல் - முதல்வர் தலைமையிலான தமிழக கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய கூட்டத்தில் முடிவு

Print PDF

 தி இந்து        24.09.2014

மதுரை-தூத்துக்குடி தொழில் வழித்தடம்: சென்னை, கோவை குடிநீர் திட்டங்களுக்கு ஒப்புதல் - முதல்வர் தலைமையிலான தமிழக கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய கூட்டத்தில் முடிவு 
 
தமிழகத்தில் கோவை, சென்னை நகரங்களுக்கான குடிநீர்த் திட்டங்கள், தென் மாவட்டங்களுக்கான தொழில் வழித்தடம் உள்ளிட்ட பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத் தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேற்று அமைச் சரவைக் கூட்டம் நடைபெற்ற பிறகு, தமிழக கட்டமைப்பு மேம்பாட்டு வாரியக் கூட்டம் நடந்தது. அதில் பல ஆயிரம் கோடியில் உருவாக் கப்படும் திட்டங்களுக்கு அதிகாரப் பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டது. அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகள் பற்றிய விவரங்கள் வருமாறு:

தொலைநோக்குத் திட்டம் 2023-ன் 2-வது பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 217 கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றம் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில் 173 திட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் வெவ்வேறு கட்டங்களில் இருப்பது பற்றியும், 64 திட்டங்களுக்குப் பணிகள் தொடங்கப்பட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதுபோல், கோவை நகரில் 1.5 லட்சம் வீடுகளுக்கு ரூ.556.57 கோடியில் 24 மணி நேரமும் குடிநீர் சப்ளை செய்வதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட் டம் கட்டி-ஒப்படைக்கும் முறையில் செயல்படுத்தப்படும்.

சென்னை அருகில் பேரூரில் ரூ.4,070 கோடியிலும், நெம்மேலி யில் ரூ.1,371 கோடியிலும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங் களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து நிதி கோர முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை-தூத்துக்குடி தொழில் வழித்தடத்துக்கான திட்ட வடிவ மைப்புக்கும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டம் ரூ.1,83,819 கோடியில் செயல்படுத் தப்படும்.

தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ல் உருவாக்கப் பட்டுள்ள திட்டங்களைச் செயல் படுத்த ரூ.15 லட்சம் கோடி தேவைப்படுகிறது. அதற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங் கள், தனியார் நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படக்கூடிய தமிழ்நாடு தொழில் நிதி மேலாண்மை நிறுவனத்தை அமைப்பதற்கும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், தொலைநோக்குத் திட்டம் 2023-ன் 3-வது தொகுதிக் கான வரைவு அறிக்கைக்கும் ஒப்புதல் தரப்பட்டது.

தமிழ்நாடு அடிப்படை வசதிகள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கவும், வரும் நிதியாண்டுக்கு திட்டங்களை வடிவமைப்பதற்காக ரூ.200 கோடி தரவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நிதி, மின்சாரம், உள்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, தொழில், நெடுஞ்சாலை, போக்குவரத்து, ஊரகத் தொழில்கள், சுற்றுலா, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் துறைகளின் செயலாளர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செய லாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். மின்கட்டணம் உயர்ந்தாலும் மக்களுக்கு மானியம் வழங்கி கட்டண உயர்வைத் தடுப்பது பற்றியும், கிரானைட் ஊழல் தொடர்பாக சகாயம் தலைமையில் நீதிமன்ற விசாரணைக்கு உத்தர விடப்பட்டிருப்பது பற்றியும், மேலும் சில முக்கிய பிரச்சினைகள் பற்றியும் அப்போது விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

Last Updated on Wednesday, 24 September 2014 10:41
 

மாநகராட்சியில் குடிநீர் இணைப்புக்கு ஆன்லைனில் 3,000 விண்ணப்பங்கள்

Print PDF

தினமணி         26.08.2014 

மாநகராட்சியில் குடிநீர் இணைப்புக்கு ஆன்லைனில் 3,000 விண்ணப்பங்கள் 

கோவை மாநகராட்சியில் குடிநீர் இணைப்புக்கு ஆன்லைனில் முதல் நாளில் சுமார் 3,000 விண்ணப்பங்கள் திங்கள்கிழமை பெறப்பட்டன.

கோவை மாநகராட்சிப் பகுதியில் கடந்த ஜனவரி முதல் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை. ஜனவரிக்கு மேல் வறட்சிக் காலம் என்பதாலும், இருக்கும் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததாலும், புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில், கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி, பில்லூர் அணைகள் நிரம்பியதால், புதிய குடிநீர் இணைப்புகள் தர மாநகராட்சி நிர்வாகம் தீர்மானித்தது. இதையடுத்து, ஆன்லைனில் மட்டும் விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் சில பிரச்னைகள் இருந்ததால், ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காகத் தனியாக மென்பொருள் உருவாக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு நிலையிலும் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி செல்லும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டிருந்தது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, எந்தக் கட்டடத்துக்கு குடிநீர் இணைப்புத் தேவையோ அந்தக் கட்டடத்தின் வரிவிதிப்பு எண், தொலைபேசி அல்லது அலைபேசி எண், இமெயில் ஐடி, கட்ட வேண்டிய தொகை, செலுத்த வேண்டிய வரி ஆகியவை தொடர்பாக விண்ணப்பதாரருக்கு தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். இது தவிர, விண்ணப்பதாரருக்கு தபால் மூலமாகவும் தகவல் அளிக்கப்படும். 30 நாள்களுக்குள் பணி உத்தரவு வழங்கப்பட உள்ளதாகவும் மாநகராட்சி ஆணையாளர் க.லதா தெரிவித்தார்.

குடிநீர் இணைப்பு வழங்குவதில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிப்பதற்காகவே இம்முறை கையாளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குடிநீர் இணைப்பு வழங்க திங்கள்கிழமை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டது. முதல் நாளான திங்கள்கிழமை சுமார் 3000 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Last Updated on Tuesday, 26 August 2014 09:47
 

தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.11½ கோடி செலவில் பணிகள் கலெக்டர் ம.ரவிகுமார் தகவல்

Print PDF

தினத்தந்தி              18.02.2014

தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.11½ கோடி செலவில் பணிகள் கலெக்டர் ம.ரவிகுமார் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.11 கோடியே 63 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்ற மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:–

குடிநீர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிக்கும் வகையில் 19 நகர பஞ்சாயத்துகளிலும் கைப்பம்பு, நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் உள்ளிட்ட 127 பணிகள் ரூ.3 கோடியே 22 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. கிராம பஞ்சாயத்துகளில் 934 பணிகள் ரூ.8 கோடியே 41 லட்சம் செலவில் செய்யப்பட உள்ளது.

இது தவிர ரூ.5 கோடியே 41 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதே போன்று நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மாவட்டத்தில் உள்ள 21 கூட்டு குடிநீர் திட்டங்களில் 100 சதவீதம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சாலைப்பணிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் குறுக்குச்சாலை முதல் கோட்டூர் வரை 4.8 கிலோ மீட்டர் தூரத்துக்கும், ரூ.54 லட்சத்து 60 ஆயிரம் செலவில் நமச்சிவாயபுரம் முதல் அருணாசலபுரம் வரை 2 கிலோ மீட்டர் தூரமும் சாலை அமைக்கப்பட உள்ளது. அதே போன்று 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தடுப்பணை உள்ளிட்ட 225 உறுதிபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் இலவச வேட்டி, சேலை 60 சதவீதம் பேருக்கு மட்டுமே வந்து உள்ளது. அதனை வினியோகம் செய்து வருகிறோம். பஸ்நிலையத்தில் சுற்றித்திரியும் சிறு குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் கூறினார்.

 


Page 5 of 390