Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

சென்னை குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய புறநகர் ஏரிகளின் நீரை பயன்படுத்த ஆய்வு: செம்பரம்பாக்கத்துக்கு கொண்டு செல்ல திட்டம்

Print PDF
தி  இந்து
 
சென்னை குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய புறநகர் ஏரிகளின் நீரை பயன்படுத்த ஆய்வு: செம்பரம்பாக்கத்துக்கு கொண்டு செல்ல திட்டம்
 
சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக மணிமங்கலம் பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் மூலம் சர்வே எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக மணிமங்கலம் பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் மூலம் சர்வே எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
 
சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக மணிமங்கலம் பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் மூலம் சர்வே எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 சென்னை நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக புறநகர் பகுதிகளில் உள்ள ஏரி தண்ணீரை பயன்படுத்துவது குறித்து சென்னை குடிநீர் வாரியம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் புழல், பூண்டி, சோழவரம், செம் பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வறண்டு கிடக்கின்றன. இந்த 4 ஏரிகளின் மொத்த கொள் ளளவு 11,057 மில்லியன் கனஅடி. நேற்றைய நிலவரப்படி மொத் தம்1,709 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டு இதேநாளில் 4 ஏரிகளின் நீர்இருப்பு 7,991 மில்லியன் கனஅடியாக இருந்தது.

ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதால் சென்னையில் இப்போதே பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கோடைக்காலத்தில் சென்னை நகரின் தண்ணீர் தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, குடிநீர் தேவையை சமாளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக் கைகளை குடிநீர் வாரியம் மேற் கொண்டு வருகிறது.

சென்னையில் புறநகர்ப் பகுதி களில் உள்ள கல்குவாரிகளில் இருக்கும் தண்ணீர் மக்கள் குடிப் பதற்கு உகந்ததா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை புறநகரில் உள்ள தாம்பரம், பல்லாவரம், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, திருப்போரூர் போன்ற பகுதியில் உள்ள ஏரிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாசனத்துக்கு பயனற்றதாக உள்ள ஏரிகளின் தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட புறநகர் ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லவும் சர்வே நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னையில் கோடை காலத்தை சமாளிக்க குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கல்குவாரி நீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஏரிகளின் நீர் இருப்பு, அதன் தரம், எவ்வளவு தண்ணீரை எடுத்து பயன்படுத்த லாம், உள்ளூர் தேவைக்கு போக மீதி குழாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்லலாமா என பல வழிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டிய பாதைகள் குறித்த சர்வேயும் நடைபெறுகிறது. அனைத்து ஆய்வுகளையும் மேற் கொண்டு அரசுக்கு ஓரிரு வாரங் களில் அறிக்கை தாக்கல் செய்யப் படும் அரசின் முடிவுக்கு இணங்க திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

இணைப்பை துண்டிக்காமல் இருக்க உடனடியாக வரி செலுத்த வேண்டும்: குடிநீர் வாரியம்

Print PDF

தினமணி      22.01.2015

இணைப்பை துண்டிக்காமல் இருக்க உடனடியாக வரி செலுத்த வேண்டும்: குடிநீர் வாரியம்

குடிநீர் இணைப்பைத் துண்டிக்காமல் இருக்க உடனடியாக குடிநீர் வரியைச் செலுத்த வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி: சென்னை மாநகராட்சி சொத்து வரியாக நிர்ணயித்துள்ள தொகையில் 7 சதவீத தொகையைக் குடிநீர், கழிவுநீர் வரியாக குடிநீர் வாரியத்துக்குச் செலுத்த வேண்டும். குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெறாவிட்டாலும் இந்த தொகையை பொதுமக்கள் செலுத்த வேண்டும்.

சென்னை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் சொத்து வரியுடன் சேர்த்து குடிநீர் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இனிமேல் இந்த வரியை தனியாக குடிநீர் வாரியத்துக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டும்.

சென்னையில் நுகர்வோர்கள் அனைவரும் நிலுவை தொகை, நடப்புக் கேட்புத் தொகைகளை உடனடியாக செலுத்தி, கூடுதல் வரிவிதிப்பு, இணைப்பு துண்டிப்பைத் தவிர்க்க வேண்டும்.

சென்னையில் நீண்ட நாள்களாக குடிநீர் வரியை செலுத்த தவரும் வணிக வளாகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே ஸ்பென்சர் பிளாசா வணிக வளாகத்தில் நிலுவைத் தொகை செலுத்தத் தவறியவர்களுக்கு குடிநீர் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் 15 நாள்களுக்குள் வரி செலுத்த வேண்டும். இப்போது நிலுவையில் உள்ள தொகையை பொதுமக்கள் உடனியாக செலுத்த வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து 1077-ல் 879 புகார்கள்

Print PDF
தினமணி        10.10.2014

குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து 1077-ல் 879 புகார்கள்

குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து புகார் தெரிவிக்க தொடங்கப்பட்ட கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மூலம் இதுவரை 879 புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ஜெயசிறி முரளிதரன்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:

மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 1077 என்ற தொலைபேசி எண் கடந்த மே 1-ம் தேதி முதல் தொடங்கப்பட்டு புகார்கள் பெறப்பட்டு வந்தன.

செப்டம்பர் மாதம் 25-ம் தேதி வரை மாநகராட்சிப் பகுதிகளில் 280, நகராட்சிப் பகுதிகளில் 93, பேரூராட்சிகளில் 46, ஊராட்சி ஒன்றியங்களில் 460 என 879 புகார்கள் பெறப்பட்டு, பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டன அனைத்து புகார்களின் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடிநீர்த் தட்டுப்பாடு மற்றும் பருவமழை காலத்தில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும் இந்த தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ராமசாமி உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 


Page 4 of 390