Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

சென்னையில் கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரூ.300 கோடி

Print PDF

தினமணி               27.07.2012

சென்னையில் கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரூ.300 கோடி


சென்னை, ஜூலை 26: சென்னையில் கழிவுநீர் சுத்திகரிப்புக்கு ரூ.300 கோடி செலவில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதில், முதல் கட்டமாக ரூ.150 கோடி விடுவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும், சிறப்பாகச் செயல்படும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு ரொக்கப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

 இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

 சென்னை நகரைச் சுற்றி பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் வணிக அமைப்புகள் அதிகரித்து வருகின்றன. மக்கள் தொகை அதிகரித்து அதன் காரணமாக தனி வீடுகள் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி வருவதற்கேற்ப கழிவுநீர் அகற்றல் அமைப்பு அமைக்கப்பட வேண்டும். நீர் ஆதாரங்கள் மற்றும் நீர் வழிப் பாதைகளில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலக்கப்படுவது தவிர்க்கப்படுவது அவசியம்.

 அதன்படி, சென்னை நகரில் உள்ள நீர் வழிப் பாதைகளில் கழிவுநீர் கலக்கக் கூடிய கூவம் ஆற்றில் 105 இடங்கள், பக்கிங்காம் கால்வாயில் 183 இடங்கள், அடையாறு ஆற்றில் 49 இடங்கள் என மொத்தம் 337 இடங்களில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய ரூ.300 கோடி செலவில் திட்டங்களை நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

 இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக முதல் கட்டமாக ரூ.150 கோடியை தவணை முறையில் சென்னை பெருநகர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்துக்கு விடுவிக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

 அதன்படி, பிரதானக் கழிவுநீர் குழாய்கள் அமைத்தல், சிறிய அளவிலான குழாய்களை அகற்றி, அதிக விட்டம் கொண்ட கழிவு நீர் உந்து குழாய்கள் அமைத்தல், சாலையோரம் சிறிய கழிவுநீரேற்றும் நிலையங்கள் அமைத்தல், ஏற்கெனவே உள்ள கழிவுநீரேற்றும் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் சிறிய அளவிலான கழிவுநீர்க் குழாய்களை பெரிய குழாய்கள் கொண்டு மாற்றி அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சென்னை நகரில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆறுகளுடன் கலப்பது தடுத்து நிறுத்தப்படும்.

 உள்ளாட்சிகளுக்குப் பரிசு-பாராட்டு: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சேவை தரம் உயர, அவற்றுக்கிடையே ஆக்கப்பூர்வமான போட்டி அவசியம். சிறந்த சேவைகள் செய்யும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு முதல்வர் விருது ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் எனவும், சிறந்த மாநகராட்சிக்கு ரூ.25 லட்சமும், சிறந்த முதல் மூன்று நகராட்சிகளுக்கு முறையே ரூ.15 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.5 லட்சமும், முதல் மூன்று பேரூராட்சிகளுக்கு முறையே ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.3 லட்சமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

 இதனைச் செயல்படுத்தும் வகையில், சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சிகளைத் தேர்வு செய்ய உள்ளாட்சித் துறை அமைச்சரை தலைவராகவும், துறையின் செயலாளர், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர், நகர்மன்ற தலைவர்களின் பேரவைத் தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், நகராட்சி நிர்வாக இயக்குநரை உறுப்பினர்-செயலாளராகவும் கொண்ட ஓர் உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.

 இதற்கென ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரூ18 கோடியில் அமைகிறது அதங்கோட்டில் சுத்திகரிப்பு நிலைய பணிகள் தொடக்கம்

Print PDF

தினகரன்              26.11.2010

ரூ18 கோடியில் அமைகிறது அதங்கோட்டில் சுத்திகரிப்பு நிலைய பணிகள் தொடக்கம்

களியக்காவிளை, நவ.26: களியக்காவிளை, மெதுகும்மல், ஏழுதேசம், கொல்லங்கோடு கூட்டுகுடிநீர் திட்டத்துக்காக ரூ18கோடியில் அதங்கோட்டில் அமைய இருக்கும் சுத்திகரிப்பு நிலைய பணி தொடங்கியது.

களியக்காவிளை, கொல்லங்கோடு, ஏழுதேசம் பேரூராட்சிகள் மற்றும் மெதுகும்மல், வாவறை, குளப்புரம், அடைக்காகுழி உள்ளிட்ட ஊராட்சிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் பயன்பெறும் வகையில் களியக்காவிளை, மெதுகும்மல் மற்றும் ஏழுதேசம் கொல்லங்கோடு கூட்டு குடிநீர்திட்டம் ஏற்படுத்தப்பட்டன.

இதற்காக களியக்காவிளை அருகே அதங் கோடு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் 10க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் அமைக்கப்பட்டன. அதில் இருந்து பெறப்படும் தண் ணீர் தங்கள் தேவைக்கு ஏற்ப நீர்த்தொட்டிகளில் சேமித்து வீட்டு குடிநீர் இணைப் புகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வரு கிறது.

உறைகிணறுகளில் இருந்து அனுப்பப்படும் தண்ணீர் சுகாதாரமற்றதாக இருப்பதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வழங்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து களியக்காவிளை மெதுகும்மல் கூட்டுகுடிநீர் திட்டம், கொல்லங்கோடு, ஏழுதேச பகுதியில் உள்ள 27 வழியோர கிராமங்கள், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 79 வழியோர கிராமங்களுக் கென குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அதங்கோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ18 கோடி மதிப்பில் அதங்கோட்டில் அமைய இருக்கும் குடிநீர் சுத்தி கரிப்பு நிலைய பணி கடந்த சில தினங்களுக்குமுன் தொடங்கியது.

முதல்கட்டமாக ஜேசிபி எந்திரம் மூலம் நிலத்தை சீரமைத்து அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்து வருகிறது. வரும் 2011ம் ஆண்டு இறுதியில் குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் செயல்பட தொடங்கும்.

 

மழையால் நோய் பரவுவதை தடுக்க குடிநீரை நன்கு சுத்திகரித்து விநியோகிக்க உத்தரவு சுகாதாரத்துறையினர் உஷார்

Print PDF

தினகரன்                25.11.2010

மழையால் நோய் பரவுவதை தடுக்க குடிநீரை நன்கு சுத்திகரித்து விநியோகிக்க உத்தரவு சுகாதாரத்துறையினர் உஷார்

தேனி, நவ.25: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், குடிநீர், தேங்கும் மழைநீர் மூலம் நோய் அபாயம் இருப்பதால், சுகாதாரத்துறையினர் விழிப்புடன் செயல்பட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். குடிநீரில் குளோரினேசன் அளவை அதிகப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு கலங்கலாக ஓடுவதால் உறைகிணறுகளில் தண்ணீர் மாசுபட்டுள்ளது. இந்த தண்ணீரை அப்படியே விநியோகித்தால் தொற்று நோய் பரவலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இதனையடுத்து கலெக்டர் முத்துவீரன், மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளின் ஆணையர், செயல் அலுவலர்கள் மற்றும் தலைவர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், குடிநீரை குளோரினேசன் அளவை அதிகப்படுத்தி நன்கு சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். தவிர, மேல்நிலைத் தொட்டிகளையும் சுத்திகரிப்பு செய்ய அவர் வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஆயிரம் லிட்டருக்கு 4 கிராம் குளோரின் என்பது அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குடிநீரிலோ, தேங்கும் நீரிலோ நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அலர்ட் செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், குடிநீரை நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனையடுத்து கலெக்டர் முத்துவீரன், மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளின் ஆணையர், செயல் அலுவலர்கள் மற்றும் தலைவர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், குடிநீரை குளோரினேசன் அளவை அதிகப்படுத்தி நன்கு சுத்திகரிப்பு செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். தவிர, மேல்நிலைத் தொட்டிகளையும் சுத்திகரிப்பு செய்ய அவர் வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஆயிரம் லிட்டருக்கு 4 கிராம் குளோரின் என்பது அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குடிநீரிலோ, தேங்கும் நீரிலோ நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அலர்ட் செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில், குடிநீரை நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுகாதாரப்பணியை தீவிரப்படுத்த கூடுதல் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் உள்ள 8 தலைமை ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 சுகாதாரப்பணியாளர்கள் (மஸ்தூர்) நியமிக்கப்பட்டு இருந்தனர். தற்போது கூடுதலாக 5 மஸ்தூர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 120 பேர் தினமும் வீடு, வீடாக சென்று, கொசுக்களை ஒழிக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டில் உள்ள தொட்டிகள், பிளாஸ்டிக்குகள், தேங்காய் சிரட்டைகள், உடைந்த டயர்களில் தேங்கிய தண்ணீரில் கொசு இனப்பெருக்கம் நடக்கிறது. இதனை அப்புறப்படுத்தினாலே கொசுக்கள் உற்பத்தியாகாது. சிக்குன்குனியா, காய்ச்சல் போன்றவை உருவாகாது என அறிவுறுத்துகின்றனர். ஏடிஎஸ், கியூலக்ஸ் வகை கொசுக்கள் குறித்தும் வீடு வீடாக பிரசாரம் செய்யப்படுகிறது.

 


Page 6 of 28