Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் துவக்க விழா

Print PDF
தினமலர்               23.03.2013

திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் துவக்க விழா


வேதாரண்யம்: வேதாரண்யத்தில், பொன் விழா ஆண்டு நகர்ப்புற திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் துவக்க விழா நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில், நகராட்சி தலைவர் மலர்க்கொடி தலைமை வகித்தார். கமிஷனர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். முகாமில், எம்.எல்.ஏ., காமராஜ் பங்கேற்று, இலவச வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான நேர்காணல் முகாமை துவக்கி வைத்தார். முன்னணி கணினி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, நேர்காணல் நடத்தி, தேர்வு செய்தனர்.மகளிர் சுயஉதவிகுழுவினர் பங்கேற்றனர்.
 

பெண்களுக்கான கழிவறைகளின் நிலை குறித்து அறிக்கை தர வேண்டும்

Print PDF
தினமணி          09.03.2013

பெண்களுக்கான கழிவறைகளின் நிலை குறித்து அறிக்கை தர வேண்டும்


தில்லியில் பெண்களுக்கான கழிவறைகளின் நிலை குறித்து 3 வாரத்துக்குள் மூன்று மாநகராட்சிகள், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி.), தில்லி கன்டோன்மென்ட் போர்டு ஆகியவை அறிக்கை தர வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தில்லியில் பெண்கள் பயன்படுத்தும் கழிவறைகள் மோசமாக இருப்பதாகவும், அது குறித்து மாநகராட்சிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டி உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் அசோக் அகர்வால் பொது நல மனு தாக்கல் செய்தார்.

"பெண்களுக்கான கழிவறைகள் பல செயல்படாமல் உள்ளன. இருக்கும் கழிவறைகளும் பராமரிப்பு இல்லாமல் உள்ளன" என்று அசோக் அகர்வால் கூறியிருந்தார். பெண்களுக்கான கழிவறைகளின் நிலை குறித்து நடத்தப்பட்ட ஓர் ஆய்வறிக்கையையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.

அதையடுத்து மாநகராட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் அறிக்கை தர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  அந்த அறிக்கைகளுக்குப் பிறகு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் பெண்கள் கழிவறைகளின் நிலை குறித்து மூன்று வார காலத்துக்குள் அறிக்கை தர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெüல், இந்தர்மீத் கெüர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.
 

தில்லி மாநகராட்சிகளில் மகளிர் தின விழா

Print PDF
தினமணி          09.03.2013

தில்லி மாநகராட்சிகளில் மகளிர் தின விழா


தில்லி மாநகராட்சிகளில், உலக மகளிர் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

வடக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளின் தலைமை அலுவலகமான டாக்டர் ஷ்யாம பிரசாத் முகர்ஜி சிவிக் சென்டரில் நடைபெற்ற விழாவில், மாநிலங்களவை முன்னாள் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா சிறப்பு விருத்தினராக கலந்து கொண்டார்.

"பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு மகளிர் அமைப்புகள் போராட வேண்டும். பெண்கள் குறித்த பார்வையும், மனப்பான்மையும்  சமூகத்தில் மாற வேண்டும்'' என்று விழாவில் பேசுகையில் நஜ்மா ஹெப்துல்லா குறிப்பிட்டார்.

தெற்கு தில்லி மேயர் சவிதா குப்தா பேசுகையில், ""தங்களின் சக்தி இந்த நாட்டின் சக்தி என்பதை பெண்கள் உணர வேண்டும். ஆண்களுக்கு இணையாக பெண்களும் எல்லாத்துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். மேற்கத்திய கலாசாரத்தை விரும்பினாலும், அதிலும் பாரம்பரிய அடையாளங்களை விட்டு விடக்கூடாது'' என்று கேட்டுக்கொண்டார்.

வடக்கு தில்லி மேயர் மீரா அகர்வால் பேசுகையில், "விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சவால்களை எதிர்கொண்டு, பெண்கள் வாழ்வில் வெற்றி பெறுவது அவசியம்'' என்றார்.

கிழக்கு தில்லி மேயர் அன்னப்பூர்ணா மிஸ்ரா பேசுகையில், ""பாலியல் வன்முறைகளைத் தடுக்க வலுவானச் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

மருத்துவ முகாம்: மகளிர் தினத்தை ஒட்டி வடக்கு தில்லி மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

அதில் வடக்கு தில்லி மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் ரேகா குப்தா பேசுகையில், "இந்த முகாமுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையும், புற்றுநோயாளிகள் உதவி அமைப்பும், சஃப்தர் ஜங் ரோட்டரி சங்கமும் ஏற்பாடு செய்துள்ளன. வடக்கு தில்லி மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களின் உடல் நலன் கருதி, இது போன்ற  மருத்துவ முகாம்கள் பகுதிபகுதியாக நடத்தப்படும். இதன் மூலம் 10,000 ஆசிரியர்கள் பயன் பெறுவர். முகாமில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்'' என்றார்.
 


Page 5 of 41