Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

சேலம் மாநகராட்சி பகுதிக்கு ரூ132 கோடியில் தனி குடிநீர் திட்ட இரண்டாம் கட்ட பணிகள் துவக்கம் 2 மகப்பேறு மருத்துவமனைகள் திறப்பு

Print PDF
தினகரன்             13.08.2012
 
சேலம் மாநகராட்சி பகுதிக்கு ரூ132 கோடியில் தனி குடிநீர் திட்ட இரண்டாம் கட்ட பணிகள் துவக்கம் 2 மகப்பேறு மருத்துவமனைகள் திறப்பு
 
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட 14வது வார்டு குமாரசாமிப்பட்டியில் ரூ39.50 லட்ச மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு நல மருத்துவமனையை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதில் 5 படுக்கையும், மருத்துவர் அறை, அதிநவீன சோதனை கருவி அறை, பிரசவ முன் அறை, பிரசவ அறை என அனைத்து வசதியும் உள்ளது. இதேபோல் அம்மாப்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 42வது வார்டு கிச்சிப்பாளையத்தில் பழைய மருத்துவமனை கட்டடத்தை அகற்றிவிட்டு புதிதாக ரூ39.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மகப்பேறு நல மருத்துவமனையை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி திறந்தார். இங்கு 8 படுக்கையும், மருத்துவர் அறை, பிரசவ அறை, நோயாளிகள் அறை, கழிவறை, மருத்தகம், உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இந்நிகழ்ச்சியில் திமுக வார்டு கவுன்சிலர் சரளா குணசேகரன் கலந்து கொண்டார். சேலம், :சேலம் மாநகராட்சி பகுதிக்கான தனி குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் ரூ132.12 கோடி மதிப்பீட்டில் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமியால் துவக்கி வைக்கப்பட்டது.

சேலம் மாநகராட்சி பகுதிக்கு போதுமான அளவு குடிநீர் வழங்குவதற்காக தனி குடிநீர் திட்டம் ரூ320.54 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ரூ188 கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்ட முதற்கட்ட பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட பணியாக ரூ132.12 கோடியில் சேலம் மாநகர பகுதியில் 22 புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டவும், 67 கிலோ மீட்டர் தூரத்திற்கு துணை பிரதான குழாய்கள் அமைக்கவும், 212 கிலோ மீட்டருக்கு பகிர்மான குழாய்கள் அமைக்கவும், பழைய பகிர்மான குழாய்களை மாற்றவும் நேற்று திட்ட பணி துவக்க விழா நடந்தது.

இதில் சூரமங்கலம் ரெட்டிப்பட்டி சாலையில் துணை பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகளையும், களரம்பட்டி துவக்க பள்ளி வளாகத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கும் பணியையும், அம்மாப்பேட்டை கீழ்நிலை தொட்டி வளாகத்தில் பகிர்மான குழாய்கள் அமைக்கும் பணிகளையும் தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

இந்த பணிகள் அனைத்தும் 18 மாத காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், தனி குடிநீர் திட்டம் நிறைவடைந்தால் சேலம் மாநகர் பகுதியில் நாள்தோறும் நபர் ஒருவருக்கு 135 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், மேயர் சவுண்டப்பன், செம்மலை எம்பி, எம்எல்ஏக்கள் செல்வராஜ், வெங்கடாசலம், மாநகராட்சி கமிஷனர் அசோகன், துணை மேயர் நடேசன், மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளர்கள் அசோகன், முருகானந்தம், காமராஜ், வெங்கடேஷ், மாநகர் நகர் நல அலுவலர் பொற்கொடி, மண்டல குழு தலைவர்கள் தியாகராஜன், மாதேஸ்வரன், ஜெயபிரகாஷ், சண்முகம், உதவி கமிஷனர் கள் மல்லிகா, ரமேஷ்பாபு, அரங்கநாதன், ஜெகநாதன் மற்றும் கவுன்சிலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், அரசு அலுவலர் கள் பலர் கலந்துகொண்டனர்.
 

மகளிர் சுய உதவி குழு சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் சிறப்பு விற்பனை கண்காட்சி

Print PDF

தினகரன்       21.12.2010

மகளிர் சுய உதவி குழு சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் சிறப்பு விற்பனை கண்காட்சி

சென்னை, டிச. 21:

மகளிர் சுயஉதவிக்குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விற்பனை கண்காட்சி சென்னையில் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நேற்று துவங்கியது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அவருக்கு பனை ஓலை தொப்பியை அணிந்து மகிழ்கிறார் சுயஉதவிக்குழு பெண்.

 

தமிழ்நாட்டில் 76.67 லட்சம் மகளிரை உறுப்பினர்களாக கொண்டு 4,86,412 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்படுகின்றன. இந்த குழுக்கள் பொருளாதார மேம்பாடு அடைவதற்கும், அவர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த ஆண்டு மாநில அளவிலான கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விற்பனைக் கண்காட்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் ஜனவரி 31ம் தேதி வரையும், அண்ணா நகரில் உள்ள தந்தைப் பெரியார் சமூகக் கூடத்தில் ஜனவரி 18ம்தேதி வரையும் நடக்க உள்ளது.

இதற்காக மாநிலம் முழுவதும் இருந்து வந்திருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களால் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் 38 அரங்குகளும், தந்தை பெரியார் சமூகக் கூடத்தில் 34 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், கைவினை மற்றும் கலைப் பொருட்கள், காகிதப் பொருட்கள், மூலிகைப் பொருட்கள், மலைவாழ் மகளிர் தயாரித்த கம்பளி ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இரண்டு இடங்களில் நடக்கும் கண்காட்சியை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “சென்னை மட்டுமல்லாமல் மாவட்ட அளவில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. பொருட்களை சந்தைப்படுத்தி நல்ல விலைக்கு விற்பனை செய்ய இந்த கண்காட்சி உதவும்” என்றார்.

ஆர்வமாக வாங்கிய துணை முதல்வர்

மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் கண்ணை கவரும் வகையில் இருந்தது. அதை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆர்வமாக பார்வையிட்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அனைத்து அரங்குகளுக்கும் சென்று பொருட்களின் விபரம் மற்றும் அவை தயாரிப்பதற்கு ஆகும் செலவு குறித்தும் கேட்டறிந்தார். பல அரங்குகளில் பணம் கொடுத்து பொருட்களை வாங்கினார். இதனால் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர். 

Last Updated on Tuesday, 21 December 2010 08:36
 

24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளுக்கு விரைவில் திறப்பு விழா

Print PDF
தினமலர்       16.12.2010

24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளுக்கு விரைவில் திறப்பு விழா

 
சென்னை: ""சென்னை மாநகராட்சியில்,  24 மணி நேரம் செயல்படும் ஐந்து மகப்பேறு மருத்துவமனை கட்டடங்களை, துணை முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார்'' என, மேயர் சுப்ரமணியன் கூறினார்.சென்னை மாநகராட்சியில், மண்டலத்திற்கு ஒரு மகப்பேறு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படுத்தும் வகையில், அனைத்து மண்டலங்களிலும், மகப்பேறு மருத்துவமனை கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டை, பெருமாள் பேட்டையில், ஏற்கனவே 24 மணி நேரமும் செயல்படும் மகப்பேறு மருத்துவமனைகள் இருப்பதால், மற்ற எட்டு மண்டலங்களில் மகப்பேறு மருத்துவமனைக்கான புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடக்கிறது. இதில், அயனாவரம் மண்டலத்தில் யுனைடெட் இந்தியா காலனியில் உள்ள 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டது. தற்போது, புளியந்தோப்பு திருவேங்கடம் தெருவில், நான்கு கோடியே 10 லட்ச ரூபாய் மதிப்பில், 40 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. இந்த கட்டுமான பணிகளை ஆய்வு செய்த மேயர் சுப்ரமணியன் கூறியதாவது: பேசின்பிரிட்ஜ் மண்டலத்தில் சஞ்சீவராயன்பேட்டை, கீழ்ப்பாக்கம் மண்டலத்தில் புல்லா அவென்யூ, கோடம்பாக்கம்  மண்டல அலுவலகம் அருகிலும், அடையாறு வெங்கட ரத்தினம் நகரிலும், திருவல்லிக்கேணியில் மீர்சாகிப் பேட்டை ஆகிய ஐந்து இடங்களில் கட்டப்படும், 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை கட்டடங்கள் கட்டுமானப் பணிகள், முடியும் தறுவாயில் உள்ளது. இந்த கட்டடங்களை துணை முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார். புளியந்தோப்பு மண்டலத்தில், திருவேங்கடம் தெருவில் கட்டப்படும் மருத்துவமனை கட்டடம் மற்றும் சைதாப்பேட்டை மகப்பேறு மருத்துவமனையில், கூடுதலாக கட்டப்படும் கட்டடங்களின் கட்டுமானப் பணிகள், ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.
 


Page 7 of 41