Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

24 மணி நேரமும் செயல்படும் 5 மகப்பேறு மருத்துவமனைகள் துணை முதல்வர் திறக்கிறார்

Print PDF

தினகரன்            15.12.2010

24 மணி நேரமும் செயல்படும் 5 மகப்பேறு மருத்துவமனைகள் துணை முதல்வர் திறக்கிறார்

சென்னை, டிச. 15: சென்னையில் 24 மணி நேரம் செயல்படும் 5 மகப்பேறு மருத்துவமனைகளை துணை முதல்வர் மு..ஸ்டாலின் அடுத்த மாதம் திறந்து வைக்கிறார்.

புளியந்தோப்பு, திருவேங்கடம் சாலையில், மாநகராட்சி சார்பில் கட்டப்படும் 24 மணி நேர நவீன மருத்துவமனை கட்டுமான பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.

மேயர் கூறியதாவது:

சென்னையில் ஏழை, எளிய மக்களுக்காக 10 மண்டலங்களில் 24 மணி நேரமும் செயல்படும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கான கட்டிட பணிகள் நடந்து வருகிறது. அயனாவரம் யுனைடெட் இந்தியா நகர், முதல் பிரதான சாலையில் ரூ1.34 கோடி செலவில் கட்டப்பட்ட 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புளியந்தோப்பில் ரூ4.1 கோடி செலவில் 24 மணி நேரமும் செயல்படும் மகப்பேறு மருத்துவமனை கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் 40 படுக்கைகள், அறுவை சிகிச்சை கூடம், சுகப்பிரசவ மையம், லிப்ட், சாய்தளம், புறநோயாளிகள் பிரிவு மற்றும் கழிப்பறை என நவீன வசதிகளுடன் உருவாக்கப்படுகிறது. இந்த பணி வரும் ஏப்ரலில் முடியும்.

மண்டலம் 2ல் சஞ்சீவராயன் பேட்டை, சோலையப்பன் தெருவில் ரூ1.8 கோடியில் 20 படுக்கைகளுடனும், ஷெனாய் நகர், புல்லா அவென்யூவில் ரூ1.24 கோடியில் 27 படுக்கைகளுடனும், மீர்சாகிப்பேட்டையில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனையை புதுப்பித்து ரூ1.39 கோடியில் 25 படுக்கைகளுடனும், கோடம்பாக்கதில் ரூ1.5 கோடியில் 35 படுக்கைகளுடனும், அடையாறு வெங்கட ரத்தினம் நகரில் ரூ2.3 கோடியில் 30 படுக்கைகளுடனும் 24 மணி நேர மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவை அனைத்திலும் நவீன வசதிகள் இருக்கும். ஆக 7.41 கோடி செலவில் கட்டப்படும் ஐந்து 24 மணி நேர மருத்துவமனைகளை வரும் ஜனவரி மாதம் துணை முதல்வர் மு..ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் 60 படுக்கைகளுடன் 3.96 கோடியிலும், புளியந்தோப்பில் ரூ4.10 கோடியிலும் கட்டப்படும் 24 மணி நேர மருத்துவமனை கட்டுமான பணிகள் ஏப்ரலில் முடியும். ரூ.15 கோடி செலவில் 24 மணி நேரமும் செயல்படும் 7 மகப்பேறு மருத்துவமனைகளை மாநகராட்சி உருவாக்கி வருகிறது. இவ்வாறு மேயர் கூறினார். வி.எஸ்.பாபு எம்.எல்., நிலைக்குழு தலைவர் அ.மணிவேலன் உடன் இருந்தனர்.

 

ரூ. 15 கோடி செலவில், சென்னையில் 24 மணி நேரம் செயல்படும்; 7 மகப்பேறு மருத்துவமனைகள் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

Print PDF

மாலை மலர் 14.12.2010

ரூ. 15 கோடி செலவில், சென்னையில் 24 மணி நேரம் செயல்படும்; 7 மகப்பேறு மருத்துவமனைகள் மு..ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

ரூ. 15 கோடி செலவில், சென்னையில்
 
 24 மணி நேரம் செயல்படும்;
 
 7 மகப்பேறு மருத்துவமனைகள்
 
 மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னை, டிச. 14- சென்னை மாநகராட்சி கட்டிடத்துறை சார்பில் புளியந்தோப்பு, திருவேங்கடம் சாலையில் 24 மணி நேர நவீன மகப்பேறு மருத்துவமனை கட்டுமான பணியினை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி சார்பில் 10 மண்டலங்களிலும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காக 24 மணி நேர மகப்பேறு மருத்துவ மனைகள் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அயனாவரத்தில் ஏற்கனவே யுனைடெட் இந்தியா நகர் முதல் பிரதான சாலை யில் ரூ.1 கோடியே 34 லட்சம் செலவில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புளியந்தோப்பில் ரூ. 4 கோடியே 10 லட்சம் செலவில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை கட்டிடப்பணிகள் கடந்த ஆண்டு நவம்பர் திங்களில் பணி தொடங்கப்பட்டது. இதில் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் 40 படுக்கைகளுடன் கூடிய அறுவைச் சிகிச்சை மையம், சுகப்பிரசவ மையத்துடன் கூடிய மருத்துவமனை, மின் தூக்கி, சாய்தளம், அறுவைச் சிகிச்சை அரங்குகள், கழிப்பறைகள், புற நோயாளிகள் பிரிவு ஆகிய வசதிகளுடன் நவீன முறையில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி வருகின்ற ஏப்ரல் திங்களில் முடிக்கப்படும்.

அதேபோன்று மண்டலம்-2, வார்டு-15ல் சஞ்சீவ ராயன் பேட்டை, சோலையப்பன் தெருவில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவ மனை 20 படுக்கைகளுடன் கூடிய அறுவைச் சிகிச்சை மையம், ரூ. ஒரு கோடியே 8 லட்சத்திலும், மண்ட லம்-5, வார்டு-55ல் செனாய் நகர், புல்லா அவன்யூவில் 27 படுக்கை வசதிகளுடன், ரூ.1 கோடியே 24 லட்சம் செலவிலும், மண்டலம்-6, வார்டு-93ல் மீர்சாகிப் பேட்டையில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவ மனையினை புதுப்பித்து,

ரூ. ஒரு கோடியே 39 லட்சத் திலும், மண்டலம்-8, வார்டு- 120ல் ஏற்கனவே உள்ள 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனையை புதுப்பித்து, 35 படுக்கைகளுடன் ரூ. ஒரு கோடியே 50 லட்சம் செலவிலும், மண்டலம்-10, வார்டு-151ல் அடையாறு வெங்கட ரத்தினம் நகரில் புதிய 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை 30 படுக்கைகளுடன் தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் கூடிய மருத்துவமனை, ரூ. 2 கோடியே 30 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. ஐந்து 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளை துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் அடுத்த ஜனவரி மாதம் திறந்து வைக்கிறார்.

அதேபோன்று சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் 60 படுக்கைகளுடன் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை கட்டும் பணி ரூ. 3 கோடியே 96 லட்சம் செலவிலும், புளியந்தோப்பில் ரூ. 4 கோடியே 10 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளின் கட்டிடப்பணிகள் வரும் ஏப்ரல் மாதம் முடிக்கப்பட்டு திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் புரசைவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, நிலைக் குழுத்தலைவர் (சுகாதாரம்) மணிவேலன், மண்டலக் குழுத்தலைவர் கன்னியப்பன், மன்ற உறுப்பினர்கள் வேம்பாத்தம்மாள், எழிலழகன், தலைமைப் பொறியாளர் விஜயகுமார், மேற்பார்வை பொறியாளர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

சென்னையில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகள் விரைவில் திறப்பு: மேயர் தகவல்

Print PDF

தினமணி               14.12.2010

சென்னையில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகள் விரைவில் திறப்பு: மேயர் தகவல்

சென்னை, டிச.14: சென்னையில் கட்டப்பட்டுள்ள 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளை துணை முதல்வர் மு..ஸ்டாலின் விரைவில் திறந்து வைப்பார் என மேயர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

புளியந்தோப்பில் கட்டப்பட்டு வரும் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனையை பார்வையிட்ட பின்னர் அவர் கூறியதாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை மாநகராட்சி சார்பில் 10 மண்டலங்களிலும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதற்காக 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகள் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் அயனாவரத்தில் ஏற்கனவே யுனைடெட் இந்தியா நகர் முதல் பிரதான சாலையில் ரூ. ஒரு கோடியே 34 லட்சம் செலவில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புளியந்தோப்பில் ரூ. 4 கோடியே 10 லட்சம் செலவில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை கட்டடப் பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. இதில் தரைத் தளம் மற்றும் முதல் தளத்தில் 40 படுக்கைகளுடன் கூடிய அறுவைச் சிகிச்சை மையம், சுகப் பிரசவ மையத்துடன் கூடிய மருத்துவமனை, மின் தூக்கி, சாய்தளம், அறுவைச் சிகிச்சை அரங்குகள், கழிப்பறைகள், புற நோயாளிகள் பிரிவு ஆகிய வசதிகளுடன் நவீன முறையில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி வருகின்ற ஏப்ரலில் முடிக்கப்படும்.

மண்டலம்-2, வார்டு-15ல் சஞ்சீவராயன் பேட்டையில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை மண்டலம்-5, வார்டு-55ல் செனாய்நகரில் 27 படுக்கை வசதிகளுடன், புற நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், கழிப்பறை வதிகளுடன் ரூ. ஒரு கோடியே 24 லட்சம் செலவிலும், மண்டலம்-6, வார்டு-93ல் மீர்சாகிப் பேட்டையில் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனையினை புதுப்பித்து, கூடுதல் வசதிகளான புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு என 25 படுக்கைகளுடன் ரூ. ஒரு கோடியே 39 லட்சத்திலும், மண்டலம்-8, வார்டு-120ல் ஏற்கனவே உள்ள 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனையை புதுப்பித்து, புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, 35 படுக்கைகளுடன் ரூபாய் ஒரு கோடியே 50 லட்சம் செலவிலும், மண்டலம்-10, வார்டு-151ல் அடையாறு வெங்கட ரத்தினம் நகரில் புதிய 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை 30 படுக்கைகளுடன் கூடிய அறுவைச் சிகிச்சை மையம், சுகப்பிரசவ மையத்துடன் கூடிய தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் கூடிய மருத்துவமனை, புறநோயாளிகள் பிரிவு, கழிப்பறை வசதிகள் என ரூ. 2 கோடியே 30 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தம் ஐந்து 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகள் ரூ.7 கோடியே 41 லட்சம் செலவில் துணை முதல்வர் மு..ஸ்டாலினிலா ஜனவரி மாதம் திறந்து வைக்கப்படும்.

சைதாப்பேட்டை ஜீனிஸ் சாலையில் 60 படுக்கைகளுடன் கூடிய அறுவைச் சிகிச்சை மையம், புறநோயாளிகள் பிரிவு என 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனை கட்டும் பணி ரூ. 3 கோடியே 96 லட்சம் செலவிலும், புளியந்தோப்பில் ரூ. 4 கோடியே 10 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் 24 மணி நேர மகப்பேறு மருத்துவமனைகளின் கட்டடப் பணிகள் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிக்கப்படும் என மேயர் கூறியதாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 8 of 41