Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Women Welfare / Development

மதுரை மாநகராட்சி சார்பாக 2,051 பெண்களுக்கு ரூ.7 கோடிக்கு திருமண நிதிஉதவி 2 அமைச்சர்கள்– மேயர் வழங்கினர்

Print PDF

தினத்தந்தி             10.02.2014

மதுரை மாநகராட்சி சார்பாக 2,051 பெண்களுக்கு ரூ.7 கோடிக்கு திருமண நிதிஉதவி 2 அமைச்சர்கள்– மேயர் வழங்கினர்

மதுரை மாநகராட்சி சார்பாக ரூ.7 கோடி மதிப்பில், 2,051 பெண்களுக்கு பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டன.

திருமண நிதி உதவி

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்புத் திட்டமான ஏழை பெண்களுக்கு திருமண உதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கும் விழா, மதுரை மாநகராட்சி சார்பாக ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சுப்பிரமணியன், மாநகராட்சி கமிஷனர் கிரண்குராலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமை தாங்கி பெண்களுக்கு தாலிக்கு தங்கம், நிதி உதவிக்கான காசோலைகளை வழங்கினர்.

இந்தியாவுக்கே கிடைக்கும்

விழாவில் பட்டப்படிப்பு படித்த 882 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் 4 கிராம் தங்கம், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 படித்த 1,069 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் 4 கிராம் தங்கம் என மொத்தம் 2 ஆயிரத்து 51 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 13 லட்சத்து 25 ஆயிரத்து மதிப்பிலான திருமண நிதி உதவி, தலா 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சர் வளர்மதி பேசியதாவது:– பெண்கள் தங்களின் திருமணத்திற்காக நிதியும், தாலிக்கு தங்கமும் பெற வேண்டும் என்பதற்காக முதல்–அமைச்சர் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் நோக்கம் பெண்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்பது தான். இந்த திட்டத்திற்காக சமூக நலத்துறையின் மூலம் ஆண்டுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, விலையில்லா அரிசி, திருமண உதவி திட்டம் என்று எந்த மாநிலத்திலும் நிறைவேற்றப்படாத இதுபோன்ற ல்வேறு திட்டங்களை ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். நாடு முழுவதும் உள்ள மக்களும் இந்த திட்டங்களின் பயன்களை பெறும் வகையில் வருகிற பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பசுமை வீடுகள்

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது கூறியதாவது:–

தமிழ்நாட்டு ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக முதல்–அமைச்சர் எண்ணற்ற பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். முதல்–அமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் 1.86 கோடி பேர் பயன் அடைந்து வருகின்றனர். முதியோர் உதவித் தொகை ரூ.500–ல் இருந்து ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

பசுமை வீடு திட்டத்தின் தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பேர் வீடுகள் கட்டி உள்ளனர். மதுரை மாவட்டத்தில் 4,400 வீடுகள் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி தமிழகத்தில் இதுவரை 71 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 26 ஆயிரத்து 261 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வருகிற 2023 ஆண்டில் தமிழ்நாடு ஆசியாவிலேயே சிறந்த நாடாக கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறார் என்றார்.

குடிநீர் பற்றாக்குறை

மேயர் ராஜன் செல்லப்பா பேசும்போது கூறியதாவது:–

முதலமைச்சரின் உத்தரவுப்படி, மதுரை மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் சிறப்பாக நிறைவேற்ற பட்டு வருகிறது. குறிப்பாக 80 சதவீத சாலை பணிகள் நிறைவடைந்து உள்ளது. குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக போர்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டிலேயே மதுரை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்கள் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சியில் 3 ஆயிரத்து 432 பயனாளிகளுக்கு இதுவரை ரூ.12.45 கோடி மதிப்பிலான திருமண நிதி உதவியும் ரூ.12 கோடி மதிப்பிற்கும் மேலான 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதார பிரிவு

விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜக்கையன், எம்.எல்.ஏ.க்கள் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முத்துராமலிங்கம், ஏ.கே.போஸ், சாமி, தமிழரசன், கருப்பையா, சுந்தர்ராஜன், துணைமேயர் கோபாலகிருஷ்ணன், மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நகர்நல அலுவலர் யசோதாமணி தலைமையில் மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் செய்திருந்தனர்.

 

மகப்பேறு மையத்தில் தாய்மார்களுக்கு சத்தான உணவு : முட்டை வழங்க மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமலர்             08.10.2013

மகப்பேறு மையத்தில் தாய்மார்களுக்கு சத்தான உணவு: முட்டை வழங்க மாநகராட்சி திட்டம்

கோவை: கோவை மாநகராட்சி மகப்பேறு மையத்தில், குழந்தைப்பேறுக்கு பின், பெண்களுக்கு முட்டை வழங்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில், குழந்தைப் பேறுக்கு பின், பெண்களுக்கு மூன்று வேளை உணவு, பால், ரொட்டி, முட்டை வழங்கப்படுகிறது. மாநிலத்தில் ஒரு சில மாநகராட்சிகளிலுள்ள மகப்பேறு மையத்தில், குழந்தைப்பேறுக்கு பின், பெண்களுக்கு சத்தான உணவு, முட்டை போன்றவை வழங்கப்படுகிறது.

கோவை மாநகராட்சியில் 20 மகப்பேறு மையங்கள் உள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கு "ஸ்கேன்' பரிசோதனை, சத்து மாத்திரைகள் வழங்குவதுடன், முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை, பிறந்த குழந்தைகளுக்கு "ஜனனி சுரக்ஷா யோஜனா' திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கோவை மாநகராட்சி மகப்பேறு மையத்தில் சுகப்பிரசவம் மட்டுமே பார்க்கப்படுகிறது. குழந்தைப்பேறுக்கு பின், பெண்களுக்கு மூன்று நாட்களுக்கு, தினமும் இருவேளை பால், ரொட்டி போன்றவை வழங்கப்படுகிறது. மகப்பேறு மையத்தில் குழந்தை பிறப்பை அதிகரிக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதனால், சீதாலட்சுமி மகப்பேறு மையத்தில், பிரசவ அறுவைசிகிச்சைக்கான வார்டு துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று, குழந்தைப்பேறுக்கு பின், பெண்களுக்கு பால், ரொட்டியுடன், முட்டை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி கமிஷனர் லதா கூறுகையில், ""மகப்பேறு மையத்தில் "ஸ்கேன்' வசதி ஏற்படுத்தியதால், பிரசவ எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு 1100 குழந்தைகள் பிறந்தன. இந்தாண்டு, செப்., வரை 488 குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தைப்பேறு எண்ணிக்கையை அதிகரிக்கவும், பிரசவித்த பெண்களுக்கு சத்தான உணவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேயர் அனுமதி பெற்றதும் திட்டம் துவங்கப்படும்'' என்றார்.

அரசு மருத்துவமனையில், குழந்தைப்பேறுக்கு பின் பெண்களுக்கு, காலையில் இட்லி, சாம்பார்; காலை 10:00 மணிக்கு பால், ரொட்டி; மதியம் சாப்பாடு, சாம்பார், கீரை அல்லது காய்கறி பொரியல், மோர், முட்டை; மாலை 3:00 மணிக்கு சத்துமாவு கஞ்சி; மாலையில் சாப்பாடு, சாம்பார், சுண்டல் வழங்கப்படுகிறது. இதேபோன்று கோவை மாநகராட்சி மகப்பேறு மையத்தில் குழந்தைப்பேறுக்கு பின், பெண்களுக்கு வழங்கினால் உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.

தற்போது ரொட்டி, பால், முட்டை வழங்க ஒரு நாளுக்கு ஒருவருக்கு 46 ரூபாய் செலவாகும் என கணக்கிட்டுள்ளனர். இத்திட்டத்தை விரிவுபடுத்தி, அரசு மருத்துவமனை "மெனு'வை, மகப்பேறு மையத்திலும் செயல்படுத்தினால் திட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.

இந்தாண்டு, செப்., வரை 488 குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தைப்பேறு எண்ணிக்கையை அதிகரிக்கவும், பிரசவித்த பெண்களுக்கு சத்தான உணவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேயர் அனுமதி பெற்றதும் திட்டம் துவங்கப்படும்.

 

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மகளிர் குழு பெண்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

Print PDF

தமிழ் முரசு                  29.04.2013

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மகளிர் குழு பெண்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில், எஸ்ஜெஎஸ்ஆர்ஒய் திட்டத்தின் கீழ் மகளிர் குழுக்களை சேர்ந்த 51 பெண்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் தொடக்க விழாவுக்கு செயல் அலுவலர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராசமாணிக்கம், பேரூராட்சி துணைத் தலைவர் ஷேக்தாவூத் ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்தனர்.

மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள், கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டு சுயவேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

பெண்கள் முன்னேற்றத்துக்கு கணினி பயிற்சி உதவும். 90 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூரில் உள்ள நேஷனல் அகடமி எஜுகேஷன் ஊழியர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.

 


Page 2 of 41