Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

இந்தியாவில் 7 கோடி மக்களுக்கு வசிக்க வீடு இல்லை

Print PDF

தினகரன் 11.10.2010

இந்தியாவில் 7 கோடி மக்களுக்கு வசிக்க வீடு இல்லை
புதுடெல்லி, அக்.11: பொருளாதார வளர்ச்சி, நகர மயமாதல் ஆகிய காரணங்களால், இந்தியாவில் வீடுகளுக்கான பற்றாக்குறை 7 கோடியாக உள்ளது. இந்த பிரச்னையை சமாளிக்க வீடுகள் கட்ட கடன் தாராளமாக கிடைக்க வகை செய்ய வேண்டும் என்றும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.

தெற்கு ஆசியாவில் வீட்டுக் கடன் விரிவாக்கம்என்ற தலைப்பில் உலக வங்கி ஓர் ஆய்வை மேற்கொண்டது. அதில் கூறியிருப்பதாவது:

உலகின் மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் இந்தியாவை உள்ளடக்கிய தெற்கு ஆசியாவில் வசிக்கின்றனர். இவர்களில் 14 சதவீதம் பேருக்கு வீட்டு வசதி இல்லை. இதன்படி பார்த்தால் இந்தியாவில் மட்டும் 2 கோடி முதல் 7 கோடி வீடுகள் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் 3 கோடி பேர் வீடுகள் வாங்க தயாராக உள்ளனர். ஆனால், இவர்களது குடும்ப மாத வருமானம் சராசரியாக ரூ5 ஆயிரம் முதல் ரூ11 ஆயிரம் வரை உள்ளதால் வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெறுவது சிக்கலாக உள்ளது.

இவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, குறைந்த பட்ஜெட் வீடுகளை கட்டித் தர கட்டுமான நிறுவனங்கள் முன்வர வேண்டும். அதேபோல், வீட்டுக் கடன் நிறுவனங்களும் நீண்ட கால அடிப்படையில் மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்க முன்வர வேண்டும். இதனால் வீடுகள் பற்றாக்குறையில் பாதியை சரிசெய்ய முடியும்.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதால் நகரமயமாவதும் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதுவே வீடுகளுக்கான தேவை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம். கட்டுமான நடவடிக்கைகளால் அடுத்த 10 ஆண்டுகளில் 32 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். இவ்வாறு அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

நகர்புற ஏழை, எளியவர்களுக்கு வீடு கட்ட மானியத்துடன் கடன்

Print PDF

தினமலர் 07.10.2010

நகர்புற ஏழை, எளியவர்களுக்கு வீடு கட்ட மானியத்துடன் கடன்

தென்காசி:"நகர்புற ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்ட மானியத்துடன் கூடிய கடன் பெற்று தரப்படும்' என தென்காசியில் நடந்த விழாவில் கலெக்டர் ஜெயராமன் பேசினார்.தென்காசி நகராட்சி பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் மானிய வட்டியுடன் வீட்டு கடன் பெறும் திட்டத்தில் விண்ணப்பம் பெறும் முகாம் நடந்தது. நகராட்சி தலைவர் கோமதிநாயகம் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் செழியன் வரவேற்றார்.

மாவட்ட கலெக்டர் ஜெயராமன் பயனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு பேசும் போசியதாவது:-""நகர்புற ஏழை, எளிய மக்கள், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள், நிரந்தர வீடு இல்லாத மக்கள், மழை காலத்தில் வீடு இல்லாமல் சிரமப்படுவோருக்கு மானிய வட்டியுடன் கடன் வழங்கி வீடு கட்டும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகிறது. டவுன் பஞ்., நகராட்சி பகுதியில் வீடு கட்ட தனி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் முக்கிய சிறப்பு பயனாளிகள் வீடுகளை விருப்பப்படி கட்டலாம். மாதம் 5 ஆயிரம் ரூபாய்க்குள் வருமானம் உள்ளவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். மாதம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும். 1 லட்சம் ரூபாய் கடன் பெறுபவர்கள் 250 சதுர அடியில் வீடு கட்ட வேண்டும். இவர்களுக்கு 29 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கடன் பெறுபவர்கள் 431 சதுர அடியில் வீடு கட்ட வேண்டும். இவர்களுக்கு 35 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டுகள் வரை திரும்ப செலுத்தலாம். சங்கரன்கோவில், புளியங்குடி நகராட்சி பகுதியில் ஏற்கனவே இத்திட்டத்திற்கு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் விரைவில் பாங்க் கூட்டம் நடத்தி இத்திட்டத்தில் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடன் பெறும் தொகைக்கு வீடு கட்டும் இடத்தை அடமானம் எழுதி கொடுக்க வேண்டும். வேறு ஜாமீன் தேவையில்லை. இத்திட்டத்தை மக்கள் முழுமையாக பயன்படுத்தி நகராட்சி பகுதியில் குடிசைகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்'' என்று கலெக்டர் ஜெயராமன் பேசினார்.நகராட்சிகளின் மண்டல இயக்குநர் மோகன், தென்காசி ஆர்.டி..சேதுராமன், தாசில்தார் விஜயா, நகராட்சி துணைத் தலைவர் இப்ராகிம், நெல்லை வீட்டு வசதி வாரிய உதவி செயற்பொறியாளர் சதாசிவம், உதவி பொறியாளர் எட்வின் சுந்தர்சிங், கவுன்சிலர்கள் ராமராஜ், கணபதி, கல்யாணி, இன்ஜினியர் ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 07 October 2010 07:47
 

நகர்ப்புற ஏழைகள் மானியத்தில் வீடு கட்டுவது குறைந்தது ஏன்

Print PDF

தினமலர் 30.09.2010

நகர்ப்புற ஏழைகள் மானியத்தில் வீடு கட்டுவது குறைந்தது ஏன்

மதுரை : மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற ஏழைகள் வீடு கட்ட, ஒருலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை வங்கிக்கடன் மற்றும் வட்டி மானியம் அறிவித்தும், இதுவரை 19 பேர் மட்டுமே மானியம் பெற்றுள்ளனர். நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் (மாதம் 5000 ரூபாய் வருமானம்), குறைந்த வருவாய் பிரிவினர்கள் (5001 - 10ஆயிரம் ரூபாய்) வீட்டுக்கடன், வட்டி மானியம் பெற தகுதியானவர்கள். நலிவுற்றோர் ஒரு லட்சம் ரூபாய் வரையும், குறைந்த வருவாய் பிரிவினர் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெறலாம். ஒரு லட்சம் வரையான கடனுக்கு, ஐந்து சதவீத வட்டி மானியம் அரசால் வழங்கப்படுகிறது. கூடுதலாக கடன்தொகை பெற்றாலும், அதிகபட்சமாக ஒருலட்சம் ரூபாய் வரை வட்டி மானியம் பெறமுடியும். நலிவுற்றோர் 25 சதுரமீட்டர் பரப்பளவிலும், குறைந்த வருமானம் உடையோர் 40 சதுரமீட்டர் பரப்பளவிலும் வீடுகட்டலாம். சொந்தவீடு இல்லாதோர் மட்டும் இத்திட்டத்தில் சேரலாம். சொந்தநிலமுடையோர் பட்டா உரிமை பெற்றிருக்க வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்களும் பயன்பெறலாம்.

மானியம் பெறுவதில் சிக்கல் :நகர்ப்புறங்களில் ஆயிரக்கணக்கான ஏழைகள் இருந்தும், இதுவரை 19 பேருக்கு மட்டுமே வட்டி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 5620 பேருக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் வீட்டுவசதி வாரியத்தின் மூலமே விண்ணப்பிக்க முடியும் என்பதால், இதுவரை 1818 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாததால் 952 விண்ணப்பங்கள் வங்கியால் திருப்பி அனுப்பப்பட்டன. 857 விண்ணப்பங்கள் காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றன. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் ஒரு சதவீதம் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. இந்நிலையில் 11 ஆயிரத்து 520 பேருக்கு வட்டிமானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட்டி மானியம் பெறுவதற்கு ஏகப்பட்ட தடைகள் இருப்பதாலேயே, பயனாளிகளுக்கு இத்திட்டம் பயன்படவில்லை.

என்ன காரணம் : வருமானச் சான்றிதழ் பெறுவதில் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்கின்றன. ஆண்டு வருமானத்தைப் பற்றிய தெளிவான குறிப்பிட்டிருந்தும், சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஏனெனில் ரேஷன் கார்டில் மாத வருமானம் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல, இத்திட்டத்தின் வருமான அளவிற்கும் சம்பந்தம் இல்லை. இலவச பட்டா வைத்திருப்பவர்கள், அடமானம் வைக்கக்கூடாது என்ற உத்தரவால், கடன் பெற முடியவில்லை.

விதிமுறைகள் தளர்வு : மத்திய அரசு தற்போது விதிமுறைகளை சற்றே தளர்த்தியுள்ளது. வீட்டுக்கடனுக்காக மட்டும், இலவச பட்டாவை வங்கியில் அடமானமாக கொடுக்கலாம். பத்திரப் பதிவு கட்டணம், தண்ணீருக்கு வரியில்லை என மேலும் பல சலுகைகளை வழங்கியுள்ளது. ஆனாலும் வங்கிகளின் கெடுபிடியாலும், வீட்டுவசதி வாரியத்தின் முறையான வழிகாட்டுதல் இல்லாததாலும் பயனாளிகள் கிடைக்கவில்லை.

தீர்வு என்ன : வீட்டுக்கடன் பெற விண்ணப்பிக்கும் போது, என்னென்ன ஆவணங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தெளிவுபடுத்த வேண்டும். என்ன காரணத்தால் வங்கிகள் விண்ணப்பங்களை நிராகரித்தது என்பதை ஆராய வேண்டும். விண்ணப்பம் பெற்றவர்கள், அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்துள்ளனரா, போதுமான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனரா என்பதை கவனித்தால், குறைகளைச் சரிசெய்து விடலாம். அதன்பின், வங்கிகளும் நிராகரிக்க முடியாது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 


Page 10 of 34