Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Poverty Alleviation

வால்பாறை நகராட்சியில் கணினி, தையல் பயிற்சி

Print PDF
தினமணி        25.03.2013

வால்பாறை நகராட்சியில் கணினி, தையல் பயிற்சி


வால்பாறை நகராட்சியில் இன்றும் நாளையும், இலவச கணினி மற்றும் தையல் பயிற்சிகள் நடைபெற உள்ளன.

பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் திறன் மேம்பாடுத் திட்டத்தின் கீழ், கணினி மற்றும் தையல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. திங்கள்கிழமை (இன்று) மற்றும் செவ்வாய்க்கிழமை (நாளை) ஆகிய இரண்டு தினங்கள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சமுதாயக் கூடத்தில் நடைபெறும் இந்த முகாமில் இரு பாலரும் கலந்து கொள்ளளாம். முகாமில் கலந்துகொள்ள விரும்பும் பயனாளிகள், தங்களது கல்விச் சான்று, குடும்ப அட்டை நகல், ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று ஆகியவற்றுடன் வந்து பயன்பெறலாம்.  இத்தகவலை வால்பாறை நகராட்சி ஆணையர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
Last Updated on Monday, 25 March 2013 10:18
 

இலவச கணினி பயிற்சி: மார்ச் 27, 28 நேர்காணல்

Print PDF
தினமணி        25.03.2013

இலவச கணினி பயிற்சி: மார்ச் 27, 28 நேர்காணல்


பரமக்குடி நகராட்சி பகுதியில் வசிப்பவர்கள், இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் மார்ச் 27, 28 ஆம் தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என நகராட்சி ஆணையர் கே.அட்ஷயா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியது:

சுவர்ணஜெயந்தி சகாரி ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு இலவச கணினி பயிற்சி, நர்ஸிங் உதவியாளர், மகப்பேறு உதவியாளர், நான்கு சக்கர வாகனம் ஓட்டுநர் பயிற்சியுடன் உரிமம் பெறுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இத்திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சேர விரும்புவோரை நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர்மன்றக் கூட்ட அரங்கில் மார்ச் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 18 முதல் 35 வயதுடையோர், 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது தோல்வி பெற்ற இருபாலரும் பங்கேற்கலாம்.

நேர்காணலுக்கு வருவோர் கல்வி மற்றும் மதிப்பெண் சான்று, ஜாதிச் சான்றிதழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அட்டை நகல், 3 பாஸ்போட் சைஸ் போட்டோவுடன் கலந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Last Updated on Monday, 25 March 2013 10:19
 

திருச்சி மாநகராட்சியில் திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சிக்கான பயனாளிகள் தேர்வு முகாம் மேயர் ஜெயா தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி               23.03.2013

திருச்சி மாநகராட்சியில் திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சிக்கான பயனாளிகள் தேர்வு முகாம் மேயர் ஜெயா தொடங்கி வைத்தார்

திருச்சி மாநகராட்சியில் திறன் மேம்பாட்டு தொழில்பயிற்சிக்கான பயனாளிகள் தேர்வு முகாமை மேயர் ஜெயா தொடங்கி வைத்தார்.

திறன் மேம்பாட்டு பயிற்சி

 திருச்சி மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் ஏழை மக்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டத்தின் கீழ் 2013–14ம் ஆண்டில் 2 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச பயிற்சி அளிக்க அரசால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான மானிய தொகை மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் வழங்கப்பட உள்ளது. 2012–13ம் ஆண்டில் 1140 பேர் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.

என்னென்ன தொழில்கள்?

 இதுதொடர்பாக நகராட்சி நிர்வாக ஆணையரால் 2012–2013 மற்றும் 2014 வரை உள்ள 3 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய வகையில் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி கட்டணங்கள் நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நவீன தையல் கலை பயிற்சி, தையல் பயிற்சி, சமையல் கலை, நர்சிங், தகவல் தொழில் நுட்பம், கட்டுமானம், பழுது நீக்கம், கணினி, பிளம்பிங், வெல்டிங் மற்றும் எலக்ட்ரீசியன் போன்ற 13 வகையான தொழில் நுட்பத்துடன் கூடிய பயிற்சிகள் அளிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது பயனாளிகள் தேர்வு முகாம் இன்றும் (சனிக்கிழமை) தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேயர் தொடங்கி வைத்தார்

 திருச்சி மாநகராட்சி பகுதியில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் குடும்பங்களில் இருந்து தகுதி பெற்ற பயனாளிகளை தேர்வு செய்ய ஏதுவாக பயனாளிகள் தேர்வு முகாம் நேற்று காலை திருச்சி மாநகராட்சி மெயின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை மேயர் ஜெயா தொடங்கி வைத்து பேசினார். இந்த முகாமிற்கு மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளில் இருந்தும் பயனாளிகள் கலந்து கொள்வதற்கும், பயனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பம் பெறுவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஆகவே மாநகராட்சி பகுதியில் உள்ள குறைந்த பட்சம் 8–ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் ப.தண்டபாணி பயனாளிகள் தேர்வு முகாமில் தெரிவித்தார்.

பயனாளிகள் தேர்வு முகாம் தொடக்க நிகழ்ச்சியில் கோட்டத்தலைவர்கள் மனோகரன், எம்.லதா, ஞானசேகரன் நகர் நல அலுவலர் (பொ) ராஜேஸ்வரி, உதவி ஆணையர்கள் தனபாலன், தயாநிதி, கே.ராஜம்மா, உதவி செயற்பொறியாளர்கள் நாகேஷ், சிவபாதம் ஜெயக்குமார், சமுதாய அமைப்பாளர் பத்மா மற்றும் பயிற்சி நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 25 March 2013 10:15
 


Page 2 of 34