தினமலர் 30.08.2012
வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.2.10 கோடி நிதி வழங்கல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புது வாழ்வு திட்டம் மூலம், 90 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு, இரண்டு கோடியே 10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவ்வாறு அமைக்கப்பட்ட 90 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கான நிதி, இரண்டு கோடியே 10 லட்ச ரூபாயை கலெக்டர் மகேஸ்வரன் வழங்கினார். புது வாழ்வு திட்டத்தின் அனைத்து பணிகளும் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் மூலமாகவே செயல்படுத்தப்படுகிறது.இதற்கு ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் மக்கள் தொகை அடிப்படையில் குறைந்த பட்சம் ஆறு லட்ச ரூபாய் முதல் அதிக பட்சம் 25 லட்ச ரூபாய் வரை விடுவிக்கப்படுகிறது. ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பில் குறைந்தது 10 லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய் வரை வாழ்வாதார நிதி வழங்கப்படுகிறது.