Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - General

கிருஷ்ணகிரி நகராட்சியில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான முகாம் தொடக்கம் வார்டு வாரியாக அடுத்த மாதம் 10ந் தேதி வரை நடைபெறும்

Print PDF
தினத்தந்தி        28.03.2013

கிருஷ்ணகிரி நகராட்சியில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான முகாம் தொடக்கம் வார்டு வாரியாக அடுத்த மாதம் 10ந் தேதி வரை நடைபெறும்


கிருஷ்ணகிரி நகராட்சி யில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற் கான பதிவு செய்யும் முகாம் நேற்று தொடங்கி யது. இந்த முகாம் வார்டு வாரியாக அடுத்த மாதம் 10ந் தேதி வரை நடைபெற உள்ளது.

மக்கள் தொகை பதிவேடு

தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான பதிவு செய் யும் முகாம் கிருஷ்ணகிரி நகராட்சியில் நேற்று தொடங் கியது. இதில் 5 வயது முதல் உள்ள அனைத்து குடிமக்களும் தவறாமல் கலந்துகொண்டு தங்களது பதிவினை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள னர்.

கிருஷ்ணகிரி நகராட்சி 1வது வார்டில் நடந்த பதிவு செய்யும் முகாமை நகர்மன்ற தலைவர் தங்கமுத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது நகர மைப்பு அலுவலர் பாஸ்கரன், மேற்பார்வையாளர்கள் சரவணன், முருகன், சண்முகம், தங்கர்சாமி, முரளி ஆகியோர் உடனிருந்தனர்.

ஆவணங்கள்

முகாமில் தங்களது பதிவை பதிவு செய்து கொள்ள குடும்ப அட்டை, வருமான வரி அட்டை, தேசிய வேலை வாய்ப்பு அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ் போர்ட் இதில் ஏதாவது ஒன்றை எடுத்து செல்ல வேண் டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முகாம் நடைபெறும் நாள்

கிருஷ்ணகிரி நகராட்சியில் முகாம் நடைபெறும் வார்டு மற்றும் நாள் விவரம் பின் வருமாறு:

1வது வார்டில் 27ந் தேதி முதல் 30ந் தேதி வரையும், 2 மற்றும் 3வது வார்டுகளில் 27ந் தேதி முதல் 29ந் தேதி வரையிலும், 4வது வார்டில் 27ந் தேதி முதல் 30ந் தேதி வரையிலும், 5வது வார்டில் 29ந் தேதி முதல் ஏப்ரல் 3ந் தேதி வரையிலும், 6வது வார்டில் 29ந் தேதி முதல் ஏப்ரல் 1ந் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இதேபோல் 7, 8வது வார்டு களில் 30ந் தேதி முதல் ஏப்ரல் 2ந் தேதி வரையிலும், 9வது வார்டில் 30ந் தேதி முதல் ஏப்ரல் 1ந் தேதி வரையிலும், 10வது வார்டில் 31ந் தேதி முதல் ஏப்ரல் 7ந் தேதி வரை யிலும் இந்த முகாம் நடை பெறுகிறது.

11வது வார்டு

இதே போல் 11வது வார்டில் ஏப்ரல் 1ந் தேதி முதல் 3ந் தேதி வரையிலும், 12வது வார்டு 1ம் தேதி முதல் 5ம் தேதி வரையிலும், 13வது வார்டு 1ம் தேதி முதல் 3ந் தேதி வரை யிலும், 14, 15, 16 ஆகிய வார்டு களில் 1ம் தேதி முதல் 5ந்தேதி வரையிலும், 17 மற்றும் 18வது வார்டுகளில் 1ந் தேதி முதல் 3ந் தேதி வரையிலும், 19வது வார்டில் 3ந் தேதி முதல் 6ந் தேதி வரையிலும், 20, 21, 22 ஆகிய வார்டுகளில் 3ந் தேதி முதல் 7ந் தேதி வரையிலும் இந்த பதிவு செய்யும் முகாம் நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து 23வது வார்டில் 3ந் தேதி முதல் 5ந் தேதி வரையிலும், 24வது வார்டில் 5ந் தேதி முதல் 7ந் தேதி வரையிலும், 25வது வார்டில் 5ந் தேதி முதல் 9ந் தேதி வரையிலும், 26வது வார்டில் 5ந் தேதி முதல் 7ந் தேதி வரையிலும், 27வது வார்டில் 5ந் தேதி முதல் 9ந் தேதி வரையிலும், 28வது வார்டில் 6ந் தேதி முதல் 8ந் தேதி வரையிலும், 29வது வார்டில் 6ந் தேதி முதல் 10ந் தேதி வரையிலும், 30வது வார்டில் 7ந் தேதி முதல் 10ந் தேதி வரையிலும், 31 மற்றும் 32வது வார்டுகளில் 7ந் தேதி முதல் 12ந் தேதி வரை யிலும், 33வது வார்டில் 7ந் தேதி முதல் 10ந் தேதி வரை யிலும் இந்த பதிவு செய்யும் முகாம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

மாநகராட்சி ஏற்பாடு இலவச கம்ப்யூட்டர் பயிற்சிக்கு 27, 28ம் தேதி தேர்வு முகாம்

Print PDF
தினகரன்         25.03.2013

மாநகராட்சி ஏற்பாடு இலவச கம்ப்யூட்டர் பயிற்சிக்கு 27, 28ம் தேதி தேர்வு முகாம்


ஈரோடு: ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளதாவது: ஈரோடு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொன்விழா ஆண்டு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் ஆண்கள், பெண்களுக்கான இலவச பயிற்சியாக கம்ப்யூட்டர் அனிமேசன் மல்டிமீடியா, எம்.எஸ்.ஆபீஸ், இண்டர்நெட், டேலி மற்றும் டி.டி.பி., பேஷன் டிசைனிங் ஆகிய பயிற்சிகள் நகரின் முக்கிய பயிற்சி நிறுவனங்கள் மூலமாக அளிக்கப்படவுள்ளது. பேஷன் டிசைனிங்கிற்கு 5ம் வகுப்பும், மற்ற பயிற்சிகளுக்கு 8ம் வகுப்பும் குறைந்தபட்ச கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
இந்த இலவச கம்ப்யூட்டர் பயிற்சிக்கான சிறப்பு தேர்வு முகாம் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்விச்சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் நேரில் வரவேண்டும். மேலும் பயிற்சி தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்திலும் விண்ணப்பம் அளிக்கலாம் என ஆணையாளர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
Last Updated on Monday, 25 March 2013 10:20
 

மதுரை?மாநகராட்சி?ஆணையராக நந்தகோபால்?நீடிப்பதில்?சிக்கல்?

Print PDF
தினகரன்         05.03.2013

மதுரை?மாநகராட்சி?ஆணையராக நந்தகோபால்?நீடிப்பதில்?சிக்கல்?


மதுரை: மதுரை மாநகராட்சி ஆணையர் நந்தகோபாலுக்கு அளிக்கப்பட்ட ஐஏஎஸ் அந்தஸ்தை மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளதால், அவர் ஆணையராக நீடிக்க முடியுமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.  

தமிழகத்தில் சர்வீஸ் அடிப்படையில் 7அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அளிக்கப்பட்டதை எதிர்த்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அதிகாரி ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதில் 7பேருக்கும் ஐஏஎஸ் அளித்ததை ரத்து செய்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த 7பேரில் ஒருவர் மதுரை மாநகராட்சி ஆணையர் நந்தகோபால்.

மாநகராட்சி 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு 2012 ஜனவரி முதல் மே வரை ஆணையர் நியமிக்கப்படாமல், பொறுப்பு அதிகாரி இருந்தார். 100 வார்டுகளாக இருப்பதால் ஐஏஎஸ் அதிகாரியை ஆணையராக நியமிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
அப்போது டிஆர்ஓ அந்தஸ்தில் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை தனி அதிகாரியாக இருந்த நந்தகோபாலுக்கு ஐஏஎஸ் கிடைத்ததும், மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். மாநகராட்சியில் 13 ஆண்டுகளாக புதிய ஊழியர் நியமிக்க முடியாமல் இருந்த சிக்கலை நீக்கி புதிய ஊழியர் நியமனத்திற்கு வழி ஏற்படுத்தினார்.

இதேபோல், மாநகராட்சியில் முறைகேடாக சுருட்டிய ரூ.1 கோடி பணத்தை மீட்டு நடவடிக்கை எடுத்தது, 5ஆண்டுகளாக மூடிக் கிடந்த ராணிமங்கம்மாள் சத்திரத்தை திறந்தது, மாட்டுத்தாவணியில் ஆம்னி பஸ்ஸ்டாண்ட் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.  

முக்கியமாக வரும் 11ம் தேதி மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் ராஜன்செல்லப்பா தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து 27ல் மாநகராட்சி மார்க்கெட், டூவீலர், நவீன கழிப்பிடங்கள் ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஏலம் நடந்த போது ஆணையர் பொறுப்பில் உதவி ஆணையர் இருந்ததால், முறையாக நடைபெறாமல் மாநகராட்சிக்கு வருவாய் குறைந்தது. கோவை மாநகராட்சியில் கடந்த மாதம் நடத்தி முடித்த ஏலத்தில் இ டெண்டர் அனுமதிக்கப்பட்டு, ரூ.70 கோடியாக இருந்த வருவாய் 200 கோடிக்கு மேல் உயர்ந்தது. அங்கு ஐஏஎஸ் அதிகாரி ஆணையராக இருப்பதால் துணிச்சலுடன் நடவடிக்கை எடுக்க முடிந்தது.

அதேபோல் மதுரையிலும் ஆணையர் நந்தகோபால் இ டெண்டர் முறையை அனுமதித்து ஏல வருவாயை பெருக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முக்கியமான கட்டத்தில் நந்தகோபாலின் ஐஏஎஸ் ரத்தாகி இருப்பது, மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

இதனால் நந்தகோபால் மதுரை மாநகராட்சி ஆணையராக நீடிக்க முடியுமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தீர்ப்பாய உத்தரவு குறித்து நேற்று வரை அரசிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை. ஐஏஎஸ் அந்தஸ்து ரத்தானாலும் அரசு விரும்பினால் ஆணையராக நீடிக்கலாம். ஆனால் தீர்ப்பாயம் குறிப்பிட்ட அதிகாரி மீது ‘குற்றச்சாட்டு சரியான முறையில் நீக்கப்படவில்லை, நற்சான்றிதழ் அவசர கோலத்தில் அளிக்கப்பட்டுள்ளது’ என்று சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அவர் முக்கிய பொறுப்பில் நீடிக்க முடியுமா என்பது சிக்கலானது’ என்றார்.
 


Page 6 of 42