Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - General

புதிய தலைமைச் செயலகத்தில் 6 மாடி கார் பார்க்கிங் வசதி 600 கார்களை நிறுத்தலாம்

Print PDF

தினகரன்       25.05.2010

புதிய தலைமைச் செயலகத்தில் 6 மாடி கார் பார்க்கிங் வசதி 600 கார்களை நிறுத்தலாம்

சென்னை, மே 25: புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தில் 6 மாடி கார் பார்க்கிங் அமைக்கப்படுகிறது.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டப்பேரவை வளாக கட்டிடப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இதன் அருகே, தலைமைச் செயலக கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 7 பிளாக்குகள் கொண்ட 7 மாடி பிரமாண்ட கட்டிடங்கள் அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தற்போது கோட்டையில் இயங்கி வரும் அரசு துறை செயலாளர் அலுவலகங்கள், புதிய 7 மாடி கட்டிடத்தில் இடம் பெற உள்ளன. இந்த வளாகங்களுக்கான குடிநீர் இணைப்பு, கழிவு நீர் கால்வாய், மின்சார இணைப்புக்கான பணிகள் முடிவடைந்து விட்டன.

புதிய சட்டமன்ற தலைமை செயலகத்துக்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்காக 6 மாடியில் 600 கார்கள் நிறுத்தும் வகையில் பிரமாண்டமான கார் பார்க்கிங் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. தலைமை செயலக வளாகம் அருகே கலைவாணர் அரங்கம் அமைக்கப்படுகிறது. இது தவிர விருந்தினர் இல்லமும் கட்டப்பட உள்ளது. இந்நிலையில், அரசினர் தோட்டத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தமிழ்நாடு தேர்வாணைய அலுவலக கட்டிடத்தை இடிக்க அரசு முடிவு செய்துள்ளது. தேர்வாணைய அலுவலகம் அமைப்பதற்கு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இடம் தேர்வானதும் தேர்வாணைய கட்டிடம் இடிக்கப்பட்டு விடும். தற்போதுள்ள சுற்றுலா வளாக கட்டிடத்தை இடிக்காமல் தோற்றத்தை நவீனப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

கழிவறைகளை விட மொபைல் போன் அதிகம்

Print PDF

தினமலர் 21.04.2010

கழிவறைகளை விட மொபைல் போன் அதிகம்

புதுடில்லி:நம் நாட்டில் தகவல் தொடர்பு வளர்ந்த அளவுக்கு, சுகாதார வசதிகள் மேம்படவில்லை என ஐ.நா., அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார கல்வி அமைப்பின் இயக்குனர் ஜாபர் அடில், இது குறித்து அறிக்கையில் கூறியுள்ளதாவது:கடந்த 2001ல் இந்தியாவில், 1 சதவீதத்தினரிடம் கூட மொபைல் போன் இல்லை. தற்போது, 45 சதவீதம் பேரிடம் மொபைல் போன் உள்ளது. அந்த அளவுக்கு தகவல் தொடர்பு புரட்சி ஏற்பட்டுள்ளது.

ஆனால், இந்த நாட்டின் சுகாதாரத்தை ஒப்பிடுகையில், 31 சதவீதம் பேருக்கு மட்டுமே கழிவறை வசதி உள்ளது. மற்றவர்கள் திறந்தவெளியில் தான் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.வரும் 2015ம் ஆண்டுக்குள், இந்தியாவில் 100 சதவீதம் பேருக்கு கழிவறை வசதி கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் அது முடியாத காரியமாக உள்ளது.

ஒரு கழிவறை கட்ட, குறைந்தபட்சம் 15 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. எனவே, 2015ம் ஆண்டுக்குள், 50 சதவீதம் பேருக்காவது கழிவறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என, முடிவு செய்யப்பட் டுள்ளது. 2025ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் கழிவறை கட்டும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஜாபர் அடில் அறிக்கையில் கூறியுள்ளார்.

Last Updated on Wednesday, 21 April 2010 06:57
 

கோலார் உள்பட 4 நகரங்களில் ரூ.100 கோடியில் "மெகா சந்தைகள்

Print PDF

தினமணி 13.04.2010

கோலார் உள்பட 4 நகரங்களில் ரூ.100 கோடியில் "மெகா சந்தைகள்

பெங்களூர், ஏப்.12: தோட்ட விளைபொருள்களை விற்பனை செய்ய தலா ரூ.100 கோடி செலவில் கோலார் உள்பட 4 நகரங்களில் "மெகா சந்தைகள்' கட்டப்படும் என்று தோட்டக்கலைத் துறை மற்றும் சிறைத்துறை அமைச்சர் உமேஷ் கத்தி தெரிவித்தார்.

அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி: தோட்ட விளைபொருள்களை விற்பனை செய்ய மாவட்டம்தோறும் சந்தைகள் அமைக்கும் திட்டத்தை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் விவசாயிகள் விளைவித்த தோட்ட விளை பொருள்களை விற்பனை செய்ய நல்ல வாய்ப்பு கிடைக்கும். சரியான விலையும் கிடைக்கும்.

தோட்டக்கலைத் துறையை மேம்படுத்த தேசிய தோட்டக்கலைத் துறை மிஷன் ரூ.110 கோடியை கர்நாடகத்துக்கு ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் தோட்டக்கலைத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது தோட்ட விளைபொருள்கள் ஆண்டுக்கு 15 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை 21 லட்சம் டன்னாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு தரமான விதை, பூச்சி மருந்துகள் வழங்கப்படும்.

விளைபொருள்களை சந்தைப்படுத்துதல் மிகவும் முக்கியமாகும். இதற்காக கோலார்,பெல்காம், மைசூர் மற்றும் ஹாசன் ஆகிய நான்கு நகரங்களில் 4 மெகா சந்தைகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சந்தையில் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இந்த மெகா சந்தை ஒவ்வொன்றும் தலா ரூ.100 கோடி செலவில் கட்டப்படும். விவசாயிகளிடம் தோட்ட விளைபொருள்களை பெங்களூரில் உள்ள ஹாப்காம்ஸ் போன்ற அமைப்பு மூலம் கொள்முதல் செய்து அவை மெகா மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும்.

இதனால் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளுக்கு சரியான விலையும், நுகர்வோருக்கு சரியான விலையில் தரமான பொருள்களும் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றார் அவர்.

Last Updated on Tuesday, 13 April 2010 10:09
 


Page 11 of 42