தினமணி 01.02.2014
சாத்தான்குளத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் இயக்கம்
சாத்தான்குளம் பேரூராட்சியில் ரூ. 12.8 லட்சம் மதிப்பில் 8 இடங்களில் அமைக்கப்பட்ட உயர்கோபுர விளக்குகளை பேரூராட்சித் தலைவர் ஜோசப் இயக்கி வைத்தார்.
சாத்தான்குளம் பேரூராட்சி சார்பில் தலா ரூ. 1.60 லட்சம் மதிப்பில் மேலசாத்தான்குளம், அரசு மருத்துவமனை முன்பு, கே.டி. கோசல்ராம் பஸ் நிலையம் முன்பு, பெருமாள் கோயில் முன்பு உள்ளிட்ட 8 இடங்களில் குறுகிய உயர்கோபுர அடர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இதன் மதிப்பு மொத்தம் ரூ 12.8 லட்சமாகும். விழாவுக்கு பேரூராட்சித் தலைவர் ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்து, அந்த விளக்குகளை இயக்கித் தொடங்கி வைத்துப் பேசினார். பேரூராட்சி செயல் அலுவலர் ம. ரெங்கசாமி, துணைத் தலைவர் ரா. வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பேரூராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இளநிலை உதவியாளர் தாமரைசெல்வன் நன்றி கூறினார்.