Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - General

சாத்தான்குளத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் இயக்கம்

Print PDF

தினமணி             01.02.2014

சாத்தான்குளத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் இயக்கம்

சாத்தான்குளம் பேரூராட்சியில் ரூ. 12.8 லட்சம் மதிப்பில் 8 இடங்களில் அமைக்கப்பட்ட உயர்கோபுர விளக்குகளை பேரூராட்சித் தலைவர் ஜோசப்  இயக்கி வைத்தார்.

 சாத்தான்குளம் பேரூராட்சி சார்பில் தலா ரூ. 1.60 லட்சம் மதிப்பில் மேலசாத்தான்குளம், அரசு மருத்துவமனை முன்பு, கே.டி. கோசல்ராம் பஸ் நிலையம் முன்பு, பெருமாள் கோயில் முன்பு உள்ளிட்ட 8 இடங்களில் குறுகிய உயர்கோபுர அடர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இதன் மதிப்பு மொத்தம் ரூ 12.8 லட்சமாகும்.   விழாவுக்கு பேரூராட்சித் தலைவர் ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்து, அந்த விளக்குகளை இயக்கித் தொடங்கி வைத்துப் பேசினார். பேரூராட்சி செயல் அலுவலர் ம. ரெங்கசாமி, துணைத் தலைவர் ரா. வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 இதில் பேரூராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இளநிலை உதவியாளர் தாமரைசெல்வன் நன்றி கூறினார்.

 

பெங்களூருவில் மாநகராட்சி ஏரிகள், பள்ளிகளை பராமரிக்க தனியார் நிறுவனங்கள் முடிவு

Print PDF

தினமணி             25.01.2014 

பெங்களூருவில் மாநகராட்சி ஏரிகள், பள்ளிகளை பராமரிக்க தனியார் நிறுவனங்கள் முடிவு

பெங்களூரு மாநகராட்சிக்குச் சொந்தமான ஏரிகள், பள்ளிகளைப் பராமரிக்க தனியார் தொழில் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதற்காக "நம்ம பெங்களூரு நம்முடைய பங்களிப்பு' என்ற திட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா அடுத்த மாதம் தொடக்கிவைக்கிறார்

இதுகுறித்து பெங்களூருவில் வெள்ளிக்கிழமை மேயர் சத்தியநாராயணா செய்தியாளர்களிடம் கூறியது:

பெங்களூருவில் மாநகராட்சிக்கு சொந்தமான ஏரிகள், பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள், சாலைகள், மருத்துவமனைகளை சமூகப் பொறுப்புடன் தத்தெடுத்து நிர்வகிக்க பல தொழில் நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

இதற்காக பிப்ரவரி 2-வது வாரத்தில் "நம்ம பெங்களூரு நம்முடைய பங்களிப்பு' என்ற திட்டத்தை முதல்வர் சித்தராமையா தொடக்கிவைக்கிறார்.

 இந்தத் திட்டத்தின்படி, தனியார் நிறுவனங்களுடன் 3 ஆண்டுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும்.

"நம்ம பெங்களூரு நம்முடைய பங்களிப்பு' என்ற திட்டத்தின் மூலம் பெங்களூருவில் 154 பள்ளிகள், 5 ஏரிகள், பல சாலைகள், பூங்காக்கள், மருத்துவமனைகள் வளர்ச்சி பெறும்.

இதைக் கண்காணிக்க மாமன்ற உறுப்பினர் சதாசிவா தலைமையில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் தூய்மை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த குறும்படம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.  பேட்டியின் போது, மாநகராட்சி ஆணையர் லட்சுமிநாராயணா, மாநகராட்சி ஆளும் கட்சித் தலைவர் அஸ்வத்நாராயண கெüடா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

தனியார் நிலத்தில் விளையாட்டு மைதானம்: மாநகராட்சி முடிவு

Print PDF

தினமலர்               06.01.2014

தனியார் நிலத்தில் விளையாட்டு மைதானம்: மாநகராட்சி முடிவு

சென்னை:திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், 60 ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வரும் தனியார் விளையாட்டு மைதானத்தை, வளர்ச்சி உரிமை மாற்றம் மூலம், மாநகராட்சி வசம் எடுத்து கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது.

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள விம்கோ நகரில், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான, மூன்று ஏக்கர் காலி நிலம் உள்ளது. அந்த இடத்தை, திருவொற்றியூர் பகுதி இளைஞர்கள், விளையாட்டு மைதானமாக பயன்
படுத்தி வருகின்றனர்.

திருவொற்றியூரில் வேறு எந்த இடத்திலும் விளையாட்டு மைதானம் இல்லாத நிலையில், அந்த நிலம், அந்த பகுதி இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்து வந்தது. திடீரென, தனியார் நிறுவனம், விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த பகுதிவாசிகள், மாநகராட்சி அந்த நிலத்தை பெற்று, விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் வளர்ச்சி உரிமை மாற்றம் மூலம், குறிப்பிட்ட நிலத்தை பெற்று, அங்கு விளையாட்டு மைதானம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

தற்போது, ஒரு லட்சத்து 32 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட அந்த இடத்தை மாநகராட்சி வசம் ஒப்படைத்தால், தனியார் நிறுவனத்திற்கு, நில பரப்பளவை காட்டிலும் இரண்டரை மடங்கு கூடுதலாக எப்.எஸ்.ஐ., (தள பரப்பு குறியீடு) கிடைக்கும். இது தொடர்பாக தனியார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,'தனியார் நிறுவனம் ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் எப்.எஸ்.ஐ., கொடுத்து நிலத்தை பெறுவோம். இல்லாவிட்டால் நிலம் கையகப்படுத்த சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என்றார்.

 


Page 3 of 42