Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - General

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தாய்ப்பால் கொடுக்கிறது மாநகராட்சி ஆணையாளர் பேச்சு

Print PDF

தினத்தந்தி              02.08.2013

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தாய்ப்பால் கொடுக்கிறது மாநகராட்சி ஆணையாளர் பேச்சு

 

 

 

 

 

 

தாய்பால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது என்று தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் நடந்த விழாவில் மாநகராட்சி ஆணையாளர் மதுமதி கூறினார்.

தாய்பால் வாரவிழா

உலக தாய்பால் வாரவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்டு மாதம் 1–ந் தேதி முதல் 7–ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவின் சார்பில் நேற்று உலக தாய்பால் வாரவிழா கொண்டாடப்பட்டது. டீன் எட்வின் ஜோ தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் ராஜேந்திர ரத்னு, துணை முதல்வர் நெப்போலியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் வெள்ளைபாண்டியன் வரவேற்று பேசினார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் எஸ்.மதுமதி, குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார். விழாவில் அவர் பேசியதாவது:–

குழந்தைக்கு ஒரு தாய், தனது தாய்ப்பாலை கொடுப்பதை பற்றி மக்களுக்கு சொல்லிக்கொடுக்க ஒரு விழா தேவையா என்று நினைக்க தோன்றுகிறது. இருந்தாலும் பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்காமல் சென்றதால் தான் இதுபோன்ற விழாக்கள் கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. ஐந்து அறிவு உள்ள பசு, சிங்கம், புலி, ஆடு உள்ளிட்ட விலங்குகளுக்கு தனது குட்டிக்கு பால் கொடுக்க சொல்லிக் கொடுக்கவா வேண்டும் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

தாயின் பாசம்

தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தானாகவே தாய் பால் கொடுக்கவேண்டும். தாய் பால் கொடுத்தால் தான் அந்த குழந்தைக்கு தாயின் மீது பாசம் இருக்கும். தாய் பால் கொடுக்கும் பழக்கத்தை பெண்கள் கடந்த 20 வருடங்களாக தான் தவிர்த்து வருகிறார்கள். இதற்கு மூல காரணம் கூட்டு குடும்ப வாழ்க்கை இல்லாதது தான். அடுத்தது வேகமான உலகத்தில் வாழ்வதும் ஒரு காரணம். வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் புட்டி பாலை கொடுத்து விட்டு பணிக்கு செல்வது உள்ளிட்ட காரணங்கள். இதனை தவிர்க்க வேண்டும். குழந்தைக்கு குறைந்தது 6 மாதங்களாவது தாய் பால் ஊட்டவேண்டும்.

அந்த காலத்தில் வேலைக்கு செல்கின்ற பெண்கள் தங்கள் வேலை செய்கின்ற வயல்களின் அருகில் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டி தூங்க வைப்பார்கள். குழந்தை அழுதவுடனே பாலுக்கு தான் அழுகிறது என்று தெரியும் உடனே குழந்தைக்கு பால் கொடுப்பார்கள். ஆனால் தற்போது உள்ள தாய்மார்களுக்கு குழந்தை எதுக்கு அழுகிறது என்று கூட தெரிவதில்லை. குழந்தைக்கு பால் கொடுப்பது பற்றி தாய்மார்களுக்கு, நர்சுகள் சொல்லி கொடுக்க வேண்டும்.

சீம்பாலில் அதிக சத்து

தாய்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உடல் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். பிறந்த உடனே வருகிற சீம்பாலில் அதிக சத்து உள்ளது. தாய்பால் கொடுக்காமல் குழந்தைகளுக்கு புட்டி பால் வழங்குவதால் அந்த குழந்தைக்கு முதலிலேயே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. முதலிலேயே சர்க்கரையின் சுவையை உணர்ந்துவிடுவதால் தொடர்ந்து சர்க்கரையை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இதனால் சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. தாய்பாலின் முக்கியத்துவத்தை உணர்ந்து தாய் பால் ஊட்டவேண்டும்.

குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் தாய்மார்கள் தங்களுக்கு தாய்பால் அதிகரிக்க கீரைவகைகள், பருப்புவகைகள், காய்கறி உணவுகளை அதிக அளவில் சாப்பிடவேண்டும்.

இவ்வாறு ஆணையாளர் எஸ். மதுமதி கூறினார்.

விழாவில் டாக்டர்கள் ஜெயமணி, பரிவர்த்தினி, நர்சிங் முதல்வர் ஈசுவரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குழந்தைகள் ஒப்படைப்பு

முன்னதாக ஆஸ்பத்திரியில் அனாதையாக விடப்பட்ட 2 பெண் குழந்தைகள் ஆஸ்பத்திரி மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த குழந்தைகளை அடைக்கலாபுரம் குழந்தைகள் பராமரிப்பு இல்ல நிர்வாகிகளிடம் டீன் டாக்டர் எட்வின் ஜோ ஒப்படைத்தார்.

 

துப்புரவுத் தொழிலாளியின் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி

Print PDF

தினமணி             12.07.2013

துப்புரவுத் தொழிலாளியின் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி

சோளிங்கர் பேரூராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றி, 4 மாதங்களுக்கு முன் இறந்த பழனி மகன் முனிசாமி கருணை அடிப்படையில் துப்புரவுப் பணியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான பணி நியமன ஆணையை பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.எல்.விஜயன், செயல் அலுவலர் ஆறுமுகம் ஆகியோர் வழங்கினர்.

பேரூராட்சி மன்ற உறுப்பினர் சேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

மாநகராட்சியில் கணினி வரி விதிப்பில் முறைகேடு: போலீஸ் விசாரணைக்கு உத்தரவு

Print PDF

தினமணி                28.06.2013

மாநகராட்சியில் கணினி வரி விதிப்பில் முறைகேடு: போலீஸ் விசாரணைக்கு உத்தரவு

திருநெல்வேலி மாநகராட்சியில் கணினி வரிவிதிப்பில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக காவல் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மேயர் விஜிலா சத்தியானந்த் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இம் மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயர் விஜிலா சத்தியானந்த் தலைமையில் மாமன்ற கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. துணை மேயர் பூ. ஜகநாதன், ஆணையர் த. மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டம் தொடங்கியதும் உத்தரகண்ட் மாநிலத்தில் மழை, வெள்ளத்திற்கு பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்தில் சிக்கித் தவித்த தமிழக பக்தர்களை மீóட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தது, வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசு சார்பில் ரூ. 5 கோடி வழங்கியது, அம்மா மினரல் வாட்டர் திட்டம் அறிவித்தது, பண்ணை பசுமை காய்கறி கடைகள் திறந்தது, கார் சாகுபடிக்கு பாபநாசம் அணையைத் திறக்க உத்தரவிட்டது போன்ற நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் 7 தீóர்மானங்களை மேயர் கொண்டு வந்தார். அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.

கணினி வரிவிதிப்பில் முறைகேடு: கூட்டத்தில் முதல் நபராக பேசிய காங்கிரஸ் உறுப்பினர் உமாபதி சிவன், திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற கணினி வரிவிதிப்பு முறைகேடு தொடர்பாக பிரச்னை எழுப்பினார். இந்த முறைகேடு தொடர்பாக மேயரும், ஆணையரும் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்து நீண்ட  விளக்கத்தை மேயர் விஜிலா சத்தியானந்த் அளித்தார். அதன் விவரம்:

 திருநெல்வேலி மாநகராட்சியில் கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் பராமரிப்பிற்கான பணி திருநெல்வேலியைச் சேர்ந்த தனியார் கணினி நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் மூலம் மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்கள் மற்றும் மைய அலுவலகத்தில் 10 கணினி விவரப் பதிவாளர் மற்றும் ஒரு உதவி கணினி அமைப்பாளர் ஆகியோர் கணினி தொடர்பான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு ஈடுபடுத்தப்பட்டுள்ள பணியாளர்களுக்கு சொத்துவரி பெயர் மாற்றம், குடிநீர் கட்டண பெயர் மாற்றும், பிறப்பு, இறப்பு பதிவுகள், கட்டட அனுமதி ஆணைகள் வழங்குதல் குறித்த விவரங்களை கணினியில் பதிந்து, கணினியில் இருந்து ஆணைகள் எடுப்பதற்காக தனி அடையாள குறியிட்டு எண் (மள்ங்ழ் ஐஈ) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி மேலப்பாளையம் மண்டலத்திற்கென 3 அடையாள குறியீட்டு எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த மூன்று அடையாள குறியீட்டு எண்களில் முறைகேடாகப் பதிவுகள் செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக கணினிப் பிரிவு அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 1.4.2012 முதல் 15.6.2013 வரை 56 வரிவிதிப்பு பதிவுகள் முறைகேடாகச் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

 இதில் மேலப்பாளையம் மண்டலத்திற்கு 52, தச்சநல்லூர் மண்டலத்திற்கு 3, திருநெல்வேலி மண்டலத்திற்கு ஒரு வரிவிதிப்பு பதிவுகள் செய்யப்பட்டிருந்தன.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மூன்று மண்டல உதவி ஆணையர்களும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் அறிக்கை சமர்பித்துள்ளனர். இந்த 56 வரிவிதிப்புகளும் விண்ணப்பம் ஏதும் இன்றியும், சம்பந்தப்பட்ட அலுவலர்களின் பரிந்துரை இன்றியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வழக்கமாக மாநகராட்சியில் ஏற்படுத்தப்படும் வரிவிதிப்புகள் அனைத்தும் உரிய விண்ணப்பம் பெற்று, கட்டணம் செலுத்தி சம்பந்தப்பட்ட வார்டு அலுவலக எழுத்தரால் கோப்பு ஏற்படுத்தப்பட்டு, அதில் வரிவசூலர், உதவி வருவாய் அலுவலர், உதவி ஆணையர், தேவைப்படும் இனங்களில் மாநகராட்சி ஆணையர் ஆகியோரின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே கணினியில் வரிவிதிப்புகள் குறித்த பதிவுகள் ஏற்படுத்த வேண்டும். அந்த 56 பதிவுகளிலும் இந்த நடைமுறைகள் ஏதும் பின்பற்றப்படவில்லை என சம்பந்தப்பட்ட உதவி ஆணையர்கள் தெரிவித்துள்ளதால் இதில் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரியவருகிறது.

இந்த மூன்று அடையாள குறியீட்டு எண்களை அந்த தனியார் கணினி நிறுவனத்தைச் சேர்ந்த 2 பேர் கையாண்டு வந்தனர். இந்த முறைகேடுகள் குறித்து புலன் வி+சாரணை நடத்தி அதன், விவரங்களை அளித்திட மாநகர காவல் ஆணையரிடம் கடந்த 20-ம் தேதி நேரில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் புலன் விசாரணைக்கு உத்தரவிட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 இந்த முறைகேட்டில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், அது எந்த அலுவலராக, அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மேயர்.

 


Page 4 of 42