Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - General

குப்பையில் இருந்து மின்சாரம் அண்ணா பல்கலைக்கழ்கம் திட்டம்

Print PDF

தினகரன் 15.08.2009

 

யாழ்ப்பாணம் மாநகராட்சி தேர்தல்: ராஜபக்சே கட்சி வெற்றி- வவுனியாவை விடுதலைப்புலி ஆதரவு கட்சி கைப்பற்றியது

Print PDF

மாலை மலர் 10.08.2009

யாழ்ப்பாணம் மாநகராட்சி தேர்தல்: ராஜபக்சே கட்சி வெற்றி- வவுனியாவை விடுதலைப்புலி ஆதரவு கட்சி கைப்பற்றியது

ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 09, 1:01 PM IST

கொழும்பு, ஆக. 9-

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப்பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள். இலங்கையின் வடகிழக்குப் பகுதியான முல்லைத்தீவு விடுதலைப்புலிகள் வசம் இருந்தது. அங்கு நடந்த இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் போருக்கு பின் தமிழர் பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகர சபைகளுக்கான (மாநகராட்சி) தேர்தல் நேற்று நடந்தது.

யாழ்ப்பாணம் மாநகர சபை தேர்தலில் அதிபர் ராஜபக்சேயின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சுயேச்சைகள் போட்டியிட்டன.

ஓட்டுப்பதிவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. உள்ளூர் போலீசாருடன் ராணுவத்தினர் வாக்குச்சாவடிகளில் குவிக்கப்பட்டனர். வாகன சோதனையும் நடந்தது. ஓட்டளிக்க வந்த ஆண்களும், பெண்களும் கடுமையாக சோதிக்கப்பட்ட பின்னரே வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் வாக்காளர்களிடையே ஓட்டுப்போடும் ஆர்வம் குறைந்தது. 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை மட்டுமே ஓட்டுக்கள் பதிவானது.

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 417 பேர். இவர்களில் 22,280 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். இதில் 1,358 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

இன்று அதிகாலையில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாநகர சபையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 23.

இதில் அதிபர் ராஜபக்சேயின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13 இடங்களை கைப்பற்றியது. இதன் மூலம் அந்த கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைத்தது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 8 இடங்களே கிடைத்தன.

இங்கு ஐக்கிய தேசிய கட்சியும் அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஈ.பி.டி.பி.யும் தேர்தல் வெற்றி பெற பல்வேறு யுத்திகளை கையாண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதேபோல் வவுனியா மாநகரசபை தேர்தலிலும் மந்தமான வாக்குப்பதிவு நடந்தது. மாலை 4 மணி வரை 25 சதவீத வாக்குகள் பதிவானது. ஓட்டுப்பதிவு முடிவடைந்தபோது 35 சதவீதம் பேர் ஓட்டு அளித்தனர்.

வவுனியாவிலும் இன்று அதிகாலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இங்கு மொத்த இடங்களின் எண்ணிக்கை 13. இதில் விடுதலைப்புலிகள் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்ட மைப்பு 8008 ஓட்டுகளைப் பெற்று 8 இடங்களை கைப்பற்றியது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 3,045 ஓட்டுகள் பெற்று 2 இடங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 587 ஓட்டுகள் பெற்ற 1 இடத்தை பெற்றது.

ஐக்கிய தேசிய கட்சி 7 இடங்களையும், ஜே.வி.பி. 1 இடத்தையும், மலையக மக்கள் முன்னணி 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

Last Updated on Tuesday, 11 August 2009 06:57
 

கலைஞர் காப்பீட்டு திட்டம்: அரசு ஆஸ்பத்திரிகளிலும் இலவச சிகிச்சை 5-ந்தேதி முதல் அடையாள அட்டை

Print PDF

மாலை மலர் 01.08.2009

கலைஞர் காப்பீட்டு திட்டம்: அரசு ஆஸ்பத்திரிகளிலும் இலவச சிகிச்சை 5-ந்தேதி முதல் அடையாள அட்டை

சென்னை, ஆக. 1-

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு உயிர் காக்கும் உயரிய சிகிச்சை இலவசமாக வழங்கப்பட வேண்டும் என் பதற்காக "கலைஞர் காப்பீட்டு திட்டம்" கடந்த 23-ந்தேதி தொடங்கப்பட்டது.

விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், கட்டிட, மண் பாண்ட, நெசவு தொழிலாளர்கள் உள்ளிட்ட நல வாரிய உறுப்பினர்களின் குடும்பம் பயன்பெறும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இத்திட்டம் அனைத்து கிராமங்களுக்கும் சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ. 72 ஆயிரத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள ஏழைகள் இத்திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள்.

இருதயம், சிறுநீரகம், மூளை, ரத்தக்குழாய் அடைப்பு, எலும்பு முறிவு, இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை, பக்கவாதம், பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட 51 வகையான நோய்களுக்கு உயிர் காக்கும் உயர்ந்த சிகிச்சை இலவசமாக அளிக் கப்படுகிறது.

ஒரு லட்சம் வரை மருத்துவ உதவியை ஏழை குடும்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். 4 வருடத்துக்கு இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 337 தனியார் மருத்துவ மனைகளில் இத்திட்டத்தின் கீழ் உயர் சிகிச்சையை இலவசமாக பெறலாம். திட்டம் தொடங்கிய குறுகிய காலத்தில் 14 பேர் பயன் அடைந்துள்ளனர்.

முதல் கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் மட்டும் நடைமுறைப்படுத்த "கலைஞர் காப்பீட்டு திட்டம்" அரசு ஆஸ்பத்திரிகளிலும் கொண்டு வர சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

கிராமப்புற மக்கள் பயன் அடைவதற்காக அரசு, மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட தலைமை அரசு ஆஸ் பத்திரிகளிலும்
இத்திட்டத்தை செயல் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதலாவதாக 14 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளில் இலவச உயர் சிகிச்சை விரைவில் கொண்டு வரப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குனர் எஸ். விநாயகம் கூறியதாவது:-

சென்னை அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கே.எம்.சி. ஆகிய 3 ஆஸ்பத்திரிகளிலும் உயிர் காக்கும் சிகிச்சை இலவச மாக அளிக்கப்படுகிறது. காப்பீட்டு திட்டத்தில் உள்ள 51 நோய்களில் பெரும் பாலான நோய்களுக்கு இந்த 3 மருத்துவமனைகளிலும் சிகிச்சை வழங்கப்படுகிறது.

எனவே ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ள வசதிகள் சென்னை மருத்துவமனை களில் ஏற்கனவே உள்ளதால் இவற்றில் காப்பீட்டு திட்டம் இன்னும் 10 நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும்.

இது தவிர செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, சேலம், கோவை, தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 11 அரசு மருத்துவ கல்லூரிகளில் உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கும் வசதிகள் விரைவில் செய்யப்படும்.

இதற்காக தனி வார்டு அமைக்கப்படும். நோயாளி களுக்கு தேவையான வசதி கள் செய்து தரப்படும். கழிவறை அமைத்தல், சுத்த மாக வைத்து பராமரித் தல் போன்ற பணிகளை மேற்கொள்ள அனைத்து மருத்துவ கல்லுரி முதல்வர் களும் அறிவுறுத்தப்பட்டுள் ளனர். ஒரு மாதத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடங்கப்படும்.

அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைகளிலும் இந்த வசதி செய்யப்பட்டு உயர் சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் கிராமஙக்ளில் உள்ள ஏழைகள் அரசு ஆஸ்பத்திரிகளில் எளிதாக சென்று உயிர் காக்கும் சிகிச் சையை பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறும் ஒரு கோடி ஏழை குடும்பங் களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. கிராமங்கள் தோறும் சென்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குடும்பத்தைச் சேர்ந்த வர்களை கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவ அடையாள அட்டை வழங்கப்படும்.

வருகிற 5-ந்தேதி முதல் நவம்பவர் 5-ந்தேதி வரை 3 மாதத்திற்கு இந்த பணி நடைபெறும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடி குடும்பத்தைச் சேர்ந்த 4 கோடி பேர் பயன் அடைகிறார்கள்.

 


Page 33 of 42