தினமணி 18.09.2009
குடிசை மேம்பாட்டு திட்டத்தில் 192 பேருக்கு ரூ. 33. 5 லட்சம் மானியம்
திருநெல்வேலி, செப். 17: திருநெல்வேலி மாநகராட்சியில் ஜவாஹர்லால் நேரு தேசிய புனரமைப்பு
ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், 192 பேருக்கு ரூ. 33,05,000 மானியமாக வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
இதற்கான விழா மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநகராட்சி மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தலைமை வகித்து, பயனாளிக்கு மானியத்தை வழங்கினார்.
மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
திருநெல்வேலி மண்டலத் தலைவர் எஸ். விஸ்வநாதன், மேலப்பாளையம் மண்டலத் தலைவர் எஸ்.எஸ். முகம்மது மைதீன், மாநகர பொறியாளர் கே.பி. ஜெய்சேவியர், செயற்பொறியாளர் வி. நாராயணன் நாயர், மாமன்ற உறுப்பினர்கள் பேபி கோபால், குமார், ராதா செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.