Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

குடிசைகள் இல்லாத இந்தியாவை உருவாக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு யோசனை

Print PDF

தினமணி 20.07.2009

குடிசைகள் இல்லாத இந்தியாவை உருவாக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு யோசனை

புதுதில்லி, ஜூலை 19: குடிசைகள் இல்லாத இந்தியாவை உருவாக்க நகரமைப்பு திட்டமிடல் மற்றும் இதர சட்டங்களில் உரிய திருத்தங்களைச் செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் நகரங்களில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளையும் கணக்கெடுத்து, குறைந்த செலவிலான வீட்டு வசதித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிலங்களை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் குமாரி செல்ஜா கடிதம் அனுப்பியுள்ளார். கடித விவரம்:

நகரங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையில் வீடுகளையும், அடிப்படை வசதிகளையும் அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். இதற்கான நிலங்களை ஒதுக்கீடு செய்ய நகரமைப்பு திட்டமிடல், நகர்ப்புறப் பகுதி வளர்ச்சி மற்றும் நகராட்சி சட்டங்களில் திருத்தங்களைச் செய்வது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.

நகரங்கள், பெருநகரங்களில் உள்ள குடிசைப் பகுதிகள் குறித்து உரிய முறையில் கணக்கெடுப்பு நடத்தி, அதுகுறித்த தகவல்களை 3 மாதங்களுக்குள் தொகுக்க வேண்டும்.

அதன்பிறகு, ஏழைகளுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையில் வீடுகள் கட்டிக் கொடுப்பதற்குத் தேவையான நிலங்களை ஒதுக்கீடு செய்வது, மானிய உதவி அளிப்பது, தொழில்நுணுக்க உதவிகளை அளிப்பது குறித்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கடந்த ஜூன் மாதம் 4 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவரும், நகரங்களில் குடிசைகளில் வசிக்கும் ஏழைகளுக்கான ராஜீவ் காந்தி வீட்டு வசதித் திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

குடிசைப் பகுதிகள் குறித்த தகவல்களைத் திரட்டி தொகுப்பது, குடிசைகள் இல்லாத நகரங்களை உருவாக்குவது, நகரங்களில் உள்ள ஏழைகளுக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுத்து, அதற்கான சொத்துரிமையை அவர்களுக்கே வழங்குவது உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய திட்டத்தைச் செயல்படுத்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு முந்தைய நகரமைப்புத் திட்டங்களில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏழைகளின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால், அவர்கள் நகரங்களில் புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து வசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த மக்களுக்கு உரிய வீடுகளைக் கட்டிக் கொடுத்து, அவர்கள் சட்டரீதியான உரிமைகளைப் பெறுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் நகரங்களில் குடிசைகளில் வசிக்கும் ஏழைகளின் மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டும் என அந்தக் கடிதத்தில் குமாரி செல்ஜா வலியுறுத்தியுள்ளார்.

 

நகரப் பகுதி ஏழைகளுக்கு 15 லட்சம் வீடுகள்: அமைச்சர் குமாரி செல்ஜா

Print PDF

தினமணி 20.07.2009

நகரப் பகுதி ஏழைகளுக்கு 15 லட்சம் வீடுகள்: அமைச்சர் குமாரி செல்ஜா

புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக சனிக்கிழமை அடிக்கல் நாட்டுகிறார் மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஓழிப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமை

புதுச்சேரி, ஜூலை 18: நாடு முழுவதும் நகரப் பகுதியில் வசிக்கும் ஏழைகளுக்கு வீட்டு வசதியை உறுதி செய்ய மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் 15 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது என்று மத்திய வீட்டு வசதி, நகர வறுமை ஒழிப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் குமாரி செல்ஜா சனிக்கிழமை கூறினார்.

புதுச்சேரி குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரெட்டியார்பாளையம் லாம்பர்ட் சரவணன் நகரில் 1136 அடுக்குமாடி தொகுப்பு வீடுகளுக்கு அடிக்கல், அதேப் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 1660 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா பேசியது:

நாடு முழுவதும் வீட்டு வசதிக்காக எங்கள் அமைச்சகம் ரூ.33 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.

ஏழைகளைப் பொறுத்தவரை வீட்டு வசதி மட்டுமின்றி அந்தப் பகுதியில் அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

நாடு மற்றும் நகரங்கள் வளரும்போது ஏழை மக்கள் பின்தங்கிவிடக் கூடாது. அவர்களுக்கும் வளர்ச்சியில் பங்கு இருக்கிறது.

மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசுதான் நகரப் பகுதி ஏழைகளின் விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

புதுச்சேரியைப் பொறுத்தவரை பல்வேறு வீட்டு வசதி திட்டங்களுக்காக ரூ.153 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா ஒரு குடிசையில்லா நாடாக மாற வேண்டும் என்று திட்டம் அறிவித்துள்ளது. அதில் புதுச்சேரி முன்னோடியாக இருக்க வேண்டும்.

புதுச்சேரிக்கு மேலும் ரூ.100 கோடி ஒதுக்க தயாராக இருக்கிறோம். இதற்கு ஏழை மக்கள் பயன்பெறும் வகையிலான சரியான திட்டம் தேவை என்றார் மத்திய அமைச்சர் செல்ஜா.

காரைக்கால் திருநள்ளாறு கோயில் நகரத் திட்டத்துக்கு ஹட்கோ மூலம் புதுச்சேரி அரசுக்குக் கடனாக ரூ.26 கோடிக்கான காசோலையை முதல்வர் வைத்திலிங்கத்திடம் மத்திய அமைச்சர் செல்ஜா வழங்கினார்.

மேலும் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.

மத்திய திட்டம், நாடாளுமன்ற விவகாரம், கலாசாரத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் கந்தசாமி, நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்எல்ஏக்கள் விசுவநாதன், கலைநாதன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

ஏழைகளுக்கு வீடுகள் கட்ட ரூ.21.41 லட்சம்

Print PDF

தினகரன் 14.07.2009

Last Updated on Wednesday, 15 July 2009 05:53
 


Page 68 of 69