Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

ரூ.1.58 கோடி பெற்று ஊழியர் குடியிருப்பை "தத்தெடுத்த' மாநகராட்சி

Print PDF
தினமலர்      24.07.2013

ரூ.1.58 கோடி பெற்று ஊழியர் குடியிருப்பை "தத்தெடுத்த' மாநகராட்சி

மதுரை:வீட்டுவசதிவாரியம் ரூ. 1.58 கோடி செலுத்தியதால், ரேஸ்கோர்ஸ், டி.ஆர்.ஓ., காலனி, டீன்ஸ் குடியிருப்பு பகுதிகளை, மதுரை மாநகராட்சி பராமரிக்க எடுத்துக் கொண்டது.

இப்பகுதிகளில் அடுக்குமாடி கட்டடங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இதில், பெரும்பாலும் அரசு ஊழியர்கள் வசிக்கின்றனர். வீட்டுவசதி வாரியம் பராமரிப்பில் இருந்த இவ்வீடுகள், மோசமான நிலையில் இருப்பதுடன், ரோடு, தெருவிளக்கு, சாக்கடை, குப்பை, குடிநீர், பாதுகாப்பு என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.

அடிப்படை வசதியை சரிசெய்யும்படி மனுகொடுத்தால், வீட்டுவசதி வாரியமும், மாநகராட்சியும், "இது எங்கள் பொறுப்பில் இல்லை' எனக்கூறி, தட்டிக் கழித்துவிடுகின்றன. இதனால் மேம்பாட்டுப் பணிகள் நடக்கவில்லை. இந்நிலையில், வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து, மாநகராட்சிக்கு இந்தப் பகுதிகளை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

கட்டடங்கள் அளவு அடிப்படையில் ரூ. ஒரு கோடியே 58 லட்சத்து 71 ஆயிரத்து 200ஐ, வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் சாலமன்ஜெயகுமார், மாநகராட்சிக்கு வழங்கினார். இதையடுத்து, இப் பகுதிகள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வந்தன. இனி இப்பகுதிகளின் அடிப்படை வசதிகளை மாநகராட்சியே பராமரிக்கும்.
 

குறைந்த வருவாய் பிரிவினருக்கு 900 வீடுகள் ஒதுக்கீடு வீட்­டு­வ­சதி வாரியம் முடிவு

Print PDF

தினமலர்          18.07.2013

குறைந்த வருவாய் பிரிவினருக்கு 900 வீடுகள் ஒதுக்கீடு வீட்­டு­வ­சதி வாரியம் முடிவு

சென்னை சோழிங்­கல்­லுாரில், பிரிபேப் தொழில்­ நுட்­பத்தை பயன்­ப­டுத்தி, 1,500 வீடுகள் கட்டும் திட்­டத்தில், 900 வீடு­களை, குறைந்த வருவாய் பிரி­வி­ன­ருக்கு ஒதுக்க, வீட்­டு­வ­சதி வாரியம் முடிவு செய்­துள்­ளது.

ஆட்­சேபம் சோழிங்­கல்­லுாரில், பிரி பேப்எனப்­படும், முன் தயா­ரிப்பு கட்­டு­மான தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி, 1,500 வீடுகள் கொண்ட புதிய அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பு கட்­டப்­படும் என, முதல்வர் ஜெய­ல­லிதா, சட்­ட­ச­பையில் அறி­வித்தார்.

இதற்­காக தேர்வு செய்யப்­பட்ட நிலங்கள், தனியார் வீட்டு மனை­க­ளாக இருந்­தவை. இதை புதிய திட்­டத்­துக்கு பயன்­ப­டுத்த ஆட்­சேபம் தெரி­வித்து, நிலத்தை இழந்தோர் இழப்­பீட்டுத் தொகை பெறாமல் உள்­ளனர்.

இருப்­பினும், இந்த திட்­டத்­துக்­கான நிர்­வாக ஒப்­புதல், கடந்த மாதம் நடந்த வாரிய நிர்­வாக குழு கூட்­டத்தில்
வழங்­கப்­பட்­டது.

இதை அடுத்து, ‘பிரி பேப்’ முறையில், அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பு திட்­டத்தை மேற்­கொள்­வ­தற்­கான ஒப்­பந்த புள்­ளிகள் கோரப்­பட்டு உள்­ளன.

900 வீடுகள்

இதுகுறித்து வீட்­டு­வ­சதி வாரிய உய­ர­தி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:

குறிப்­பிட்ட சில மாற்­றங்­க­ளுடன், 379 கோடி ரூபாயில், 10 மாடி­க­ளுடன், 1,500 வீடுகள் கொண்ட இத்­திட்­டத்தில், ஒவ்­வொன்றும், 1,076 சதுர அடி பரப்­ப­ளவில் மூன்று படுக்­கை­யறை கொண்ட, 160 வீடுகள், உயர் வருவாய் பிரி­வி­ன­ருக்கு ஒதுக்­கப்­படும்.

இரண்டு படுக்கை அறை­யுடன், 700 சதுர அடி பரப்­ப­ளவில், 440 வீடுகள் நடுத்­தர வருவாய் பிரி­வி­ன­ருக்கு ஒதுக்­கப்­படும்.

இதற்கு அடுத்­த­ப­டி­யாக, ஒற்றை படுக்­கை­ய­றை­யுடன், ஒவ்­வொன்றும், 484 சதுர அடி பரப்­ப­ளவில், 900 வீடுகள், குறைந்த வருவாய் பிரி­வி­ன­ருக்கு ஒதுக்­கப்­படும். மற்ற திட்­டங்­களை காட்­டிலும், குறைந்த வருவாய் பிரி­வி­ன­ருக்கு அதிக வீடுகள் கிடைக்கும் வகையில் இந்த ­திட்டம் வடி­வ­மைக்­கப்­பட்டு உள்­ளது.

வச­திகள்

குறைந்த வருவாய் பிரி­வி­ன­ருக்­கான வீடு­களில் ஒவ்­வொரு படுக்கை அறையும் ‘பால்­கனி’ வச­தி­யுடன் வடி­வ­மைக்­கப்­ப­டு­வது, இதன் இன்­னொரு சிறப்பு அம்சம். மேலும், தரை­த­ளத்­துடன் முதல் தளம் கொண்­ட­தாக, 2,000 சதுர மீட்­டரில் பொது பயன்­பாட்டு வளாகம் இக்­கு­டி­யி­ருப்பில் அமைக்­கப்­படும்.

இத்­திட்­டத்­துக்­கான வடி­வ­மைப்­பு­களை உரு­வாக்­கு­வது மற்றும் கட்­டு­மான பணி­களை மேற்­கொள்­வ­தற்­கான ஒப்­பந்­த­ புள்­ளிகள் கோரப்­பட்­டுள்­ளன. அடுத்த ஒரு மாதத்­துக்குள், ஒப்­பந்­த­தா­ரரை தேர்வு செய்யும் பணிகள் முடிக்­கப்­படும். இவ்­வாறு அவர் கூறினார்.
 

குடிசைகளை கான்கிரீட் வீடாக்க வாய்ப்பு

Print PDF

தினமணி             11.07.2013

குடிசைகளை  கான்கிரீட் வீடாக்க வாய்ப்பு

கோவை மாநகராட்சிப் பகுதியில் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற விண்ணப்பம் பெறுவதற்கான சிறப்பு முகாம் வரும் 15-ஆம் தேதி நடைபெறுகிறது.

 இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் க.லதா புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

 கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்படும் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் குடிசைகள் மற்றும் ஓட்டு வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

 இதுவரை இத்திட்டத்தின் கீழ் பயனடையாதவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 நிலத்தின் பட்டா மற்றும் பத்திர நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், பட்டாதாரர் இறந்திருந்தால் அவரது வாரிசுகளுக்கான சான்றிதழ்கள் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும்.

 கிழக்கு மண்டல அலுவலகத்தில் வரும் 15-ஆம் தேதி, வடக்கில் 16, தெற்கில் 17, மேற்கில் 18, மத்திய மண்டல அலுவலகத்தில் வரும் 19-ஆம் தேதிகளில் முகாம் நடைபெற உள்ளது.

 மேற்கண்ட முகாம்களில் மக்கள் பங்கேற்று விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து மத்திய, மாநில அரசின் மானியங்களைப் பெற்று குடிசைகள் மற்றும் ஓட்டு வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றிக் கொள்ளலாம்.

 


Page 8 of 69