Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

குடிசை மேம்பாட்டு திட்டம் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF
தினமலர்     07.05.2013

குடிசை மேம்பாட்டு திட்டம் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு


ஓசூர்: ஓசூர் நகராட்சி குடிசைப்பகுதியில், ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஏழை, எளிய மக்கள் வீடுகள் கட்ட ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டத்தில், 806 பயனாளிகளுக்கு, 90 ஆயிரம் ரூபாய் வீதம், ஏழுகோடி ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

ஓசூர் நகராட்சி, 45 வார்டுகளில் குடிசைப்பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை, எளியோர் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியின் கீழ் வீடுகள் கட்ட கொடுக்க ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட பயனாளிகளுக்கு மொத்தம், 90 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், அப்பகுதியில் தார்சாலை வசதி, பூங்கா உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நகராட்சி, 45 வார்டுகளையும் சேர்த்து மொத்தம், 806 குடிசைப்பகுதி பயனாளிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு வீடுகள் கட்ட, 90 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க ஆணை வழங்கப்படுகிறது.

நகராட்சி வார்டு அந்திவாடி காலனி குடிசைப்பகுதியை சேர்ந்த, 25 பயனாளிகளுக்கு நேற்று குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தில் வீடு கட்ட நிதியுதவி ஆணை பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கவுன்சிலர் வாசுதேவன் தலைமை வகித்தார். நகராட்சி துணைத்தலைவர் ராமு, நகரமைப்பு அலுவலர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணரெட்டி, 25 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட நிதியுதவி பத்திரங்களை வழங்கி பேசினார். நகராட்சி தலைவர் பாலகிருஷ்ணரெட்டி பேசினார்.இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு, 22 ஆயிரத்து, 500 ரூபாய் வீதம் நான்கு தவணையாக நகராட்சி வழங்குகிறது. நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 

திருவொற்றியூரில் 3,616 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

Print PDF
தினமணி               07.05.2013

திருவொற்றியூரில் 3,616 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

http://media.dinamani.com/2013/05/07/jay3.jpg/article1578633.ece/alternates/w460/jay3.jpg

சென்னை திருவொற்றியூரில் 3 ஆயிரத்து 616 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம், இந்தக் குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

குடிசைப் பகுதிகளில் வறிய நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் போன்ற இன்னல்களுக்கு ஆளாகாமல் நல்ல உறைவிடத்தில் சுகாதாரமான சூழ்நிலையில் வாழ தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை திருவொற்றியூரில் அகில இந்திய வானொலி நில திட்டப் பகுதியில் ரூ.139 கோடியில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியிருப்புகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தக் குடியிருப்புகள் உலக வங்கி நிதியுதவியுடன் கூடிய அவசர சுனாமி மறுகுடியமர்வு திட்டம் மற்றும் மாநில நிதியுதவியுடன் தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் 113 கட்டட தொகுதிகளாகக் கட்டப்பட்டுள்ள 3 ஆயிரத்து 616 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 கிராமங்களிலுள்ள 1,941 பயனாளிகள், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 பகுதிகளிலுள்ள 1,014 பயனாளிகள், கட்டமைப்பு விரிவாக்கத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட 661 பயனாளிகள் என மொத்தம் 3,616 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

திறப்பு விழா நிகழ்ச்சியில், வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், வீட்டுவசதித் துறை செயலாளர் பணீந்திரரெட்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.    
 

பத்மநாபபுரம்: ரூ.50 லட்சத்தில் துப்புரவுப் பணியாளர் குடியிருப்பு

Print PDF
தினமணி        12.04.2013

பத்மநாபபுரம்: ரூ.50 லட்சத்தில் துப்புரவுப் பணியாளர் குடியிருப்பு


பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ. 50 லட்சத்தில் கட்டப்படவுள்ள துப்புரவுப் பணியாளர் குடியிருப்பு  கட்டுமானப் பணியை அமைச்சர் கே.டி. பச்சைமால்  தொடங்கி வைத்தார்.

பத்மநாபபுரம் நகராட்சி வார்டு எண் 13- கொல்லக்குடிமுக்கில் உள்கட்டமைப்பில் விடுபட்ட இனங்கள் நிரப்புதல் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சத்தில் துப்புரவுப் பணியாளர் குடியிருப்பு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான விழா கொல்லக்குடிமுக்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர்.சத்யாதேவி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பீர்முகமது, உறுப்பினர்கள் ஸ்ரீ கலா, ஸ்ரீகுமார் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கே.டி. பச்சைமால் கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் மேத்யூஜோசப்,  பொறியாளர் கிரேஸ் அன்னபெர்லி, சுகாதார அலுவலர்  டெல்விஸ்ராஜ், மேலாளர் குமார், அதிமுக அவைத் தலைவர் சிவகுற்றாலம், நகரச் செயலர் ஜகபர்சாதிக் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 


Page 13 of 69