Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

ஏழைகளுக்கு 3,000 வீடுகள் கட்ட 31 ஏக்கர் : மூன்று இடங்களில் நிலம் தேர்வு

Print PDF

தினமலர்      27.08.2012

ஏழைகளுக்கு 3,000 வீடுகள் கட்ட 31 ஏக்கர் : மூன்று இடங்களில் நிலம் தேர்வு

சென்னை : துரைப்பாக்கம், பெரும்பாக்கம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறையை அடுத்து, ஏழை மக்களுக்கு குடியிருப்பு கட்ட, மூன்று இடங்களில், 31 ஏக்கர் நிலங்களை குடிசை மாற்று வாரியம் தேர்வு செய்துள்ளது.நகர்ப்புற பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஜவகர்லால் தேசிய நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், 2005ல் துவக்கப்பட்டது. இதன்படி, நகர்ப்புற பகுதிகளில், சாலைகள், பேருந்து நிறுத்தம், குடி நீர் வினியோகம், கழிவு நீர் வடிகால் போன்ற வசதிகள் மேற்கொள்ளப்படும்.இத்துடன், நகர்ப்புற ஏழை மக்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களில் வசிப்பவர்களுக்கும், மாற்று குடியிருப்பு கட்டவும் திட்டமிடப்பட்டது.
 
இதன்படி, தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை நகரங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டன.குடியிருப்பு திட்டம்இம்மூன்று நகரங்களிலும் சேர்த்து, 44,870 வீடுகளை, 1,939 கோடி ரூபாய் செலவில் கட்ட திட்டமிடப்பட்டது. இதில், சென்னையில் மட்டும், 1,338.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 29,864 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக, ஒக்கியம் துரைப்பாக்கத்தில் எழில் நகர், பெரும்பாக்கம் எழில் நகர், பெரும்பாக்கம் ஒன்று, இரண்டு ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன. இதில், இதுவரை, 26,702 வீடுகள் கட்டுவதற்கான நிலம் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், எஞ்சிய, 3,162 வீடுகள் கட்டுவதற்கு இப்பகுதிகளில் நிலம் இல்லை என்பதால் வேறு பகுதிகளில் இதற்கான நிலங்களை தேட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
 
இதேபோல, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி பகுதிகளிலும் இனி புதிதாக குடியிருப்புகள் கட்ட இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, புதிய இடங்களில் தேவையான நிலங்களை தேர்வு செய்து கையகப்படுத்தும் பணிகளை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.மூன்று இடங்களில்...இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத குடிசை மாற்று வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டத்தில் நிலுவையில் உள்ள, 3,162 வீடுகளுக்கு தேவையான நிலம் பெறுவது மற்றும் எதிர் காலத்தில் உருவாக்கப்படும் புதிய திட்டங்களுக்கும் தேவையான நிலங்களை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதற்காக, புரசைவாக்கத்தில் திடீர் நகர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோழிங்கநல்லூரை அடுத்த நாவலூர், திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி செல்லும் வழியில் உள்ள கூடபாக்கம் இடங்களில் காலியாக உள்ள, 31 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதில், முதல்கட்டமாக, நாவலூரில், 2,144 வீடுகளும், கூடபாக்கத்தில், 1,024 வீடுகளும் கட்டுவதற்கான பணிகள் துவக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Monday, 27 August 2012 06:59
 

குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டப்பணி நகராட்சி தலைவர் ஆலோசனை

Print PDF

தினமலர்     23.08.2012

குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டப்பணி நகராட்சி தலைவர் ஆலோசனை

தஞ்சாவூர்: தஞ்சையில் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்துவது குறித்து நகராட்சி தலைவர் சாவித்திரி தலைமையில் கவுன்சிலர்கள் ஆலோசனை நடத்தினர்.தஞ்சை நகராட்சி மூலம் ஒருங்கிணைந்த குடிசைப்பகுதி குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் தஞ்சை நகராட்சி கூட்ட அரங்கில் தலைவர் சாவித்திரி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மணிகண்டன், ஆணையர் ஜானகி, உதவி நகரமைப்பு அலுவலர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.இதைத்தொடர்ந்து, நகராட்சி தலைவர் சாவித்திரி, ஆணையர் ஜானகி ஆகியோர் பேசியதாவது:தஞ்சை நகராட்சியில் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தில் 1,180 பயனாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, 480 வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

350 வீடுகள் கட்டுமான பணி நடந்து வருகிறது. மீதமுள்ள 350 பயனாளிகளுக்கு சில நடைமுறை சிக்கலால் பணி துவங்கப்படவில்லை. அதனால், பயனாளிகளை அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் நேரடியாக அணுகி குடிசைப்பகுதி குடியிருப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த உதவ வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.கவுன்சிலர்கள் மதியழகன், சதீஸ்குமார், பாலசுப்பிரமணியன், அருளழகன், கார்த்திகேயன், சுரேஷ்குமார், கிறிஸ்த்துவ மேரிதாஸ், அமுதா, ரம்யா, ஜெயலட்சுமி, காயத்ரி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

கான்கிரீட் வீடு கட்ட நிதியுதவி

Print PDF

தினமணி                    04.08.2012

கான்கிரீட் வீடு கட்ட நிதியுதவி

தஞ்சாவூர்,  ஆக. 3: நகராட்சிப்  பகுதிகளில் குடிசை  வீட்டில்   வசிப்பவர்கள் கான்கிரீட் வீடு கட்டிக்கொள்ள அரசு மானியத்துடன் நிதி உதவி அளிப்பபடுகிறது என்றார் தஞ்சாவூர் நகராட்சி ஆணையர் பு. ஜானகி ரவீந்திரன்.

 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நகராட்சிப் பகுதிகளில் குடிசை வீடுகளில்   வாழ்பவர்கள், கான்கிரீட் வீடு கட்டிக் கொள்ள மத்திய-மாநில அரசுகள் ரூ. 72 ஆயிரம் மானியத்துடன் குறைந்தபட்சம் 270 சதுர அடிகான்கிரீட் குடியிப்பு கட்டிக்கொள்ள நிதி உதவி வழங்குகின்றன.

இந்தத் திட்டத்தை தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சி குடிசைப் பகுதி வாழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மானியம் பெறும் குடிசைவாசிகளுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் புதைவடிகால் சாக்கடை இணைப்பு இலவசமாக வழங்கப்படும். மானியத் தொகையைப் பெற, பயனாளி குடிசைப்பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

குடியிருப்பு அமையவுள்ள மனை இடம் குறைந்தபட்சம் 200 சதுர அடி அளவில் பயனாளிகளின் பெயரில் பட்டா, கிரயப் பத்திரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ரூ. 20 ஆயிரம் வங்கிக் கடன் பெற்றுத் தரப்படும்.

பயனாளிகள் வரும் 10-ம் தேதிக்குள் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகங்களில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்றார் அவர்.

 


Page 16 of 69