Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Slum Development / Housing

9600 கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் மாநகராட்சியில் இன்று அவசரகூட்டம்

Print PDF

தினகரன்                    14.12.2010

9600 கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் மாநகராட்சியில் இன்று அவசரகூட்டம்

கோவை, டிச.14: கோவை மாநகராட்சியில், நீர் நிலையில் வசிப்போருக்கான கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் குறித்து இன்றைய அவசர கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

கோவை மாநகராட்சியின் அவசர கூட்டம் இன்று நடக்கிறது. இதில், கோவை மாநகராட்சியின் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைப்பது குறித்து விவாதிக்கப்படும். கோவை மாநகராட்சி சார்பில், 443.55 கோடி ரூபாய் செலவில் குடிசைகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டும் திட்டம் துவங்கியது. 173 குடிசைப்பகுதியில் உள்ள வீடுகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இதுவரை 5858 குடிசைகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டப்பட்டது. தற்போது நீர் நிலை புறம்போக்கில் வசிக்கும், 9600 பயனாளிகள் குடும்பத்திற்காக, உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில் 6 மாடி கொண்ட கான்கிரீட் வீடு கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டது. 184 கோடி ரூபாய் செலவில் வீடு கட்ட முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கான மண் ஆய்வு நடந்தது. இந்நிலையில், வீடு கட்டும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்க தயாராகி விட்டது. இன்றைய கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் இடம் பெறும். உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாகத்தில், 8 ஏக்கர் நிலத்தை யும், வீடு கட்டும் திட்டத்தையும் குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைப்பது குறித்து கவுன்சிலர்களின் கருத்து பெறப்படவுள்ளது.

பில்லூர் 2வது குடிநீர் திட்டத்தில், ராமகிருஷ்ணாபுரம் மேல்நிலை நீர் தேக்க தொட்டி வளாகத்திலிருந்து கிழக்கு மண்டலத்தில் சில பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்ல ஆயிரம் மி.மீ விட்டம் கொண்ட குழாய் அமைக்கப்படவுள்ளது. 8.5 கோடி ரூபாய் செலவில், 11 வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் குழாய் அமைக்க அனுமதி கோரும் தீர்மானம் இடம்பெறவுள்ளது. நகர் பகுதி ரோடுகளை, சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் சீரமைக்கும் திட்டம் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும். .கம்யூ., கவுன்சில் குழு தலைவர் புருசோத்தமன் கூறுகையில், " சங்கனூர் பள்ளம், நகரில் உள்ள 8 குளங்கள் மற்றும் வாய்க்கால் கரை பகுதியில் வசிப்போர் குறித்த கணக்கெடுப்பு விவரம் அறிவிக்கப்படவில்லை. யாருக்கு வீடு என தெரியாமல் எப்படி வீடு கட்ட முடியும். மாநகராட்சி நிர்வாகத்தால் ஏன் வீடு கட்ட முடியவில்லை என்பது தெரியவில்லை. பல்வேறு விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதித்து பேசவுள்ளோம், " என்றார்.

 

சென்னையில் 1,370 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாறுகிறது

Print PDF

தினமலர்          09.12.2010

சென்னையில் 1,370 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாறுகிறது

சென்னை: சென்னை நகரில், 1,370 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட உள்ளதாக, மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.ஜவகர்லால் நேரு நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து குடிசைப் பகுதிகளில் உள்ள வீடுகளை கண்டறிந்து, கான்கிரீட் வீடுகளாக கட்டும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஒரு வீட்டிற்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவிடப்படும் வகையில், 10 சதவீத தொகையை பயனாளி ஏற்றுக் கொள்ள வேண்டும், 50 சதவீத தொகையை மத்திய அரசும், 40 சதவீத தொகையை மாநில அரசும் வழங்கும்.சைதாப்பேட்டையில் 24 பயனாளிகளுக்கு கான்கிரீட் வீட்டிற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை மேயர் சுப்ரமணியன் நேற்று வழங்கி கூறும் போது, "நகரில் 1,370 குடிசைகள் கண்டறியப்பட்டு கான்கிரீட் வீடுகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 315 குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக கட்டும் பணி முடிவடைந்துள்ளது. 865 கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி தற்போது நடக்கிறது. மீதமுள்ள 230 வீடுகளின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும்' என்றார்.

 

சென்னையில் 1370 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றம் மேயர் தகவல்

Print PDF

தினகரன்            09.12.2010

சென்னையில் 1370 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றம் மேயர் தகவல்

சென்னை, டிச.9: சென்னையில் 1,370 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட உள்ளன என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது. மேயர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று 24 பேருக்கு கான்கிரீட் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார். விழாவில் மேயர் பேசியதாவது:

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசும், தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் இணைந்து குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சென்னையில் 1,370 குடிசைகள் கண்டறியப்பட்டுள்ளன.

இதில் 315 குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் 825 குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது. மீதியுள்ள 230 குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும்.

ஒரு கான்கிரீட் வீட்டுக்கு ரூ 1.3 லட்சம் செலவிடப்படுகிறது. இதில் வீட்டு உரிமையாளர் 10 சதவீதம் செலவிட வேண்டும். 40 சதவீத தொகையை மாநில அரசும், 50 சதவீத தொகையை மத்திய அரசும் வழங்குகிறது. முதல்வரின் குடிசையில்லா நகரமாக்கும் திட்டத்தின் படி இந்த பணி விரைந்து முடிக்கப்படும். இவ்வாறு மேயர் பேசினார்.

ஒரு கான்கிரீட் வீட்டுக்கு ரூ1.3 லட்சம் செலவிடப்படுகிறது. இதில் வீட்டு உரிமையாளர் 10 சதவீதம் செலவிட வேண்டும். 40 சதவீத தொகையை மாநில அரசும், 50 சதவீத தொகையை மத்திய அரசும் வழங்குகிறது. முதல்வரின் குடிசையில்லா நகரமாக்கும் திட்டத்தின் படி இந்த பணி விரைந்து முடிக்கப்படும். இவ்வாறு மேயர் பேசினார்.

 


Page 18 of 69