Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Print PDF

 தினத்தந்தி         04.08.2021

சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு


சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் சென்னையில் நீண்ட நாட்களாக கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே பொதுமக்களுக்கு அதிகளவில் அளிக்கப்பட்டு வந்து நிலையில், மீண்டும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. 
 
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று எந்த மையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவாக்சின் தடுப்பூசியை பொறுத்தவரை ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 150 பேருக்கும், நேரடியாக வருபவர்கள் 250பேருக்கும் தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ரூ.6 கோடியில் 9 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தி  இந்து     20.07.2017

ரூ.6 கோடியில் 9 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகரப் பகுதியில் கூடுதலாக 9 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை ரூ.6 கோடியே 90 லட்சம் செலவில் அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மாநகராட்சி பராமரிப்பில் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சராசரியாக தினமும் சிகிச்சைக் காக 160 புறநோயாளிகள் வருகின்றனர். அனைத்து சுகாதார நிலையங்களிலும் சேர்த்து மாதம் சுமார் 4 லட்சத்து 63 ஆயிரம் நோய்களிலும், ஆண்டுக்கு 55 லட்சம் 80 ஆயிரம் நோயாளிகளும் சிகிச்சைக்காக வருகின்றனர். நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவரைப் பார்க்க நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி யுள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி சார்பில் மேலும் 9 இடங்களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

நோயாளிகள் காத்திருக்காமல் விரைவாக மருத்துவர்களைப் பார்த் துச் செல்லவும், நோயாளிகள் எளிதில் அணுகும் வகையில் அரு காமைப் பகுதியில் மருத்துவ மனைகள் இருக்க வேண்டும் என்பதற்காகவும் மேலும் 9 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க இருக்கிறோம். அவை 11-வது வார்டு (திரு வொற்றியூர்), 14-வது வார்டு (மல்லிகாபுரம்), 34-வது வார்டு (விவேகானந்தர் நகர்), 36-வது வார்டு (சர்மா நகர்), 48-வது வார்டு (வி.ஆர்.நகர்), 153-வது வார்டு (போரூர் சக்தி நகர்), 145-வது வார்டு ( நெற்குன்றம் பெருமாள் கோயில் தெரு), 197-வது வார்டு (நங்கநல்லூர்), 155-வது வார்டு (ராயபுரம் பஜனை கோயில் தெரு) ஆகிய இடங்களில் கட்டப்பட உள்ளன என்றார்.

 

தூத்துக்குடியை மிரட்டும் டெங்கு காய்ச்சல்: சென்னையில் இருந்து சிறப்பு குழுக்கள் வருகை - 4 வார்டுகளில் ஒருங்கிணைந்த கூட்டு தடுப்பு பணி

Print PDF

 தி இந்து       24.03.2017

தூத்துக்குடியை மிரட்டும் டெங்கு காய்ச்சல்: சென்னையில் இருந்து சிறப்பு குழுக்கள் வருகை - 4 வார்டுகளில் ஒருங்கிணைந்த கூட்டு தடுப்பு பணி

தூத்துக்குடியில் டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் பேசினார். படம்: என்.ராஜேஷ்.
தூத்துக்குடியில் டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் பேசினார். படம்: என்.ராஜேஷ்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து, உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் தூத்துக்குடியில் முகாமிட்டு டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மாநகராட்சியில் நேற்று நான்கு வார்டு பகுதியில் ஒருங்கிணைந்த கூட்டு டெங்கு தடுப்புப் பணிகள் நடைபெற்றன.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடந்த 2 மாதங்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. சராசரியாக 100 பேர் வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை குழு

மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொண்ட போதிலும், டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பரவி வருகிறது. சென்னையில் இருந்து சுகாதார துறை இணை இயக்குநர்கள் சரவணன் (கொள்ளை நோய்), பிரேம்குமார் (தொற்றுநோய்), முதன்மை பூச்சியியல் வல்லுநர் அப்துல் காதர் ஆகியோர் தலைமையிலான உயர் அதிகாரிகள் குழுவினர் தூத்துக்குடியில் முகாமிட்டு டெங்கு தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஒருங்கிணைந்த பணி

இதையடுத்து மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் தலா ஒரு வார்டு தேர்வு செய்யப் பட்டு, ஒருங்கிணைந்த கூட்டு டெங்கு தடுப்பு பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.

வடக்கு மண்டலத்தில் 3-வது வார்டுக்கு உட்பட்ட ராஜகோபால் நகர், பாரதி நகர், நிகிலேசன் நகர், பால்பாண்டிநகர் பகுதிகள், மேற்கு மண்டலத்தில் 34-வது வார்டுக்கு உட்பட்ட தபால் தந்தி காலனி, கிழக்கு மண்டலத்தில் 20-வது வார்டுக்கு உட்பட்ட திரேஸ்புரம், தெற்கு மண்டலத்தில் 49-வது வார்டுக்கு உட்பட்ட வள்ளிநாயகிபுரம் பகுதியில் இந்த பணி நடைபெற்றது.

வீடு வீடாக பணியாளர்கள் சென்று டெங்கு கொசு ஆதாரங் களை கண்டறிந்து அழித்தனர். கொசுப் புழுக்களை அழிக்க அபேட் மருந்து தெளித்தனர். வீடுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் புகை மருந்து அடிக்கப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

மருத்துவ முகாம்கள்

மேலும், 4 வார்டு பகுதிகளிலும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, காய்ச்சல் உள்ளவர்கள் பரிசோதிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப் பட்டன. தபால் தந்தி காலனியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாநகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி, பல்வேறு செவிலியர் கல்லூரி மாணவியரும், நகரில் வீடுகள் தோறும் சென்று டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் கே.ராஜாமணி தொடங்கி வைத்தார். சென்னையில் இருந்து வந்துள்ள இணை இயக்குநர்கள் சரவணன், பிரேம்குமார், முதன்மை பூச்சியியல் வல்லுநர் அப்துல் காதர் மற்றும் மாநகர நல அலுவலர் பிரதீப் வி.கிருஷ்ணகுமார், 4 துணை இயக்குநர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுபோன்ற ஒருங்கிணைந்த கூட்டு தடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்..

ஆலோசனைக் கூட்டம்

டெங்கு காய்ச்சல் பரவாமல் கட்டுப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அவசர ஆலோசனை நடத்தினார். மாநகராட்சி ஆணையர் கே.ராஜாமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 500 பேர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 60 வார்டுகளிலும், தலா ஒரு சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில் மூன்று கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். முக்கிய இடங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

சிமென்ட் குடிநீர் தொட்டியில் மூடி போடாமல் இருந்தாலோ, குடிநீர் தொட்டியிலிருந்து கழிவு நீர் வெளியேறும் வண்ணம் குழாய் இல்லாமல் இருந்தாலோ சம்பந்தப்பட்ட வீட்டில் குடிநீர் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படும். அபராதம் விதிக்கப்படும். தனியார் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் போது கண்டிப்பாக குளோரின் கலந்து வழங்க வேண்டும். என்றார் அவர்.

 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 519