Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மாநகராட்சி மகப்பேறு மையங்களில் பிரசவ எண்ணிக்கை இரட்டிப்பு!

Print PDF

 தினமலர்     19.08.2014

 மாநகராட்சி மகப்பேறு மையங்களில் பிரசவ எண்ணிக்கை இரட்டிப்பு!

கோவை : கோவை மாநகராட்சி மகப்பேறு மையங்களில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, பிரசவ எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

கோவை மாநகராட்சியில், 20 மகப்பேறு மையங்களில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், சிகிச்சை பெருகின்றனர். கடந்தாண்டு, ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்றாலும், 1,136 சுகப்பிரசவங்கள் மட்டுமே நடந்தன.மாநகராட்சி மகப்பேறு மையத்திற்கு கர்ப்பகால தொடர் சிகிச்சைக்கு வரும் பெண்கள், 'சிசேரியன்' வசதி இல்லாததால், பிரசவத்துக்கு அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அதனால், சீத்தாலட்சுமி மகப்பேறு மையத்தில், 'சிசேரியன்' அறுவை சிகிச்சை வசதி ஏற்படுத்தி பிரசவம் பார்க்கப்படுகிறது.

மாநகராட்சி சுகாதாரப்பிரிவு மூலம் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு நடவடிக்கைகளால், கடந்த ஜன., மாதம் முதல் பிரசவ எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தற்போது, சிசேரியன் பிரிவும் துவங்கப்பட்டுள்ளதால், பிரசவ எண்ணிக்கை மேலும், 30 சதவீதம் உயரும் என, அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, பிரசவ எண்ணிக்கை இரட்டிபாகியுள்ளது.மகப்பேறு மையங்களில், ஜனவரியில் ௧௫௪, பிப்ரவரியில் 147, மார்ச்சில் 177, ஏப்ரலில் 182, மே மாதம் 200, ஜூன் மாதம் 222, ஜூலையில் 243, ஆகஸ்ட்டில் கடந்த 14ம் தேதி வரை 110 பிரசவங்கள் நடந்துள்ளன. மகப்பேறு மையங்களில் இந்தாண்டு இதுவரை 1,435 குழந்தைகள் பிறந்துள்ளன. கடந்த ஆண்டு குழந்தை பிறப்புடன் ஒப்பிடும் போது, இரட்டிப்பு எண்ணிக்கை என்பதால், மாநகராட்சி அதிகாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மீதமுள்ள நான்கு மாதங்களிலும், குழந்தை பிறப்பு எண்ணிக்கை குறையாமல், சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அருணா கூறுகையில், ''மகப்பேறு மையத்தில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு, பிரசவத்திற்கு முன்பாக முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு உதவித்தொகையாக நான்காயிரம் ரூபாயும், குழந்தை பிறந்ததும் இரண்டாம் கட்ட நிதியுதவியாக நான்காயிரமும், குழந்தைக்கு முத்தடுப்பு ஊசி போட்டு முடித்ததும் மூன்றாம் கட்டமாக நான்காயிரமும் நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகளுக்கு தலா 600 ரூபாய்க்கு ஜனனிசுரக்ஷா யோஜனா திட்டத்தில் டெபாசிட் செய்யப்படுகிறது. சுகாதாரம், அடிப்படை வசதிகள், மருத்துவ மேம்பாடுகளை இதேபோன்று தொடர்ந்து கடைபிடிக்கவும், பிரசவ எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.

'சிறப்பு மருத்துவ கவனிப்பு' : கமிஷனர் லதா கூறுகையில், ''மகப்பேறு மையங்களில் கடந்த ஆண்டு சராசரியாக 79 குழந்தைகள் பிறந்தன. இந்தாண்டு ஜூலை மாதம் மட்டும் 243 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தாண்டு குழந்தை பிறப்பு சதவீதம் இரண்டு மடங்கு அளவுக்கு மேல் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அரசு நிதியுதவி, மருத்துவ உதவிகள், உதவி பொருட்கள், சத்தான உணவு, ஒவ்வொரு தாய்மாருக்கும் சிறப்பு மருத்துவ கவனிப்பு உறுதியாக கிடைப்பதால், மகப்பேறு மையங்களில் பிரசவ எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாம்'' என்றார்.

 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சிறப்பு தாய் சேய் நல மருத்துவ முகாம்கள் நாளை தொடங்குகிறது

Print PDF

தினத்தந்தி           17.02.2014

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சிறப்பு தாய் சேய் நல மருத்துவ முகாம்கள் நாளை தொடங்குகிறது

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சிறப்பு தாய், சேய் நல மருத்துவ முகாம்கள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

மருத்துவ முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து கர்ப்பிணி தாய்மார்கள், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் சிறப்பு தாய் சேய் நல மருத்துவ முகாம்கள் நாளை (திங்கட்கிழமை), நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை), 20–ந் தேதி நடக்கிறது.

முகாம்கள் குரூஸ்புரம் மகப்பேறு மையம், ஸ்டேட் வங்கி காலனி தருவைரோடு நகர் நல மையம், பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள பாத்திமாநகர் நல மையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

ஸ்கேன் பரிசோதனை

இந்த முகாம்களில் கர்ப்பிணி பெண்களுக்கு முழு பேறுகால பரிசோதனை மற்றும் தடுப்பூசி வழங்குதல், ரத்தம் மற்றும் முழு ஆய்வக பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு பரிசோதனை, அனைத்து தாய், சேய் நல விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்தல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் பதிவு செய்தல், மருத்துவ நிபுணர்களின் பேறுகால பராமரிப்பு குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், சிறப்பு கவனம் தேவைப்படும் தாய்மார்களுக்கு உடன் மருத்துவ உயர் சிகிச்சைக்கு பரிந்துரைத்தல், தொற்றா நோய்கள் கண்டுபிடிப்பு மற்றும் உரிய சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்த முகாமை குரூஸ்புரம் மகப்பேறு மையத்தில் மாநகராட்சி மேயர் பி.சேவியர் தொடங்கி வைக்கிறார். எனவே பொதுமக்கள் அனைவரும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி தெரிவித்து உள்ளார்.

 

பிளாஸ்டிக் ஒழிப்பில் ஈடுபட்ட சிறந்த மகளிர் குழுவுக்கு ரூ.5 லட்சம் பரிசு

Print PDF

தினத்தந்தி           17.02.2014

பிளாஸ்டிக் ஒழிப்பில் ஈடுபட்ட சிறந்த மகளிர் குழுவுக்கு ரூ.5 லட்சம் பரிசு

சுற்றுச்சூழல் துறை மூலமாக பிளாஸ்டிக் பயன்பாடுகள் இல்லாத பகுதிகளாக மாற்றும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள சிறந்த 3 மகளிர் சுய உதவிக்குழுக்களை மாநில அளவில் தேர்வு செய்து ரொக்கப்பரிசுகள் வழங்க தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார். முதல் பரிசாக ரூ.5 லட்சம், 2–வது பரிசாக ரூ.3 லட்சம், 3–வது பரிசாக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் உபயோகிப்பதை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். தங்கள் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி மையத்துக்கு அனுப்பும் செயல்களில் ஈடுபட்டு இருக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான மாற்றுப் பொருளான காகித பை, காகித தம்ளர், துணிப்பை, சணல் பை போன்ற ஏதேனும் ஒரு பொருளை தயாரிக்கும் சுயஉதவிக்குழுவாக இருக்கலாம்.

இந்த தகுதிகளை உடைய சுய உதவிக்குழுக்கள், உரிய விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் யூனியன் அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பரிந்துரையுடன் நெல்லை மாவட்ட மகளிர் திட்ட அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை, நெல்லை மாவட்ட கலெக்டர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

 


Page 6 of 519