Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

1.50 லட்சம் கொசு வலைகள்: மாநகராட்சி டெண்டர் வெளியீடு

Print PDF

தினமணி              10.02.2014

1.50 லட்சம் கொசு வலைகள்: மாநகராட்சி டெண்டர் வெளியீடு

சென்னையில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்ய கூடுதலாக 1.5 லட்சம் கொசு வலைகளை கொள்முதல் செய்ய சென்னை மாநகராட்சி டெண்டர் வெளியிட்டுள்ளது.

சென்னையின் நீர்வழிப்பாதைகளின் அருகில் வசிக்கும் ஏழைகளுக்கு இலவச கொசு வலைகள் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. இதன்படி முதலில் 5 லட்சம் கொசு வலைகளை தனியார் நிறுவனத்திடம் இருந்து மாநகராட்சி கொள்முதல் செய்தது.

பின்னர் சென்னையில் பச்சை நிற ரேஷன் அட்டைகள் வைத்துள்ள அனைவருக்கும் இலவச கொசு வலைகள் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கொசு வலைகள் விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இப்போது சென்னையில் சுமார் 11 லட்சம் பச்சை நிற ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான கொசு வலைகளை கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.

இதன் ஒரு பகுதியாக, ரூ. 2.25 கோடி மதிப்பில் 1.5 லட்சம் கொசு வலைகளை கொள்முதல் செய்ய மாநகராட்சி டெண்டர் வெளியிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி டெண்டர் விடப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

திருச்சி மாநகராட்சியில் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க 11 பல்நோக்கு சேவை மையங்கள் மாநகராட்சி ஆணையர் தகவல்

Print PDF

தினத்தந்தி             10.02.2014

திருச்சி மாநகராட்சியில் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க 11 பல்நோக்கு சேவை மையங்கள் மாநகராட்சி ஆணையர் தகவல்

திருச்சி மாநகராட்சியில் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க 11 பல்நோக்கு சேவை மையங்கள் அமைக்கப்பபடும் என்று மாநகராட்சி ஆணையர் தண்டபாணி கூறினார்.

ஆலோசனை கூட்டம்

திருச்சி மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்கள் மற்றும் கழிவறைகள் போன்ற பொது சொத்துக்களை பராமரிக்க பயனாளிகள் குடும்பங்களை சேர்ந்த 400 சமுதாயம் சார்ந்த குழுக்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி ஆணையர் தண்டபாணி தலைமை தாங்கி பேசியதாவது:–

திருச்சி மாநகராட்சியில் நான்கு கோட்டங்களில் 65 வார்டுகள் உள்ளன. இதில் 6 வார்டு ஒன்றுக்கு 1 மையம் என 11 பல்நோக்கு சேவை மையங்கள் அமைக்கப்படும். மேற்படி மையங்கள் மூலம் மாநகராட்சியில் அமைக்கப்படவுள்ள 395 பொது கழிப்பிடங்கள் சமுதாயம் சார்ந்த குழுக்கள் மூலம் தொண்டு நிறுவனங்கள் வழிகாட்டுதலுடன் பராமரிக்கப்பட உள்ளது. 1.2.2014–ந் தேதி முதல் இந்த மாநகராட்சி அனைத்து கழிப்பிடங்களுக்கான மின் கட்டணத்தினை பொதுநிதியிலிருந்து செலுத்த தீர்மானிக்கப்பட்டது.

நடவடிக்கை

மேலும் கழிப்பிடங்கள் பராமரிக்க கிருமிநாசினி மற்றும் உபகரணங்கள் மாநகராட்சி மூலம் வழங்கப்படும். இதன் மூலம் சமுதாயம் சார்ந்த குழுக்கள் பராமரித்து வரும் 75 கழிப்பிடங்கள் பயன்பெறும். இந்த கழிப்பிடங்கள் அமைந்துள்ள 250 மீட்டர் சுற்றளவு வரை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலை ஏற்படும். இதனை மீறி திறந்தவெளியில் மலம் கழிப்போர்கள் மீது அபராதம் விதிப்பது மற்றும் சட்டபடியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நகர் நல அலுவலர் மாரியப்பன், உதவி ஆணையர் தனபாலன், உதவி செயற்பொறியாளர் சிவபாதம், சுகாதார அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

சென்னிமலை பேரூராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

Print PDF

தினத்தந்தி              07.02.2014

சென்னிமலை பேரூராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். எனவே தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், என்று பொதுமக்கள் சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஜம்பு என்கிற சண்முகசுந்தரத்திடம் புகார் கூறினார்கள். இதையடுத்து ஈரோடு மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவுப்படி சென்னிமலை பேரூராட்சி பகுதியில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை, கோவையை சேர்ந்த தனியார் அமைப்பினர் மற்றும் பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் ஒன்று சேர்ந்து, 25–க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்தனர்.

பின்னர் அந்த நாய்கள் அனைத்தும் சென்னிமலை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கால்நடை டாக்டர் செந்தில்செல்வன் தலைமையில் டாக்டர்கள் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர். தொடர்ந்து தெருவில் சுற்றும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

 


Page 8 of 519