Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

திருப்பூரில் 6 ஆயிரம் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி: மேயர்

Print PDF

தினமணி             23.01.2014

திருப்பூரில் 6 ஆயிரம் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி: மேயர்

மாநகராட்சிப் பகுதிகளில் 6 ஆயிரம் நாய்களுக்கு ரேபீஸ் எனப்படும் வெறிநாய் தடுப்பூசி போடப்படும் பணி, மாநகராட்சியுடன் இணைந்து உலகளாவிய கால்நடை சேவை மையத்தின் மிஷன் ரேபீஸ் இயக்கம், திருப்பூர் தங்கம் நினைவு அறக்கட்டளை மூலமாக வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்று மேயர் அ.விசாலாட்சி கூறினார்.

திருப்பூர் பெரிச்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், ரேபீஸ் வெறிநாய் நோய் ஒழிப்பு இயக்கம், மாநகராட்சி, மிஷன் ரேபீஸ், விலங்குகள் தொண்டு நிறுவனமான திருப்பூர் தங்கம் நினைவு அறக்கட்டளை சார்பில் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடும் முகாம் துவக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமை தொடங்கி வைத்து மேயர் அ.விசாலாட்சி பேசியது: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியை மாநகராட்சி ஏற்கனவே செய்து வருகிறது. வெறிநாய் கடித்தால், அதனால் பாதிக்கப்பட்ட நபரின் செயல்பாடும் அந் நாயை போல உள்ளது. நாய்களுக்கு ரேபீஸ் வெறிநாய் தடுப்பூசி போடுவதன் மூலமாக, மனிதர்களுக்கு அந் நோய் பரவாமல் தடுக்க முடியும்.

இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 6 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மேற்கண்ட அமைப்புகள் மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொள்கிறது என்றார்.

துணை மேயர் சு.குணசேகரன் பேசியது:

திருப்பூர் சுலோச்சனா காட்டன் நிறுவனத்தின் தங்கம் நினைவு அறக்கட்டளை, மிஷன் ரேபீஸ் இயக்கம் மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொண்டிருக்கும் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசிபோடும் பணிகளுக்கு மாநகராட்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார்.

உலகளாவிய கால்நடைகள் சேவை மையத்தின் மிஷன் ரேபீஸ் இயக்கத்தின் தென்னிந்திய மண்டல மேலாளர் டாக்டர் முருகன் அப்புப்பிள்ளை பேசியது: நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசிபோட்டு வெறிநாய் கிருமிகளை அழித்துவிட்டால்,

மனிதர்களுக்கு இந்நோய் வர வாய்ப்பில்லை. அதன்படி மிஷன் ரேபீஸ் இயக்கம் மூலமாக இந்தியாவில் இப்பணியை தொடங்கி, இதுவரை  60 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசிகள் போட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் மதுரை, ஈரோடு நகரங்களில்  14,000 நாய்களுக்கு இத் தடுப்பூசிகள் போட்டப்பட்டுள்ளன.

தற்போது திருப்பூர் மாநகரில் உள்ள 60 வார்டுகளிலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு வரும் 31-ஆம் தேதிக்குள் இலவசமாக ரேபீஸ் தடுப்பூசிகளும், 500 நாய்களுக்கு கருத்தடையும் செய்யப்படும் என்றார்.  நாய்களுக்கான பிரத்யேக கருத்தடை வாகனத்தை மேயர் அ. விசாலாட்சி ஒப்படைத்து, இது தொடர்பான மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியையும் அவர் துவக்கிவைத்தார்.

இதில், மாநகராட்சி ஆணையர் கே.ஆர்.செல்வராஜ், தங்கம் நினைவு அறக்கட்டளை(சுலோச்சனா காட்டன் மில்ஸ்) தலைவர் ஆஷா கிருஷ்ணகுமார், மாநகர நல அலுவலர் டாக்டர் ஆர்.செல்வகுமார், மண்டலத் தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், மாநகராட்சி சுகாதாரக்குழுத் தலைவர் பூலுவப்பட்டி பாலு, கவுன்சிலர்கள் சண்முகசுந்தரம், எஸ்.ஆர்.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

கொடுங்கையூரில் வீடு வீடாக விலையில்லா கொசு வலை வினியோகம்

Print PDF

மாலை மலர்              22.01.2014

கொடுங்கையூரில் வீடு வீடாக விலையில்லா கொசு வலை வினியோகம்
 
கொடுங்கையூரில் வீடு வீடாக விலையில்லா கொசு வலை வினியோகம்

சென்னை, ஜன. 22 - சென்னை மாநகராட்சி சார்பில் விலையில்லா கொசு வலை வழங்கப்படுகிறது. கூவம் ஆற்றோரம் குடியிருப்பவர்களுக்கு மட்டுமின்றி பச்சை நிற ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் இந்த கொசு வலை வினியோகம் செய்யப்படுகிறது.

ரூ. 400 மதிப்புள்ள கொசு வலை கொசுக்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ளவும், கொசுக்களால் ஏற்படும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, டைபாய்டு போன்ற காய்ச்சலில் இருந்து தப்பிக்கவும் வழங்கப்படுகிறது.

அனைத்து வார்டுகளிலும் மாநகராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் 34–வது வார்டுக்கு உட்பட்ட கொடுங்கையூர் பகுதியில் மக்களுக்கு நேரடியாக கொசு வலைகள் வழங்கப்படுகின்றன.

ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினரிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு ஒவ்வொரு வீடு வீடாக சென்று கவுன்சிலரும் நிலைக்குழு தலைவருமான லட்சுமி நாராயணன் வழங்கி வருகிறார். 10 ஆயிரம் வீடுகளுக்கு கொசு வலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து லட்சுமி நாராயணன் கூறியதாவது:–

மக்களிடம் நேரில் சென்று ஒட்டு கேட்க மட்டும் போகக்கூடாது. அரசின் நலத்திட்டங்களை நேரில் கொண்டு போய் கொடுப்பதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள்.

34–வது வார்டை பொறுத்தவரை ஒவ்வொரு வீடு வீடாக சென்று முதல்–அமைச்சர் வழங்கிய விலையில்லா கொசு வலைகளை வழங்கி வருகிறோம்.

இதே போல அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் நேரடியாக வீட்டிற்கே சென்று கொடுப்பதனால் அவர்கள் அலைக்கழிக்கப்படாமல் பயன் அடைகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

தெருநாய்களுக்கு கருத்தடை

Print PDF

தினகரன்             22.01.2014 

தெருநாய்களுக்கு கருத்தடை

சங்ககிரி, : சங்ககிரியில் சுற்றித் திரியும் தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, பேரூராட்சி பணியாளர்கள் தெருநாய்களை பிடித்தனர். சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலர் வேதமணி முன்னிலையில், சங்ககிரி கால்நடை மருத்துவர் சுரேஷ், பிடிபட்ட நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்தார். இந்த பணியில் சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன், எழுத்தர் கணேஷ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் குப்பமுத்து, பாலு உட்பட துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

 


Page 13 of 519