Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

நவீன வடிவில் மழை நீர் சேமிப்பு தொட்டி

Print PDF

தினகரன்             23.01.2014 

நவீன வடிவில் மழை நீர் சேமிப்பு தொட்டி

மதுரை, : மதுரை மாநகராட்சி சார்பில் கோரிப்பாளையம் பள்ளிவாசல் அருகிலுள்ள தெருவில் ரூ. 9 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் பதிக்கப் பட்டுள்ளது.

இங்கிருந்து மழை நீர் சேரும் வகையில் நவீன வடிவில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப் பட்டுள்ளது. இதனை மேயர் ராஜன்செல்லப்பா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் நகர பொறியாளர் மதுரம் மற்றும் பொறியாளர்கள் பங்கேற்றனர்.

 

ரூ.4.03 கோடியில் ஆறு நடை மேம்பாலங்கள்: மாநகராட்சி திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்

Print PDF
தினமலர்              23.01.2014

ரூ.4.03 கோடியில் ஆறு நடை மேம்பாலங்கள்: மாநகராட்சி திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்


திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, பாதசாரிகள் பயன்படுத்தும் வகையில், 4.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆறு இடங்களில் நடை மேம்பாலம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.திருப்பூர் மாநகராட்சியின் மைய பகுதிகளில், லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதாலும், மிக குறுகிய ரோடுகளாக இருப்பதாலும், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. காமராஜர் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி ரோடு, குமரன் ரோடு, டவுன்ஹால் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் அதிகப்படியான நெரிசல் உருவாகிறது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில், போக்குவரத்து போலீசாரே திணறும் அளவுக்கு நெரிசல் ஏற்படுகிறது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் நெரிசலை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு, மாநகராட்சிக்கு முக்கிய பணியாக றியுள்ளது. அதிக நெரிசல் ஏற்படும் ஆறு இடங்களில், 4.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நடை மேம்பாலங்கள் அமைக்க, அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. தற்போது, அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து, ஆயத்த பணியை துவக்க, மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மாநகராட்சி கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது:

மாநகராட்சி அலுவலக ரோடு - மங்கலம் ரோடு சந்திப்பில் 89 லட்சம் ரூபாய்; ரயில்வே ஸ்டேஷன் - டவுன்ஹால் சந்திப்பில் 70 லட்சம்; ரயில்வே ஸ்டேஷன் - புஷ்பா தியேட்டர் சந்திப்பு பகுதியில் 43 லட்சம்; குமார் நகர் - அவிநாசி ரோடு சந்திப்பில் 58 லட்சம்; தாராபுரம் ரோடு - காங்கயம் ரோடு சந்திப்பில் ஒரு கோடி ரூபாய்; ராக்கியாபாளையம் பிரிவு - காங்கயம் ரோடு சந்திப்பு பகுதியில் 43 லட்சம் ரூபாய் என மொத்தம் 4.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு அரசு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் திட்டத்தில், இத்திட்ட பணிகளுக்கான தொகை மானியமாக பெறப்படும். பாலம் வடிவமைப்புடன் திட்ட மதிப்பீடு அனுப்பி, தொழில்நுட்ப அனுமதி, நிர்வாக அனுமதி பெறப்படும். அதன்பின், டெண்டர் கோரப்பட்டு, பணிகள் துவக்கப்படும்.

இரும்பு ஆங்கிள் மற்றும் கான்கிரீட் பலகை மூலமாக நடை மேம்பாலம் அமைக்கப்படும். இவ்வாறு, கமிஷனர் செல்வராஜ் கூறினார்.
 

மேற்கு மண்டலத்தில் ரூ.61 லட்சம் செலவில் திட்டப் பணிகள் துவக்கம்

Print PDF

தினமணி             22.01.2014

மேற்கு மண்டலத்தில் ரூ.61 லட்சம் செலவில் திட்டப் பணிகள் துவக்கம்

கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.60.50 லட்சம் செலவில் வணிக வளாகக் கடைகள், நவீன கழிப்பறை ஆகியவற்றை மேயர் செ.ம.வேலுசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

  மேற்கு மண்டலம் 11-ஆவது வார்டு கே.கே.புதூர் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் முதல் பிரசவம் பார்த்துக் கொண்ட தாய் மற்றும் பிறந்த குழந்தைக்கான உடைகள், நாப்கின், கொசுவலை ஆகியவற்றை மேயர் செ.ம.வேலுசாமி  புதன்கிழமை வழங்கினார். மாநகராட்சி ஆணையாளர் க.லதா முன்னிலை வகித்தார்.

  மாநகராட்சி மருத்துவமனைகளில்  பிறக்கும்  குழந்தைகளுக்கு  3 தினங்களுக்குள்  பிறப்பு சான்றிதழ்  வழங்கும் திட்டத்தையும் மேயர் செ.ம.வேலுசாமி தொடங்கி வைத்து, அந்த குழந்தைக்கு  தங்க மோதிரம்  பரிசு வழங்கினார்.

 மேற்கு மண்டலம் 5, 8 மற்றும் 9-ஆவது வார்டுகளில் ரூ.60.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 5 வணிக வளாகக் கடைகள், நவீன கழிப்பறை ஆகியவற்றைத் திறந்து வைத்து, மழைநீர் வடிகால்  கட்டும் பணியையும் ஆணையாளர் க.லதா முன்னிலையில் மேயர் செ.ம.வேலுசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

  மேற்கு மண்டலம் 9-ஆவது வார்டில் அம்பேத்கார் நகர் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன கழிப்பறையை மேயர் திறந்து வைத்தார். 5-ஆவது வார்டு கவுண்டபாளையம் அசோக் நகர் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட 5 வணிக வளாக கடைகளையும்  திறந்து வைத்தார்.

   8-ஆவது வார்டு சிவகாமி நகர் பகுதியில் ரூ.30.50 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் மற்றும் கான்கீரிட் பாலம் அமைக்கும் பணிகளையும் பூமி பூஜை செய்து மேயர் தொடங்கி வைத்தார்.

 மத்திய மண்டலத்திற்குட்பட்ட 84-ஆவது வார்டு கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.26.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட திறந்தவெளி கலையரங்கத்தையும், ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டபட்ட குழந்தைகளுக்கான அங்கன்வாடி கட்டடத்தையும், 83-ஆவது வார்டு பெரிய கடைவீதி மாநகராட்சி பள்ளி சத்துணவு மைய கட்டடம் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளாச்சி நிதி ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டதையும் மேயர் செ.ம.வேலுசாமி அவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர் சேலஞ்சர்துரை முன்னிலையில் திறந்து வைத்தார்.

 இந்நிகழ்ச்சிகளில் துணை மேயர் சு.லீலாவதி உண்ணி, துணை ஆணையர் சு.சிவராசு, மண்டலத் தலைவர்கள் சாவித்திரி, ஆதிநாராயணன், கண்காணிப்புப் பொறியாளர் கணேஷ்வரன், நகர பொறியாளர் சுகுமார், உதவி ஆணையர்கள் சுப்ரமணியன்;, ரவி, கல்வி குழுத் தலைவர் சாந்தாமணி, பணிகள் குழுத்தலைவர் அம்மன் அர்ச்சுணன், நியமனக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 14 of 238