Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ஸ்ரீ தக்ஷா பிராபர்ட்டி சார்பில் மாநகராட்சி நிலத்தில் ரூ.30 லட்சத்தில் தனியார் பராமரிப்பு பூங்கா

Print PDF

தினகரன்          20.01.2014

ஸ்ரீ தக்ஷா பிராபர்ட்டி சார்பில் மாநகராட்சி நிலத்தில் ரூ.30 லட்சத்தில் தனியார் பராமரிப்பு பூங்கா

கோவை, : கோவை மாநகராட்சி வசம் உள்ள பூங்காங்களை தனியார் நிறுவனங்கள் மூலம் பராமரிக்கும்  திட்டத்தை கடந்தாண்டு அறிவிக்கப்பட்டு, 26 பூங்காங்களை முதல்கட்டமாக அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து மாநகராட்சி 17வது வார்டு நவாவூர் பிரிவு குருசாமி நகரில் உள்ள 1 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை வடவள்ளி ஸ்ரீ தக்ஷா பிராபர்ட்டி டெவலப்பர்ஸ் சார்பில்  ரூ.30 லட்சம் மதீப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு சுற்றுசுவர், நடை பயிற்சி பாதை, மருத்துவ மரவகைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு திடல், இறகுபந்து மைதானம், விழா மேடை, புல்வெளிகள் மற்றும் வண்ணவிளக்குகள் அமைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் முதல் பூங்காவினை கோவை மாநகராட்சி மேயர் செ.ம. வேலுசாமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஸ்ரீ தக்ஷா பிராபர்ட்டி டெவலப்பர்ஸ் நிர்வாக இயக்குநர் ஆர். மோகன், இயக்குநர்கள் ராமநாராயணன், அருள்ஆண்டனி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தக்ஷா பொது மேலாளர் ரமாவேலாயுதம் திட்டவுரை ஆற்றினார்.

விழாவில் தா.மலரவன் எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையாளர் லதா, மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சாவித்திரிபார்த்திபன், கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார், மனித நேய பேரவை உமாதாணு, வனக்குழு தலைவர் பார்த்திபன், மாநகராட்சி கவுன்சிலர்கள், மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 23 January 2014 09:17
 

காரைக்குடியில் ரூ.56 லட்சத்தில் திட்டப் பணிகள் துவக்க விழா

Print PDF

தினமணி            14.01.2014

காரைக்குடியில் ரூ.56 லட்சத்தில் திட்டப் பணிகள் துவக்க விழா

காரைக்குடி நகராட்சியின் சார்பில் ரூ. 56.70 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகள் துவக்கவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி கல்லுக்கட்டி வடக்கு கணபதி பூங்கா இடத்தில் இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துவதற்காக 2012-2013 ஆம் ஆண்டின் பின்தங்கிய பகுதிகளுக்கான வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.32 லட்சம் மதிப்பிலும், கல்லுக்கட்டி மேற்கு பகுதியில் நவீனகட்டண கழிப்பிட சுகாதார வளாகம் 2013-2014 ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பிலும், புதிய பஸ்நிலை யத்தில் பயணிகளுக்கு இருக்கைகளுடன் கூடிய நிழற்குடை மற்றும் பயணிகள் தங்குமிடம் மேம்படுத்த நகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ. 9.70 லட்சம் மதிப்பிலும் பணிகள் நிறைவடைந்தன.

இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான துவக்கவிழாவில் காரைக்குடி நகர் மன்றத் தலைவர் கற்பகம் இளங்கோ துவக்கிவைத்தார். நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) கா. மாரியப்பன் தலைமை வகித்தார். காரைக்குடி நகர்மன்றத் துணைத் தலைவர் சோ. மெய்யப்பன், காரைக்குடி டி.எஸ்.பி. முருகேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் சி. மெய்யர், ஆறுமுகம், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

கொங்கணாபுரத்திற்கு ரூ90 லட்சம் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட்

Print PDF

தினகரன்              13.01.2014

கொங்கணாபுரத்திற்கு ரூ90 லட்சம் மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட்

இடைப்பாடி, :  இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்திற்கு ரூ90 லட்சம் மதிப்பில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

இடைப்பாடி வாரச்சந்தை பகுதியில் கொங்கணாபுரத்திற்கு புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ90 லட்சம் மதிப்பில் புதிய கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நட்டு விழா மற்றும் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ2 லட்சம் மதிப்பில் புதிய வணிக வளாக கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு கலெக்டர் மகரபூஷணம் தலைமை தாங்கினார். பேரூராட்சி உதவி இயக்குனர் வரவேற்றார். அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் செம்மலை எம்பி, பேரூராட்சி தலைவர் பழனிசாமி, ஒன்றியக்குழு தலைவர்கள் கரட்டூர் மணி, மாதேஷ், நகர்மன்ற தலைவர் கதிரேசன், மாவட்ட கவுன்சிலர்கள் ராஜேந்திரன், மாதேஸ்வரன், பேரூராட்சி துணை தலைவர் கந்தசாமி, வசந்தா, ஒன்றியக்குழு துணைதலைவர் சாந்தி செந்தில், நல்லாக்கவுண்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

 


Page 16 of 238