Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

சேலத்தில் ரூ.1000 கோடியில் புதிய மேம்பாலங்கள் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி தகவல்

Print PDF

தினத்தந்தி            04.01.2014  

சேலத்தில் ரூ.1000 கோடியில் புதிய மேம்பாலங்கள் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி தகவல்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சேலம் மாநகரில் ரூ.1,000 கோடியில் பல இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது என சேலத்தில் நேற்று நடந்த விழாவில் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி கூறினார்.

ஆனந்தா பாலம்

சேலம் மாநகரில் முதல்அக்ரஹாரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே ஆக்ஸ்போர்டு-ஆனந்தா மேம்பாலம் கட்டப்பட்டு அதன் இணைப்பு சாலைகள் விரிவாக்க பணிகள் ரூ.1.40 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருமணிமுத்தாற்றின் குறுக்கே குண்டுபோடும் தெரு மற்றும் திருச்சி மெயின்ரோடு சாலையினை இணைக்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு ரூ. 87 லட்சத்தில் இணைப்பு சாலைகளின் பணிகளும் முடிக்கப்பட்டிருந்தது.

இணைப்பு சாலைகள் திறப்பு

இந்தநிலையில், திருமணிமுத்தாறு ஆனந்தா பாலம் இணைப்புசாலை மற்றும் குண்டுபோடும் தெரு பாலம் இணைப்புசாலை திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் சவுண்டப்பன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் அசோகன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், ஜி.வெங்கடாசலம், துணை மேயர் நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, குண்டுபோடும் தெருபாலம் மற்றும் ஆனந்தா பாலம் இணைப்பு சாலைகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திருமணிமுத்தாறு ஆனந்தா பாலம் கடந்த தி.மு.க.ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டது. இருப்பினும், பாலம் கட்டினால் மட்டும் போதுமா?. அதற்கு தேவையான இணைப்பு சாலைகளும் தேவை. அப்போது தான் பாலம் முழுவடிவம் பெறும்.

வாக்குறுதி நிறைவேற்றம்

தேர்தல் நேரத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சேலத்தில் உள்ள ஆனந்தா பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருவேன் என வாக்குறுதி அளித்தார். அதன்படி ரூ. 7 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடந்தது. ஆனால் ஆனந்தா பாலத்தின் கட்டுமான பணிகள் நடைபெறும்போது பல்வேறு இடையூறுகள், பிரச்சினைகள் உருவானது. இருப்பினும் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு கொண்டுவந்து தற்போது ஆனந்தா பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல்-அமைச்சர் கூறிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சேலம் மாநகரம் வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை கருத்தில் கொண்டு சேலம் 5 ரோட்டில் இருந்து 4 ரோடு அருகேயுள்ள நேஷனல் ஓட்டல் வரையிலும் உயர்மட்ட மேம்பாலம் ரூ. 600 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதேபோல், 5 ரோட்டில் இருந்து சாரதா கல்லூரி சாலை வரை உயர்மட்ட பாலமும், குரங்குசாவடி மற்றும் மணல்மேடு பகுதியில் ஒரு பாலமும், முள்ளுவாடி கேட் பகுதியில் 2 மேம்பாலமும், செவ்வாய்பேட்டையில் ஒரு மேம்பாலமும் கட்டப்பட உள்ளது.

52 கிலோ மீட்டருக்கு ரிங்ரோடு


குறிப்பாக சொல்லபோனால் சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரூ. 1,000 கோடிக்கு பல்வேறு மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர அரபிக்கல்லூரியில் ஆரம்பித்து அதே அரபிக்கல்லூரியில் இணையும் வகையில் சேலம் நகரை சுற்றிலும் 52 கிலோ மீட்டருக்கு ரிங்ரோடு அமைக்கப்பட உள்ளன. இந்த பணிகள் அனைத்தும் அ.தி.மு.க.ஆட்சியிலே தொடங்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் மற்ற மாநகராட்சியில் இல்லாத வகையில் சேலம் மாநகர மக்களுக்கு தேவையான அனைத்து சாலை வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்படும். பொதுமக்களின் வசதிக்காக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள ஆனந்தா பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதர திட்டப்பணிகள்

முன்னதாக 50-வது வார்டில் எஸ்.ஆர்.எம்.தோட்டம் பகுதியில் சீரமைக்கப்பட்ட கிணற்றிலிருந்து நீரேற்றி மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கும் திட்டத்தையும், குகை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சீரமைக்கப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டிடத்தையும் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

பங்கேற்றவர்கள்

இந்த நிகழ்ச்சியில், மண்டலக்குழு தலைவர்கள் மாதேஸ்வரன், ஜெயபிரகாஷ், சண்முகம், தியாகராஜன், சேலம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைராஜ், செவ்வாய்பேட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

பேரூராட்சிக்கு புதிய கட்டடம்

Print PDF

தினமலர்            04.01.2014  

பேரூராட்சிக்கு புதிய கட்டடம்

தாடிக்கொம்பு:தாடிக்கொம்பு குடகனாறு பாலம் அருகே அகரம் பேரூட்சி அலுவலகம் உள்ளது. இவ்வலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

தற்போதுள்ள அலுவலகத்தில் இடம் பற்றாக்குறையாக உள்ளது. எனவே இந்த அலுவலகம் அருகிலேயே இரண்டு தளங்களுடன் நவீன வசதிகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. நாற்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில அடிப்படை கட்டமைப்பு வசதிக்கான நிதி பற்றாக்குறையை ஈடு செய்வதற்கான நிதி பங்களிப்புத் திட்டம் 2011-2012 ன் கீழ் இந்த கட்டடம் கட்டப்படுகிறது. ""ஓரிரு மாதங்களில் பணி முடிந்து புதிய அலுவலகம் பயன்பாட்டிற்கு வரும்,"" என, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் தெரிவித்தார். 

 

புதிய வரலாற்று சின்னம்!இந்திய - பிரிட்டன் பாணியில்... ரூ. 12.65 கோடியில் மாமன்ற அரங்கம்

Print PDF

தினமலர்            04.01.2014  

புதிய வரலாற்று சின்னம்!இந்திய - பிரிட்டன் பாணியில்... ரூ. 12.65 கோடியில் மாமன்ற அரங்கம்

புதிய வரலாற்று சின்னம்!இந்திய - பிரிட்டன் பாணியில்... ரூ. 12.65 கோடியில் மாமன்ற அரங்கம்

கோவை :கோவை மாநகராட்சியில், 12.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய மாமன்ற அரங்கம் கட்டப்பட உள்ளது. இந்திய - பிரிட்டன் கட்டடக் கலை பாணியில், இதன் முகப்பு தோற்றம் அமைகிறது; கோவையின் வரலாற்று சின்னமாக, இதை உருவாக்க வேண்டும் என்பதில், மாநகராட்சி நிர்வாகம் உறுதியாக உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1886ல், கோவை நகராட்சி 10.88 சதுர கி.மீ., பரப்பில் தோற்றுவிக்கப்பட்டது. கோவை நகராட்சி பகுதிகளின் வளர்ச்சியால், அருகில் இருந்து உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு, 105.46 சதுர கி.மீ., பரப்பில், 1981ல் மாநகராட்சியாக தகுதி உயர்வு பெற்றது.

கடந்த 2011ல், 11 உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இதனால், மாநகராட்சியின் பரப்பு 257.04 சதுர கி.மீ.,யாக விரிவடைந்தது. வார்டுகளின் எண்ணிக்கை 72ல் இருந்து, 100 ஆக உயர்ந்தது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில், 1892ல் கட்டப்பட்ட விக்டோரியா அரங்கம் தற்போது மாமன்ற கூட்ட அரங்கமாக பயன்படுத்தப்படுகிறது. மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்ட நிலையில், மாமன்ற கூட்டம் நடக்கும் போது, கவுன்சிலர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமர்வதற்கு விக்டோரியா அரங்கத்தில் போதுமான இடவசதியில்லை. இதனால், புதிய மாமன்ற கூட்ட அரங்கம் கட்டுவதற்கு, தற்போதை கவுன்சில் பொறுப்பேற்றதும், முதல் பட்ஜெட்டில் (2012 - 13), நிதி ஒதுக்கப்பட்டது.

மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மாற்று இடத்தில் அனைத்து வசதிகளுடன், புதிய மாமன்ற கூட்ட அரங்கம் 9.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு, நிர்வாக அனுமதி கேட்டு, கடந்த ஆண்டு ஜூலையில் நகராட்சி ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், புதிய மாமன்ற அரங்கம் கட்ட, 12.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி நிதியில், புதிய மாமன்ற அரங்கம் கட்டுவதற்கு, கட்டட வரைபட அனுமதி நகரமைப்பு துறையில் பெறுவதற்கும், அரசிடம் நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி பெறவும் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதிய மாமன்ற கூட்ட அரங்க மதிப்பீடு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளதால், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் முகப்பு தோற்றம் இந்திய - பிரிட்டன் கட்டடக் கலை பாணியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்த புதிய அரங்கின் வலது, இடது பக்கம் இடம் ஒதுக்கப்படுகிறது. ஆங்கிலேயர் கட்டிய விக்டோரிய அரங்கம், கோவையின் வரலாற்று சின்னமாக உள்ளது. புதிய மாமன்ற கூட்ட அரங்கம், கோவையின் மற்றுமொரு வரலாற்று சின்னமாக உருவாக்க வேண்டும் என்பதில், மாநகராட்சி நிர்வாகம் உறுதியாக உள்ளது.

அரங்கம் எப்படியிருக்கும்

மாநகராட்சி பிரதான அலுவலகத்தின் பின்பகுதியில், 1.20 ஏக்கர் நிலத்தில், 33,666 சதுரடியில், இரண்டு அடுக்கில் புதிய மாமன்ற அரங்கம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

  • தரைதளத்தில், மேயர், கமிஷனர், துணை மேயர் அமரும் இடம் மேடை போன்று உயர்ந்திருக்கும். மேயருக்கு வலது, இடது பக்கம் அதிகாரிகள், எம்.எல்.ஏ., -எம்.பி., என, 42 பேர் அமரும் வகையில் உயரம் குறைவாக மேடை அமைக்கப்படுகிறது.
  • தரை தளத்தில், 147 கவுன்சிலர்கள் அமரும் அளவுக்கு இருக்கைகள் போடப்படுகின்றன. மேயர், கமிஷனர், துணை மேயர், எம்.எல்.ஏ., - எம்.பி., ஆகியோருக்கு என, மொத்தம் 10 அறைகள் அமைக்கப்படுகின்றன.
  • தரைதளத்தில் இருந்து 26 அடி உயரத்தில் முதல் தளம் அமைக்கப்படுகிறது. முதல் தளத்தில், 140 பேர் அமரும் வகையில் கான்பரன்ஸ் ஹால், மண்டல, நிலைக்குழு தலைவர்களுக்கு அறைகள், உணவகம் அமைகிறது.
  • தரைதளத்துக்கும், முதல் தளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் பத்திரிகையாளர்கள் 50 பேர், பார்வையாளர்கள் 50 பேர் அமரும் வகையிலும் தனித்தனியாக இருக்கை வசதியுடன் மாடம் அமைக்கப்படுகிறது.
  • இரண்டு தளங்களில் அமைக்கப்படும் அனைத்து அறைகளிலும் கழிப்பிடம் இணைத்து கட்டப்படுகிறது. ஒவ்வொரு தளத்திலும் ஆண், பெண்களுக்கு பொதுக்கழிப்பிடம் அமைகிறது.
  • அரங்கின் உள்பகுதி அரைவட்ட வடிவத்தில் இருக்கும். தேக்கு மரத்தில் உள் அலங்காரம் செய்யப்படுகிறது.
  • ஒலி எதிரொலிக்காத வகையில், சவுண்ட் சிஸ்டம், கண்காணிப்பு @கமரா, லிப்ட் அமைக்கப்படுகிறது. மின்பயன்பாட்டை குறைக்கும் வகையில்,சோலார் மின் உற்பத்தி திட்டமும் அமைக்கப்படுகிறது.
 


Page 20 of 238