Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

தாம்பரம் நகராட்சி மண்டபம் ரூ.80 லட்சம் செலவில் புதுப்பிப்பு

Print PDF

தினமலர்           29.01.2014 

தாம்பரம் நகராட்சி மண்டபம் ரூ.80 லட்சம் செலவில் புதுப்பிப்பு

தாம்பரம் : தாம்பரம் நகராட்சிக்கு சொந்தமான, அம்பேத்கர் திருமண மண்டபம், 80 லட்சம் ரூபாய் செலவில், 'பயோகாஸ்' மூலம் மின் உற்பத்தி செய்யும் வசதியுடன், புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

மேற்கு தாம்பரம், 35வது வார்டு, முத்துலிங்கம் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான அம்பேத்கர் திருமண மண்டபம் உள்ளது. போதிய இடசவதி இருந்தும், திருமண அரங்கு மற்றும் சாப்பிடும் அறை, சிறியதாக இருந்தன. அதனால், 80 லட்சம் ரூபாய் செலவில் மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

விதவிதமான விளக்குகள் கொண்ட, மேற்பூச்சுகளுடன் கூடிய திருமண அரங்கு, காய்கறி கழிவுகளில் இருந்து எடுக்கப்படும் 'பயோகாஸ்' மூலம் மின் உற்பத்தி செய்யும் வசதி, ஒரேநேரத்தில் 700 பேர் பேர் அமர்ந்து சாப்பிட வசதியான அரங்கு, வாகன நிறுத்த வசதி, மணமகன், மணமகள் அறைகள் உள்ளிட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய ஐந்து அறைகள், இரண்டு சாதாரண அறைகள் ஆகியவை அந்த மண்டபத்தில் அமைகின்றன.

இதுவரை, 80 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன. இன்னும் ஒரு மாதத்தில் பணி முடிந்து, பயன்பாட்டிற்கு திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

ராஜபாளையத்தில் ரூ. 6. 24 கோடியில் 11 இடங்களில் தார் தளம்

Print PDF

தினமணி           28.01.2014 

ராஜபாளையத்தில் ரூ. 6. 24 கோடியில் 11 இடங்களில் தார் தளம்

ராஜபாளையம் நகர்மன்ற அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் நகரில் 11 இடங்களில் ரூ. 6.24 கோடியில் செலவில் தார்தளம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

 நகர்மன்றக் கூட்டத்துக்கு தலைவர் பி.எஸ். தனலட்சுமி செல்வசுப்பிரமணியராஜா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஆணையாளர் ராமசாமி மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலையில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

  ராஜபாளையம் நகராட்சிக்கு வர உள்ள தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டஆய்வு பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளவும், இக் கூட்டுக் குடிநீர் திட்டப் பராமரிப்பு பணிகளை குடிநீர் வடிகால் வாரியமே மேற்கொள்ளவும் மன்றத்தின் அனுமதிக்கு வைத்து நிறைவேற்றப்பட்டது.

  ராஜபாளையம் 27ஆவது வார்டு கொரிஹவுஸ் நிறுவனம் அருகே ரூ. 15 லட்சம் செலவில் பொது கழிப்பிடம் கட்டவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள் கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் அரசு மானியம் ரூ. 6 கோடி நகராட்சி பொதுநிதி ரூ. 24.30 லட்சம் சேர்த்து 11 இடங்களில் தார்தளம் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

   ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் கூடுதல் இடத்தில் வாகனக் காப்பகம் அமைத்தல் உட்பட 39 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு உறுப்பினர்களின் பார்வைக்கு வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நகர்மன்றத் தலைவர் பி.எஸ். தனலட்சுமி செல்வசுப்பிரமணிய ராஜா பதிலளித்துப் பேசினார்.

 

பூண்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர ரூ.94 கோடி செலவில் புதிய கால்வாய்: ஜெயலலிதா ஒப்புதல்

Print PDF

 மாலை மலர்            25.01.2014

பூண்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர ரூ.94 கோடி செலவில் புதிய கால்வாய்: ஜெயலலிதா ஒப்புதல்

சென்னை, ஜன. 25 - தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆரணி நகராட்சியில் 36 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பெரியகுளம் நகராட்சியில் 15 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருவத்திபுரம் நகராட்சியில் 13 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திண்டிவனம் நகராட்சியில் 52 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 117 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 நகராட்சிகளில் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகளை சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ்செயல்படுத்திட முதல்- அமைச்சர் ஜெயலலிதா அனுமதி அளித்து உத்தரவிட் டுள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்காக ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் கடன் உதவி திட்டத்தின் கீழ் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டத்தினை செயல்படுத்தவும், வருடத்திற்கு 11 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அதன் பராமரிப்பை மேற்கொள்ளவும் நிர்வாக ஒப்புதல் வழங்கி முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப குடிநீரின் தேவை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு குடிநீர் வழங்கும் திட்டங்களை முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகி றது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி வட்டம் கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளான கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகையை இணைத்து 330 கோடி ரூபாய் செலவில் ஒரு நீர்த்தேக்கம் அமைக்க நிர்வாக ஒப்புதல் அளித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். இந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீரை இருமுறை நிரப்புவதன் மூலம் ஓராயிரம் மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க இயலும்.

பூண்டி ஏரியிலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு செல்ல கால்வாய் வசதிகள் இருப்பதாலும் மற்றும் இவ்விரண்டு ஏரிகளிலிருந்து கீழ்ப்பாக்கம் மற்றும் செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு வசதிகள் இருப்பதாலும், தேர்வாய்கண்டிகை ஏரியிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, தேர்வாய்கண்டிகை ஏரியிலிருந்து பூண்டி ஏரிக்கு கண்டலேறு பூண்டிக் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை 93 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் செயல்படுத்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா நிர்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தினால் செயல் படுத்தப்படும்.

சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் மாசுபடுவதைத் தவிர்க்கும் பொருட்டு அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் படிப்படியாக பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமை யிலான அரசு முடிவெடுத்துள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர நகரங்களுக்கான நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பெரியகுளம் நகராட்சியில் 26 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சாத்தூர் நகராட்சியில் 37 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மேட்டூர் நகராட்சியில் 73 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், அரக்கோணம் நகராட்சியில் 95 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருப்பத்தூர் நகராட்சியில் 104 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சிதம்பரம் நகராட்சியில் 75 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 412 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கூறிய 6 நகராட்சிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த முதல்-அமைச்சர் ஜெய லலிதா உத்தரவிட்டுள்ளார்.

குடிநீர் அபிவிருத்தி திட்டங்களுக்காக 441 கோடியே 46 லட்சம் ரூபாய், பாதாளச் சாக்கடைத் திட்டங் களுக்காக 412 கோடியே 50 லட்சம் ரூபாய் என மொத்தம் 853 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்தத் திட்டங்களை செயல்படுத்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 


Page 9 of 238