Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

2011 - 16ல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு செலவு...ரூ. 1,807 கோடி! குப்பை பிரச்னைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் நம்பிக்கை

Print PDF

தினமலர்     09.06.2017

2011 - 16ல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு செலவு...ரூ. 1,807 கோடி! குப்பை பிரச்னைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் நம்பிக்கை


''பெருங்குடி, கொடுங்கையூரில் உள்ள குப்பையைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கவும், சென்னையில் தினமும் சேகரமாகும் 5,400 டன் குப்பை மூலம் மின்சாரம் தயாரிக்கவும், தனித்தனியாக திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன,'' என, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கூறினார்.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து பெற, இரண்டு வண்ணங்களில் குப்பை தொட்டிகள், மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி, ரிப்பன் மாளிகை வளாகத்தில், நேற்று நடந்தது. விழாவில், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி பேசியதாவது:ரூ.303 கோடிகடந்த, 2011 - 16ம் ஆண்டுகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்காக, 1,807 கோடி ரூபாயை, அரசு செலவழித்துள்ளது. அதற்கு முந்தைய, ஐந்து ஆண்டுகளுக்கு, தி.மு.க., அரசு, வெறும், 303 கோடி ரூபாய் மட்டுமே, திடக்

கழிவு மேலாண்மை பணிகளுக்கு செலவழித்தது.

சென்னையில், நாள் ஒன்றுக்கு, 5,400 டன் குப்பையும், இதர மாநகராட்சி, நகராட்சிகளில் சேர்த்து, 7,597 டன் குப்பையும், பேரூராட்சிகளில், 1,967 டன் குப்பையும், ஊராட்சி பகுதிகளில், 2,340 டன் குப்பை என, தமிழகம் முழுவதும், மொத்தம், 17,304 டன் குப்பை சேகரமாகிறது.

குப்பை கழிவுகளை கையாள்வது சவாலான பணி. ஊரக பகுதிகளிலும், பேரூராட்சிகளிலும் சிறிய அளவில் குப்பை சேகரமாவதால், அவற்றை மறு சுழற்சி செய்யும் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், 70 லட்சம் மக்கள் வசிக்கும் சென்னையில், 5,400 டன் குப்பை தினசரி கையாள்வது பெரும் சவாலாகும். பல நிறுவனங்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை கொண்டு வருகின்றன. ஆனால், அந்த திட்டங்கள், சென்னையில் நடைமுறை சாத்தியம் இல்லாதவையாக உள்ளது.

மின்சாரம்

தற்போது குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை, மாநகராட்சி செயல்படுத்த

உள்ளது. இந்த திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளது. விரைவில், முதல்வர் ஒப்புதல் பெற்று, கொடுங்கையூர், பெருங்குடியில் சேகரமாகியுள்ள குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கவும், சென்னையில் தினமும் சேகரமாகும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கவும், தனித்தனியாக திட்டங்கள் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நகராட்சி நிர்வாக துறை செயலர், ஹர்மேந்தர் சிங் பேசுகையில், ''சென்னையில் 70 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில், குப்பை அகற்றும் பணியில், 18 ஆயிரம் ஊழியர்கள் மட்டுமே ஈடுபட்டு

உள்ளனர்; ''இந்த எண்ணிக்கை போதாது. இதனால் பொதுமக்கள், தங்கள் வீடுகளிலேயே, குப்பையை தரம் பிரித்து வழங்க முன்வர வேண்டும்,'' என்றார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெய

குமார், பெஞ்ஜமின், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சந்திரகாந்த் காம்ளே, காக்கர்லா உஷா, கார்த்திகேயன், பிரகாஷ், மகரபூஷ்ணம், அருண்ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். -நமது நிருபர் -

 

மறுசுழற்சிக்கு உதவாத 'பிளாஸ்டிக்' பைகள் : திடக்கழிவு மேலாண்மைக்கு சவால்

Print PDF

தினமலர்          26.05.2017

மறுசுழற்சிக்கு உதவாத 'பிளாஸ்டிக்' பைகள் : திடக்கழிவு மேலாண்மைக்கு சவால்

கோவை: பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பைகளை, மறுசுழற்சி செய்ய முடியாத தால், திடக்கழிவு மேலாண்மை பணியில் ஈடுபடும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள பல நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி கள் திடக்கழிவு மேலாண்மை பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில், ஊழியர்கள் பயிற்சி பெற, லட்சக்கணக்கில் அரசு செலவிடுகிறது.

தரம் பிரித்தல் : உள்ளாட்சி அமைப்புகள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, காய்கறி கழிவுகளை, மட்கும் மற்றும் மட்காத குப்பையாக தரம் பிரித்து, மட்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரித்து வருகின்றன. சில வகை பிளாஸ்டிக் பொருட்கள், இயந்திரத்தால் துாளாக்கப்பட்டு, அவை சாலை அமைக்க, தாருடன் கலக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் தார் கலவை மூலம் போடப்படும் சாலையின் உறுதித் தன்மை, வலுவாக இருக்கும் என, கூறப்படுகிறது. இந்நிலையில், மசாலா கம்பெனிகள் உட்பட, பல நிறுவனங்கள் பல வண்ணங்களில், பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கின்றன. மறுசுழற்சிக்கு உதவாத அத்தகைய பிளாஸ்டிக் பைகள், உள்ளாட்சி அமைப்புகளின் குப்பை குழிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை செய்யப்படும் இடங்களில், குவியலாக சேர்த்து வைக்கப்பட்டு உள்ளன.
பயன்படாது

உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:மசாலா பாக்கெட்டுகள் உட்பட, பல வண்ணங்களில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகளின் உட்புறம், 'சில்வர் பூச்சு' இருப்பதால், அவற்றை மறுசுழற்சிக்கு, நிறுவனங்கள் வாங்குவதில்லை. இதனால், அவற்றை மேலாண்மை செய்வது, எங்களுக்கு கடினமாக உள்ளது. எனவே, பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கும் நிறுவனங்கள், மறுசுழற்சிக்கு ஏற்ற வகையில், பிளாஸ்டிக் பைகளை தயாரித்தால், அவற்றை மேலாண்மை செய்வது எளிதாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு முகாம்

Print PDF
தினமலர்        08.09.2014

திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு முகாம்


பாபநாசம்: பாபநாசம் டவுன் பஞ்சாயத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடந்தது. டவுன் பஞ்சாயத்து தலைவர் கருணாநிதி தலைமை வகித்து பேசியதாவது: டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களிலிருந்து திடக்கழிவுகள் அதிக அளவில் சேகராமாகிறது. வணிக வளாகங்கள், திருமண மண்டபங்களில் சேகரமாகும் குப்பைகளை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களே, மக்கும் குப்பைகள்- மக்காத குப்பைகள் என தரம்பிரித்து டவுன் பஞ்சாயத்து வாகனத்தில் ஒப்படைக்க வேண்டும். வணிக வளாக குப்பைகளை தெருக்களில் கொட்டினால், அபராதம் விதிக்கப்படும். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என கேட்டுக் கொண்டார். முகாமில், செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி, துணைத் தலைவர் மணிகண்டன், ரிவர்சிட்டி ரோட்டரி தலைவர் உத்திராபதி, சுகதார ஆய்வாளர் செந்தில்குமரகுரு, வார்டு கவுன்சிலர்கள் மற்றும் டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 66