Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்கக் கூடாது புதிய கமிஷனர் கிரண்குராலா கண்டிப்பு

Print PDF

தினத்தந்தி           26.11.2013

மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்கக் கூடாது புதிய கமிஷனர் கிரண்குராலா கண்டிப்பு

மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்கக் கூடாது என்று புதிய கமிஷனர் கிரண்குராலா கண்டிப்புடன் கூறினார்.

வரித்தொகை

மதுரை மாநகராட்டியின் புதிய கமிஷனராக கிரண்குராலா பொறுபேற்றுள்ளார். அவர் நேற்று மண்டலம்–4 அலுவலகத்தில் ஆய்வு பணி மேற்கொண்டார். நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வு பணி மதியம் 2.30 மணி வரை நடந்தது. ஆய்வின் போது அவர் தகவல் மையம், வருவாய் பிரிவு, பொறியியல் பிரிவு, கம்ப்யூட்டர் பிரிவு போன்றவற்றை பார்வையிட்டார்.

மேலும் வரி வசூலில் தற்போதைய நிலை மற்றும் வசூலிக்க வேண்டிய நிலுவை தொகை குறித்து கேட்டறிந்தார். மண்டல அலுவலகங்களுக்கு வரும் மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டு உடனடியாக தீர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதே போல் அலுவலகத்திற்கு வரும் தபால்கள் மற்றும் கோப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கமிஷனரின் இந்த ஆய்வின் போது மண்டல உதவி கமிஷனர் தேவதாஸ் உடன் இருந்தார்.

ஆய்வு கூட்டம்

இந்த ஆய்விற்கு பின்னர், மாநகராட்சி அண்ணாமாளிகையில் துப்புரவு பணி குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கமிஷனர் கிரண்குராலா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

மதுரை மாநகராட்யின் முக்கிய பணி துப்பரவு பணியாகும். எனவே அனைத்து சுகாதார ஆய்வாளர்களும் வார்டு வாரியாக துப்பரவு பணியாளர்கள் வருகை, குப்பை வாகனங்கள், குப்பை தொட்டிகள் எண்ணிக்கை, குப்பை அகற்றுதல், ஆகிய விவரக்ன்களை அந்தந்த மண்டல ஆய்வாளருக்கு தினந்தோறும் அறிக்கையாக கொடுக்க வேண்டும். பின்னர் அந்த அறிக்கையை எனக்கு தெரிவிக்க வேண்டும்.

கண்டிப்பு

மாநகராட்சி பகுதிகளில் உள்ள டீ மற்றும் சாலையோர கடைகள் குப்பைகள் மற்றும் டீ கப்புகளை குப்பை தொட்டி தவிர கண்ட இடங்களில் போட கூடாது என முதலில் எச்சரிக்கை கொடுக்க வேண்டும். மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். ஆற்றுக்கரையில் தீவிர துப்புரவுப்பணி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கமிஷனர் கிரண்குராலா, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை தேங்கி நிற்கிறது என்ற புகார் இருக்கக் கூடாது. இதனை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார். கூட்டத்தில் துணை கமிஷனர் லீலா, நகர் பொறியாளர் மதுரம், நகர் நல அலுவலர் யசோதாமணி உள்பட அதிகாரிகளும், துப்புரவு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

 

பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு: பெண்ணுக்கு அரை கிராம் தங்கம் பரிசு

Print PDF

தினமணி        22.11.2013

பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பு: பெண்ணுக்கு அரை கிராம் தங்கம் பரிசு

பிளாஸ்டிக் குப்பை சேகரிப்புக்காக திருவொற்றியூரைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுக்கு அரை கிராம் தங்க நாணயத்தை சென்னை மாநகராட்சி சார்பில் திருவொற்றியூர் மண்டலக் குழுத் தலைவர் மு.தனரமேஷ் புதன்கிழமை வழங்கினார்.

மக்காத குப்பையைத் தனியாகப் பிரித்தெடுப்பதில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்படும்போது டோக்கன்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு மண்டலத்திலும் சுமார் 500 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் சேர்ந்தவுடன் குலுக்கல் போட்டிகளை நடத்தி முதலில் தேர்வு செய்யப்படும் அதிஷ்டசாலிக்கு அரை கிராம் தங்க நாணயமும் அடுத்து தேர்வாகும் ஐந்து நபர்களுக்கு கடிகாரமும் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து திருவொற்றியூர் மண்டலத்தில் இவ்வாறு பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து வழங்கும் பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்த மண்டலத்தில் 500 கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டதையடுத்து குலுக்கல் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில் டி.எஸ்.கோபால் நகரைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண் தேர்வானார்.

இவருக்கு அரை கிராம் தங்க நாணையத்தை மண்டலக் குழுத் தலைவர் மு.தனரமேஷ் வழங்கினார். மேலும் ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கடிகாரங்களையும் அவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையர் காங்கேயம் கென்னடி, மாமன்ற உறுப்பினர்கள் அமல்ராஜ், சூர்யபாபு, நாகம்மாள், ஜெபராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

பிளாஸ்டிக் கழிவு கொடுத்த 3 பேருக்கு தங்க நாணயம்

Print PDF

தினகரன்          21.11.2013  

பிளாஸ்டிக் கழிவு கொடுத்த 3 பேருக்கு தங்க நாணயம்

திருவொற்றியூர், : பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் கொடுத்தவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. மண்டல குழு தலைவர் தனரமேஷ் தலைமை வகித்தார்.

தலா 500 பேர் வீதம் 3 குலுக்கல் நடத்தப்பட்டது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3  பேருக்கு அரை கிராம் தங்க நாணயம், 12 பேருக்கு கைக்கடிகாரம் ஆகியவற்றை மண்டல உதவி ஆணையர் காங்கேயன் கென்னடி வழங்கினார். மண்டல அதிகாரிகள் காளிமுத்து, விஜயராகவன், கவுன்சிலர்கள் சூரியபாபு, அமுல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


Page 10 of 66