வழக்கமாக 450விழா நாட்களில் 900 டன் குப்பை
Tuesday, 15 October 2013 05:39
administrator
நாளிதழ்௧ள் -
திடக்௧ழிவு மேலாண்மை
தினமலர் 15.10.2013 வழக்கமாக 450விழா நாட்களில் 900 டன் குப்பை
மதுரை : மதுரை மாநகராட்சியில் விரிவாக்கத்திற்கு பின்பு, ஒரு நாளில் தேங்கும் குப்பை அளவு, 450 டன். இதில் மக்காத குப்பை 150 டன். குப்பையை தேக்குவதிலும், சேகரிப்பதிலும், வெளியேற்றுவதிலும் தொய்வு நிலவுகிறது.
மாநகராட்சியை குறைசொல்லும் அதேநேரத்தில், இந்தளவு குப்பை குவிய, மக்களும் காரணமாக இருப்பதை மறுக்க முடியாது. மாநகராட்சியில் பல கால்வாய்களை, குப்பையால் மூடிய "பெருமை' மதுரை மக்களை சேரும். இன்றும், பல இடங்களில் குப்பைத் தொட்டியை விட, அதைச் சுற்றி சிதறியுள்ள குப்பை டன் கணக்கில் இருக்கும்.தீபாவளிக்கு அடுத்து, ஆயுத பூஜையின் போது, மதுரையில் அதிக குப்பை தேங்குகிறது. வழக்கத்தை விட, இரு மடங்கு அதிகரிக்கும் குப்பையை அகற்ற, குறைந்தது ஒரு வாரம் வரை எடுத்துக் கொள்ளப்படுகிறது.
கூடுதல் பணியாளர்களை அமர்த்தினாலும், பணியை இரட்டிப்பாக்கினாலும், இருக்கும் வாகனங்களை வைத்து பார்க்கும் போது, விழாக்கால குப்பையை அகற்றுவது, சாதாரண விஷயம் அல்ல. நேற்று முன்தினம் மதுரையில் தேங்கிய குப்பை அளவு, 900 டன். நேற்று 550 டன். அவற்றை அகற்றும் பணிகள், முடுக்கிவிடப்பட்டிருந்தாலும், பணிகள் எப்போது முழுமை பெறும் என்பது, கேள்விக்குறியே. நகரின் சூழலை புரிந்து, நம் பயன்பாட்டை குறைப்பதுடன், வீண் கழிவுகள் கொட்டுவதை தவிர்த்தால், வழக்கமான குப்பை சேகரிக்கும் பணியில், தொய்வு இருக்காது. டன் கணக்கில் குப்பை சேர்ந்து கொண்டிருந்தால், மில்லியன் கணக்கில் கொசுக்கள், ஈக்கள் உற்பத்தியாகிவிடும் என்பதை, அனைத்து தரப்பினரும் உணர வேண்டும்.
|
குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் புதிய திட்டம் விரைவில் வருகிறது: தமிழக அரசு துரித நடவடிக்கை
Wednesday, 09 October 2013 09:26
administrator
நாளிதழ்௧ள் -
திடக்௧ழிவு மேலாண்மை
மாலை மலர் 09.10.2013
குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் புதிய திட்டம் விரைவில் வருகிறது: தமிழக அரசு துரித நடவடிக்கை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் பல்வேறு புதிய
திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். முதல்-அமைச்சர்
ஜெயலலிதாவின் உத்தரவுகளை அந்த துறையின் செயலாளர் கே.பணீந்தர ரெட்டி
துரிதமாக செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறார்.
பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்தாலும், சமீபத்தில் முதல்-அமைச்சரால்
அறிமுகப்படுத்தப்பட்ட அம்மா உணவகங்கள் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் அமோக
வரவேற்பு கிடைத்துள்ளது.
ஒரு ஏழைகூட இனி இரவில் பசியோடு படுக்கைக்கு செல்லத்தேவையில்லை என்ற நிலையை
மாநகராட்சி பகுதிகளில் ஏற்படுத்தும் முனைப்பில் இந்த திட்டம் முழுவீச்சில்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மக்கள் கூடும் பகுதிகளில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனால் ஏழை,
எளிய மக்கள் அதிகமாக வந்து செல்லும் அரசு ஆஸ்பத்திரிகளில், நல்ல உணவு
கிடைக்கும் வசதி இல்லை.
அங்கு சிகிச்சைக்காக வருபவர்கள், உணவுக்காக வெளியே செல்ல வேண்டியதுள்ளது.
ஆஸ்பத்திரி வளாகத்துக்கு அருகே விற்கப்படும் உணவுகளின் தரமும், சுகாதாரமும்
குறைவாகவே உள்ளன. இந்த நிலையை மாற்றுவதற்காக சென்னையில் உள்ள அனைத்து அரசு
ஆஸ்பத்திரிகளிலும் அம்மா உணவகங்களை திறப்பதற்கு முதல்-அமைச்சர் முடிவு
செய்துள்ளார்.
இதுகுறித்து உயர் அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
சென்னையில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் அம்மா உணவகங்களை திறக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் அவை திறக்கப்படும். மற்ற அம்மா
உணவகங்களில் கிடைக்கும் அதே உணவுகளை இதிலும் பெறலாம்.
இடம் பெயர்ந்து வருகிறவர்கள், கூலித்தொழிலாளிகள் ஏராளமானோர்
மாநகராட்சிகளில்தான் அதிகம் உள்ளனர். எனவேதான் மாநகராட்சிகளில் அம்மா உணவக
திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
சென்னையில் கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் அதிகம் குப்பை
கொட்டப்படுகிறது. குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை
செயல்படுத்த அரசுமுயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அதுதொடர்பாக டெண்டர் விடுக்கப்பட்டது. அதில் பங்கேற்கும் நிறுவனங்களின்
ஒப்பந்தப்புள்ளிகளை மதிப்பிடும் பணி நடைபெறுகிறது. இன்னும் இரண்டு
மாதங்களில் இந்தப் பணி நிறைவு பெறும். அதன்பின்னர் அந்த திட்டத்துக்கு முழு
வடிவம் கொடுத்து, அதை நடைமுறைப்படுத்துவோம்.
பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் பணி, மாநகராட்சிகள், நகராட்சிகளில் ஆங்காங்கே
நடைபெற்று வருகிறது. இந்த சாலையும் மற்ற சாலைகளின் தரத்துக்கு
இணையானதுதான். இந்த சாலைகளை அமைக்கும்போது அதில் 10 சதவீதம் பிளாஸ்டிக்
கழிவுகள் உபயோகிக்கப்படுகிறது.
எனவே சாலை அமைப்பதற்காக வாங்கப்பட வேண்டிய உபபொருட்கள் 10 சதவீதம் மீதமாகிறது.
தெருநாய் தொல்லைகள் குறித்த புகார்கள் உடனுக்குடன் கவனிக்கப்படுகின்றன.
இவற்றை எப்படி நடத்த வேண்டும் என்றுள்ள விதிகளின்படி அவற்றை நடத்துகிறோம்.
தொல்லை தரும் நாய்களை இடமாற்றம் செய்வது, ஆபரேஷன் செய்வது போன்ற
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
அதுதவிர நாய் வண்டிகள் வாங்கிக்கொடுப்பது, நாய் பிடிப்பவர்கள், கால்நடை
டாக்டர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு
வருகிறோம்.
மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் சூரிய மின்சக்தியை பயன்படுத்துவது
தொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பரிசீலித்து வருகிறார். அதற்கான மின்
மீட்டர் அமைப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டதும் திட்டம் அமலுக்கு வரும்.
தமிழகத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தேவையாக உள்ளது.
கோடைகாலங்களில் ஆற்று நீர் போன்ற மற்ற ஆதாரங்களில் இருந்து குடிநீர்
கிடைக்காவிட்டாலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் குடிநீரை
சப்ளை செய்யலாம்.
அந்த வகையில் முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் ரூ.4 ஆயிரம் கோடி செலவில்
நெமிலியில் 150 எம்.எல்.டி. அளவு கொண்ட நிலையமும், நெமிலி வடக்கில் 400
எம்.எல்.டி. திறன் கொண்ட நிலையமும் அமைப்பதற்கான திட்ட அறிக்கை
தயாரிக்கப்பட்டு வருகிறது.
இவை தவிர ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களிலும் தலா 100 எம்.எல்.டி.
திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை
தயாரிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் இன்னும் 3 ஆண்டுகளில்
செயல்பாட்டுக்கு வந்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணியில் செட்டிபாளையம் பொதுமக்கள்
Friday, 04 October 2013 06:42
administrator
நாளிதழ்௧ள் -
திடக்௧ழிவு மேலாண்மை
தினமலர் 03.10.2013 பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணியில் செட்டிபாளையம் பொதுமக்கள்
திருப்பூர் :திருப்பூரில், பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணியில் பொதுமக்கள் நேற்று களமிறங்கினர். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், 100 கிலோ பிளாஸ்டிக் சேகரித்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 550 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதில், 300 டன் வரை பிளாஸ்டிக் கழிவாக இருக்கிறது. குப்பை கிடங்கு மட்டுமன்றி, ரோடு, சாக்கடை கால்வாய், விவசாய நிலங்கள் என அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் கழிவு பரவியுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியிலும் மக்களை நேரடியாக ஈடுபடுத்தும் வகையில், பசுமை நண்பர்கள் அமைப்பு சார்பில், பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணி நேற்று துவங்கியது. இதற்கான துவக்க விழா, கே.செட்டிபாளையம் பள்ளியில் நடந்தது. பசுமை நண்பர்கள் அமைப்பு தலைவர் பாபு தலைமை வகித்தார். 36வது வார்டு கவுன்சிலர் பேபி தேசியக்கொடி ஏற்றினார். காந்தி படத்துக்கு, தர்மலிங்கம், மணி ஆகியோர் மாலை அணிவித்தனர்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை, அனைவரும் ஆர்வமாக பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தனர். கே.செட்டிபாளையம் முதல், விவேகானந்தா பள்ளி வரை, ஒரு கிலோ மீட்டர் தூரம், ரோட்டின் இருபுறமும் தேங்கியிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை பொறுக்கி எடுத்தனர்.
ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் 50 மூட்டைகளில் 100 கிலோ பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கப்பட்டது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், 100 கிலோ இருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பிரதான ரோட்டிலேயே இவ்வளவு பிளாஸ்டிக் கழிவு இருந்தால், குடியிருப்பு பகுதிகள், குப்பை தேங்கும் இடங்களில் இன்னும் அதிகளவு இருக்க வாய்ப்புள்ளது. முதல்கட்டமாக, கே.செட்டிபாளையத்தில் இப்பணி துவங்கியுள்ளது. இதேபோல், மாதத்துக்கு ஒரு முறை, ஏதாவது ஒரு பகுதியில் பிளாஸ்டிக் கழிவு அகற்றும் பணி நடத்தப்படும் என பசுமை நண்பர்கள் அமைப்பினர் தெரிவித்தனர்.
|
|
|
|
Page 14 of 66 |