Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

வெள்ளலூர் குப்பைக் கிடங்கை சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை

Print PDF

தினமணி             03.02.2014

வெள்ளலூர் குப்பைக் கிடங்கை சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை

வெள்ளலூர் குப்பைக் கிடங்கை சுகாதாரமாகப் பராமரிக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தினமும் சேகரமாகும் சுமார் 850 டன் குப்பைகள் வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. இக் குப்பைகள் அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு பிராசசிங் செய்யப்படுகிறது.

குப்பையிலிருந்து துர்நாற்றம் மற்றும் கொசு, ஈக்கள் தொல்லைகளைத் தடுக்க தினமும் 5 பணியாளர்கள் பூச்சிக் கொல்லி மருந்து தெளித்து வருகின்றனர். இம்முறையானது வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு குப்பை ஏற்றி வரும் வாகனம் உள்ளே வந்ததும் முதலில் எடை மேடை அருகே மைக்ரோ ஆர்கனிசம் கலவை குப்பையின் மேல் தெளிக்கப்படுகிறது.

பிறகு குப்பையை பிராசசிங் பிளான்டில் கொட்டியவுடன் மீண்டும் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது. பிறகு உரம் தயாரிக்க குப்பைகள் கொட்டி வைப்பதன் மேலேயும் மருந்து தெளிக்கப்படுகிறது.

தினமும் சேகரமாகும் குப்பையின் மேலும் மற்றும் பிராசசிங் செய்த குப்பையின் மேலும் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் க.லதா தெரிவித்துள்ளார்.

 

மாநகராட்சியில் 30 வார்டுகளில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு

Print PDF

தினகரன்                03.02.2014

மாநகராட்சியில் 30 வார்டுகளில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு

திருப்பூர், : மாநகரில் குப்பை சேகரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.

மாநகரில் தினமும் 540டன் குப்பை சேருகிறது. இக்குப்பையை அகற்றும் பணி, மாநகராட்சி நிர்வாகத்திற்கு சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 2 மற்றும் 3வது மண்டலங்களில் உள்ள தலா 15 வார்டுகளிலும் குப்பை சேகரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், வரும் 2ம் தேதியில் இருந்து இந்த 30 வார்டுகளிலும் குப்பை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இதுதொடர்பாக, அந்த தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியும் ஆய்வுக் கூட்டம் மேயர் விசாலாட்சி தலை மையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. துணை மேயர் குணசேகரன், மண்டலத் தலைவர்கள் ராதாகிருஷ்ண ன், ஜான், கிருத்திகா சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், வீதிகளில் குப்பையை அள்ளுவது தொடர்பாக அந்த தனியார் நிறுவனம் செயல்படும் விதம் குறித்து அந்நிறுவனப் பிரதிநிதிகள் விளக்கினர். வீடுகள் தோறும் குப்பை சேகரிப்பதைக் கண்டறிவது குறித்து மேயர் விசாலாட்சி கேட்டறிந்தார். குப்பை அள்ளும் வாகனங்களில் ஜி.பி.ஆர்.கருவி பொருத்தப்பட்டு, ஆன்லைன் மூலமாக வீதிகளில் குப்பை நிரம்பியுள்ள கன்டெய்னர் கண்டறியப்படும் என்பது உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து தனியார் நிறுவனப் பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து நேற்று மாலை மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள், மண்டலத் தலைவர்கள் மற்றும் நிலைக்குழு தலைவர்களுக்கு இதுதொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

 

விசில் அடித்து குப்பை பெறும் திட்டம் : மாநகராட்சி பகுதியில் அறிமுகமாகிறது

Print PDF

தினமலர்             01.02.2014

விசில் அடித்து குப்பை பெறும் திட்டம் : மாநகராட்சி பகுதியில் அறிமுகமாகிறது

திருப்பூர் : மாநகராட்சி பகுதியில், வீடு வீடாக வந்து, விசில் அடித்து குப்பை பெறும் திட்டம், வரும் 2ம் தேதி முதல் துவங்க உள்ளது. முதல்கட்டமாக, இரு மண்டலங்களில் மட்டும் தனியார் நிறுவனம் மூலம் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.திருப்பூர் மாநகராட்சியில், இரண்டாவது மற்றும் மூன்றாவது மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வரும் 2ல், எம்.எஸ்., நகரில் இத்திட்டம் துவங்கப்பட உள்ளது. இப்பணி மேற்கொள்ளப்படும் விதம் குறித்து, அந்நிறுவன நிர்வாக இயக்குனர் வெங்கடேஸ்வரன், படக்காட்சி மூலம் விளக்கினார். மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன், மண்டல மற்றும் நிலைக்குழு தலைவர்கள், சுகாதார பிரிவு அலுவலர்கள் பங்கேற்றனர்.

முதல்கட்டமாக, 781 துப்புரவு தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 600 தள்ளுவண்டிகள் மூலம் 4 பச்சை (மக்காத குப்பை), 2 சிவப்பு (மக்கும் குப்பை) நிற கண்டெய்னர் வைத்து, வீடு வீடாகச் சென்று விசில் அடித்து குப்பை சேகரிப்பர். அவை பகுதிவாரியாக உள்ள தலா 1100 லி., கொள்ளளவு கொண்ட குப்பை தொட்டிகளில் சேகரிக்கப்படும். பின், அவை பகுதிவாரியாக 8 கியூபிக் (8 வண்டிகள்) மற்றும் 14 கியூபிக் காம்பாக்டர் (4 வண்டிகள்) பொருத்திய வாகனங்கள் மற்றும் 10 டிப்பர் ஆட்டோக்கள் மூலம் கொண்டு செல்லப்படும். இவை தவிர, லோடர், கால்வாய் சுத்தம் செய்யும் அதிநவீன கிரேன் ஆகியனவும் பயன்படுத்தப்பட உள்ளன.

வெங்கடேஸ்வரன் கூறியதாவது:

ஊழியர்கள் வருகை பயோமெட்ரிக் முறையிலும், வாகனங்கள் செல்வது ஜி.பி.ஆர்.எஸ்., முறையிலும் கண்காணிக்கப்படும். குப்பை தொட்டிகளில் ஆர்.எப்.ஐ.டி., முறையில் குப்பை போடுதல் மற்றும் நிரப்பும் பணியும், சுத்தம் செய்யப்பட்ட வீதிகளில், கண்காணிப்பாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து, படம் பிடித்தும் "ஆன்-லைன்' மூலம் பதிவு செய்யப்படும். மாநகராட்சி கமிஷனர் அறையிலிருந்தபடி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் ஊழியர் பணியாற்றுவர். காலை 6.00 முதல் பகல் 2.00 மணி வரை முழு அளவிலும், 2.00 முதல் 5.00 மணி வரை ரிசர்வ் ஊழியர்களும் பணியில் இருப்பர். மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் போன்ற இடங்கள் இரவிலும் சுத்தம் செய்யப்படும், என்றார்.

 


Page 4 of 66