Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

ஈரோடு மாநகராட்சியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்க வேண்டும் மேயர் மல்லிகா பரமசிவம் வேண்டுகோள்

Print PDF

தினத்தந்தி               21.06.2013

ஈரோடு மாநகராட்சியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்க வேண்டும் மேயர் மல்லிகா பரமசிவம் வேண்டுகோள்


ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தமிழகம் முழுவதும் கடந்த 2003–ம் ஆண்டு தமிழக முதல்–அமைச்சர் உத்தரவின்படி மழைநீர் சேகரிப்பு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக ஏதுவாக இருந்தது. தற்போது தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளில் நிலத்தடி நீரை உயர்த்த முதல்–அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட அனைத்து குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்க கேட்டுக்கொள்கிறேன். பருவமழைக்கு முன்பாக இந்த கட்டமைப்புகளை அமைக்க வேண்டும்.

இதுபோல் குளம், குட்டைகள் நீர் பிடிப்பு பகுதிகளை சுத்தம் செய்து மழைநீர் சேகரிப்பு செய்ய மாநகராட்சிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் மேயர் மல்லிகா பரமசிவம் கூறி உள்ளார்.
 

மழைநீர் சேகரிப்புப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட அறிவுறுத்தல்

Print PDF

தினமணி             20.06.2013 

மழைநீர் சேகரிப்புப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட அறிவுறுத்தல்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்புப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆணையர் மா.அசோகன் உத்தரவிட்டார்.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புப் பணிகளை தீவிரப்படுத்த, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து மாநகராட்சி ஆணையர் மா.அசோகன் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:

மாநகராட்சி அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான மாதிரிகள் அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மாநகராட்சியின் அனைத்து அலுவலகங்களிலும் மழை நீர் சேகரிப்பு மையம் அமைக்கப்பட வேண்டும்.

மாநகராட்சி ஊழியர்கள் தங்கள் பகுதியில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைப்பது குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

வார்டு அலுவலக உதவி ஆணையர்கள் தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அடங்கிய குழுவை அமைத்து, தெருப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு, சர்வே பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

திருமண மண்டபங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள், குடியிருப்பு நலச் சங்க நிர்வாகிகளை அழைத்து மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருவாய் வரிவசூல் செய்யும் வாகனங்கள்கள், திரையரங்குகள் ஆகியவற்றின் மூலம் மழைநீர் சேகரிப்பது குறித்து விளம்பரம் செய்ய வேண்டும்.

மக்கள் கூடும் பொது இடங்களில் நாடக நடிகர்கள், கலைக் குழுவினர் மூலம் மழைநீர் சேகரிப்பு குறித்த கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு, மழைநீர் வடிகால் சரியான அளவில் உள்ளனவா என சரிபார்க்க வேண்டும்.

புதிதாக கட்டடம் கட்டுபவர்கள் கட்டட வரை படத்துடன் மழைநீர் சேகரிப்பு அமைப்பையும் சேர்த்து, வரைபடம் ஒப்புதல் பெறுவதோடு, மாநகராட்சி அலுவலர்கள் அதை ஆய்வு செய்த பின்னரே குடிநீர் இணைப்பு மற்றும் வரி விதிப்பு செய்யப்பட வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மழைநீர் சேகரிப்புப் பணியில் தீவிர கவனம் செலுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.

 

அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு

Print PDF

தினகரன்              19.06.2013  

அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகாபரமசிவம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் உத்தரவுப்படி கடந்த 2003ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்புத்திட்டம் அமல்படுத்தப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. அதேபோல் தற்போது தமிழக முதல்வர் தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை குடியிருப்பு மற்றும் வணிக வளாகம், தொழிற்சாலைகள் ஆகிய இடங்களில் அமைத்து அதன்மூலம் நிலத்தடிநீரை உயர்த்தி பொதுமக்கள் பயனடைய தெரிவித்துள்ளார்.

அதன்படி ஈரோடு மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிகவளாகங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உடனடியாக பருவமழைக்கு முன்னதாக அமைக்க வேண்டும். மேலும் குளம், குட்டைகளில் நீர்பிடிப்பு பகுதிகளை சுத்தம் செய்து மழைநீர் சேகரிப்பு செய்ய மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மேயர் தெரிவித்துள்ளார்.

 


Page 5 of 96