Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Agriculture

அனைத்து மாநகராட்சிகளிலும் பண்ணை பசுமை அங்காடிகள்

Print PDF
தினமணி       10.11.2014

அனைத்து மாநகராட்சிகளிலும் பண்ணை பசுமை அங்காடிகள்

தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் கூட்டுறவுத்துறை சார்பில் மலிவு விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் திறக்கப்படும், என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை ரேஸ்கோர்ஸ் காலனி, ஆரப்பாளையம், சுந்தர்ராஜபுரம் ஆகிய இடங்களில் கூட்டுறவுத்துறை சார்பில் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கூட்டுறவு அங்காடிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியது:

மக்களுக்கு கடைகளில் விற்பனை செய்வதை விட காய்கறிகள் கிலோவுக்கு ரூ.7 முதல் ரூ.10 வரை குறைவாகவும், தினமும் பசுமையாகவும் கிடைக்கும் வகையில் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகளைத் திறக்க, சில மாதங்களுக்கு முன்பே அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அவரது ஆலோசனையின்படி, கோவை மாநகராட்சி பகுதியில் முதல்கட்டமாக 10 அங்காடிகள் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக, மதுரை மாநகராட்சி பகுதியில் தற்போது 3 அங்காடிகள் திறக்கப் பட்டுள்ளன. விரைவில் மேலும் 7 இடங்களில் இந்த அங்காடிகள் திறக்கப்படும். அங்காடிகளுக்கு தினமும் ஊட்டி, கொடைக்கானல் பகுதியிலிருந்து உருளைக்கிழங்கு, பீன்ஸ், பீட்ரூட், முட்டைக்கோஸ் போன்ற ஆங்கில வகை காய்கறிகளும் நாட்டுத் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட மற்ற அனைத்துக் காய்கறிகளும் தினமும் விவசாயிகளிடம் அதிகாலையில் அந்தந்தப் பகுதி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, அங்காடிகளுக்கு வாகனம் மூலம் வழங்கப்படும்.

அங்காடிகளில் தினமும் காலை 8 மணி முதல் விற்பனை செய்யப்படும். விலைப்பட்டியல் அங்காடி முகப்பில் வைக்கப்படும். இந்த அங்காடிகளை தினமும் வேளாண்மைத்துறை கள அலுவலர்கள், கூட்டுறவுத்துறை துணைப்ó பதிவாளர், ஆட்சியரால் நியமிக்கப்படும் அலுவலர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து விலைப்பட்டியலையும் கண்காணிப்பர்.

அங்காடிகளில் வாடி, வதங்கிய காய்கறிகள் விற்பனை செய்யக்கூடாது, பசுமை மாறாமல் விற்பனை செய்ய வேண்டும் என அங்காடி பொறுப்பாளர் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, கழிவு மான்யம் 10 சதவீதத்தை அரசின் விலைக்கட்டுப்பாடு பிரிவிலிருந்து வழங்குவதற்கு, முதல்வராக இருந்த ஜெயலலிதா ஏற்கெனவே ஒதுக்கீடு செய்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி பகுதியில் அடுத்தவாரமும், படிப்படியாக மற்ற மாநகராட்சி பகுதிகளிலும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் திறக்கப்படும். இதன் பிறகு, நகராட்சி, தாலுகா பகுதிகளிலுóம் இந்த அங்காடிகள் திறக்கப்படும் என்றார்.
 

நகர்ப்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் துவங்க தொடர்பு கொள்ளலாம்

Print PDF

தினகரன்      08.09.2014

நகர்ப்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் துவங்க தொடர்பு கொள்ளலாம்


கோவை, : கோவையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நகர்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் துவங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் நகர்புறங்களில் வாழும் மக்கள் தமக்கு தேவையான காய்கறிகளை தாமே பயிரிட்டு கொள்ள தமிழக அரசு நகர்புற தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது. இத்திட்டம் தற்போது கோவை மாவட்டத்தில் செயல்பாட்டில் உள்ளது. காய்கறிகளை எளிய முறையில் வீட்டின் மேல் வளர்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

வீட்டின் மேல்தளத்தில் தோட்டம் அமைப்பதற்காக இடுபொருள்கள் மற்றும் தொழில்நுட்ப கையேடும் பயனாளிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ரூ1,352க்கு தோட்டக்கலை துறையால் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தளை மூலம் தோட்டம் அமைக்க 16 ச.மீ இடம் போதுமானது. ஒவ்வொரு பயனாளிகளும் 5 தளைகள் வரை அதிகபட்சமாக பெறமுடியும்.

இத்திட்டத்தின் தனி சிறப்பாக பத்து வகையான காய்கறி விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் காய்கறி செடிகளை வளர்ப்பதற்கு தென்னை நார் கழிவு கட்டியுடன் கூடிய 20 பாலிதீன் பைகள் வழங்கப்படவுள்ளது. இவை எடை குறைவாகவும் மற்றும் கையாளுவதற்கு எளிதாகவும் இருக்கும். தரையில் விரிக்கப்படும் பாலிதீன் விரிப்புகள் வீட்டினுள் நீர்கசிவு ஏற்படாமல் இருக்க தடுக்கிறது.

நீரில் எளிதாக கரையும் உரங்களை பயன்படுத்துவதால் செடிகள் செழிப்பாக வளரும். இயற்கை முறையிலான பூச்சிகொல்லி மற்றும் பூஞ்சான கொல்லிகள் பயன்படுத்துவதால் நஞ்சற்ற காய்கறிகளை விளைவிக்கலாம். இவைகளுடன் பிளாஸ்டிக் கைத்தெளிப்பான், பிளாஸ்டிக் பூவாலி, மண் அள்ளும் கருவி, மண்கிளரும் கருவி ஆகியவைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது கோவை நகரில் தோட்டக்கலை துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட 4 வாகனங்கள் மூலம் இத்திட்டத்தின் இடுபொருள்கள் பயனாளிகளின் இல்லத்திற்கு நேரடியாக கொண்டு சேர்க்கப்படுகிறது. இத்திட்டம் துவங்க ஆர்வமுள்ள சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், பீளமேடு, போத்தனூர், சூலூர் பகுதியினர் 99655-62700, 97864-86143. சர்க்கார் சாமக்குளம், காளப்பட்டி, சரவணம்பட்டி, காந்திபுரம்,  கணபதி பகுதியினர் 95784-52676, 97875-55692. ஆர்.எஸ்.புரம், பி.என்.புதூர், ராமநாதபுரம், வடவள்ளி, தொண்டாமுத்தூர் பகுதியினர் 97919-98833, 96598-52087.

சாய்பாபா காலனி, பெரியநாயக்கன்பாளையம், கவுண்டர் மில், துடியலூர் பகுதியினர் 95245-89749, 94888-36480 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Last Updated on Monday, 08 September 2014 09:41
 

கோவை அருகே பேரூராட்சியில் மண்புழு உரத்தில் விளைந்த காய்கறிகள்

Print PDF

தினகரன்                16.11.2010

கோவை அருகே பேரூராட்சியில் மண்புழு உரத்தில் விளைந்த காய்கறிகள்

பெ.நா.பாளையம், நவ. 16: கோவை அருகே பேரூராட்சியில் மண்புழு உரத்தில் விளைந்த காய்கறிகளை பொதுமக்களே தோட்டத்தில் சென்று பறித்துக்கொள்ளும் கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்டம் கூடலூர் கவுண்டம் பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் கல்யாண சுந்தரம் கூறியதாவது:

பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மையம் செயல்பட்டு வருகிறது. இப்பேரூராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் மூலம் மண் புழு உரம் தயாரிக்கப்படுகிறது. மையத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் கத்தரி, வெண்டை, முள்ளங்கி, காலிபிளவர், பச்சை மிளகாய், நூல்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. இவற்றுக்கு நாங்கள் தயாரித்த இயற்கை உரமான மண் புழு உரம் போடப்படுவதால், செடிகள் செழிப்பாகவும், காய்கள் புஷ்டியாகவும் உற்பத்தியாகின்றன. தீங்கு விளைவிக்காத இந்த காய்கறிகளை பொதுமக்கள் நேரிடையாக தோட்டத்தில் சென்று பறித்து கொள்ளலாம். அவற்றை, சுய உதவிக்குழுவினர் எடைபோட்டு தருவார்கள். குறைந்த விலையில் இவற்றை கொள்முதல் செய்து கொள்ளலாம்.

இந்த மையம் தினமும் காலை 7 மணி முதல் இயங்கும். இம்முறையால் பொதுமக்கள் காய்கறிகளை சேதப்படுத்தும் வாய்ப்பு குறைவாகும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இம்முறை மாவட்டத்திலேயே முதன்முறையாக கூடலூர் கவுண்டம் பாளையம் பேரூராட்சியில் தான் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு கல்யாணசுந்தரம் கூறினார்.

கோவை அருகே கூடலூர் கவுண்டம்பாளையத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள உள்ள காய்கறிகளில் தங்களுக்குத் தேவையானதை பெண்கள் பறிக்கின்றனர்.

தோட்டத்தில் மக்களே பறிக்கலாம்

 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 7