Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Agriculture

நெல், மிளகாய் விவசாயிகளுக்கு வர்ஷா பீமா மழை காப்பீடு திட்டம்

Print PDF

தினமணி 20.09.2010

நெல், மிளகாய் விவசாயிகளுக்கு வர்ஷா பீமா மழை காப்பீடு திட்டம்

சிவகங்கை, செப்.19: நெல், மிளகாய் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்ட வர்ஷா பீமா மழை காப்பீடு திட்டம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என காப்பீட்டு நிறுவன மண்டல மேலாளர் சி.அன்பரசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் தெரிவித்திருப்பது: மத்திய அரசால் நிறுவப்பட்டுள்ள அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட் விவசாயிகளின் நலனுக்காக மழை காப்பீடு திட்டத்தினை தமிழ்நாட்டில் சிவகங்கை, ராமநாதபுரம், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, மதுரை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில், 2010 சம்பா நெல் மற்றும் மிளகாய் பயிருக்கு அமல்படுத்துகின்றது.

இத்திட்டம், பருவகால மழையின் மாற்றங்களை அனுசரித்து, விவசாயிகளின் குறைவான விளைச்சல் இழப்பீட்டினை காப்பீடு மூலம் ஈடு செய்யும். அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட், மத்திய அரசால் 20-1-2002- ம் ஆண்டு வேளாண் காப்பீட்டுத் திட்டங்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்டது.

இதுவரை இந்நிறுவனம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ரூ 1,124 கோடி தேசிய வேளாண் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு அளித்துள்ளது. 2009-ல் நெற்பயிருக்கு சுமார் 6500 விவசாயிகளுக்கு ரூ 2.5 கோடி இத்திட்டத்தின் மூலம் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையானது பயிர் செய்யும் செலவீனத்தை பொருத்து ஏக்கருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் காப்பீடு செய்துள்ள விவசாயிகளும் நஷ்டஈடு காப்பீடு பெறும் தகுதி உடையவராவர். காப்பீடுக் காலம் முடிவடைந்த சில நாள்களுக்குள், காசோலையாகவோ அல்லது விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கவோ ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் காப்பீடு நிறுவனத்தின் முகவர் மூலம் வரையோலையாக (ஈஈ) பிரிமீயம் செலுத்தலாம். ரொக்கமாக பிரிமீயத்தினை எந்த நபரிடமும் செலுத்தினால் கம்பெனி பொறுப்பேற்காது.

இத்திட்டத்தில் சேர விவசாயிகள், தங்களது பெயரிலேயே சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருப்பது அவசியம். பிரிமீயத் தொகையை வரைவோலை மூலம் அனுப்ப வேண்டிய முகவரி ஈஈ ஐசஊஅயஞமத ஞஊ அஐஇ ஞஊ ஐசஈஐஅ கபஈ அலஐந ஆஅசஓ அஇ. சஞ. 00601020001827 (ல்ஹஹ்ஹக்ஷப்ங் ஹற் இட்ங்ய்ய்ஹண்).

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் சேவைவரி 10.30 உள்பட ரூபாய் ஒரு ஏக்கருக்கு. எஸ்.புதூர் வட்டாரம் நெல்லுக்கு 585, மிளகாய்க்கு ரூ 717. திருப்பத்தூர், கன்னங்குடி, தேவகோட்டை, சாக்கோட்டை ஆகிய வட்டாரம் நெல்லுக்கு ரூ441. சிங்கம்புணரி வட்டாரம் நெல்லுக்கு ரூ 640. சிவகங்கை வட்டாரம் நெல்லுக்கு ரூ518. திருப்புவனம் வட்டாரம் நெல்லுக்கு ரூ 474, மிளகாய்க்கு ரூ 882. காளையார்கோவில், கல்லல் ஆகிய வட்டாரம் நெல்லுக்கு ரூ 540, மிளகாய்க்கு ரூ 772. மானாமதுரை வட்டாரம் நெல்லுக்கு ரூ 485. இளையான்குடி வட்டாரம் நெல்லுக்கு ரூ441, மிளகாய்க்கு ரூ 662. மொத்த காப்பீடு மதிப்பு ஒரு ஏக்கர் நெல்லுக்கு ரூ 6,000, மிளகாய்க்கு ரூ10,000. விவசாயிகள் பிரிமீயம் கட்ட கடைசி நாள் 25-9-2010.

 

மழை காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்

Print PDF

தினமணி 02.09.2010

மழை காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை, செப். 1: புதுக்கோட்டையில் "வர்ஷா பீமா' மழைக் காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம வள மையம் மற்றும் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, முன்னோடி விவசாயி ஜி.எஸ். தனபதி தலைமை வகித்தார். முன்னோடி விவசாயி எஸ்.வி.காமராசு முன்னிலை வகித்தார். இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் வி. பழனியப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். முகாமில் அவர் பேசியது:

""மத்திய அரசால் நிறுவப்பட்டுள்ள வேளாண் காப்பீட்டு நிறுவனம் விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு மழைக் காப்பீட்டுத் திட்டத்தினை நிகழாண்டு முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவிர நாகை, தஞ்சாவூர், திருவாருர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வரையறுக்கப்பட்ட பகுதியில் பருவ கால மழையின் அடிப்படையில் குறைவான விளைச்சல் இழப்பீட்டை காப்பீடு மூலம் ஈடு செய்வதாகும். இதுவரை இந்நிறுவனம் தமிழ்நாட்டில் | 124 கோடியை காப்பீடாக அளித்துள்ளது. மேலும் விவரங்களை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கிராம வள மற்றும் அறிவு மையங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்'' என்றார். தொடர்ந்து காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கான விண்ணப்பங்களை விவசாயிகளிடம் அவர் அளித்தார்.

நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். ராஜ்குமார் பேசுகையில், ""புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அன்னவாசல் கிராம வள மையம் மற்றும் வம்பன் நால்ரோடு அத்தாணி, ஓணாங்குடி, அரிமளம், புள்ளான்விடுதி, பரம்பூர், மலைக்குடிப்பட்டி, ராஜாளிப்பட்டி, நெடுவாசல், மேலப்பட்டி மேற்பனைக்காடு ஆகிய கிராம அறிவு மையங்களில் இத்திட்டம் தொடர்பான விவரங்களைப் பெறலாம். மேலும் இது தொடர்பான விவரங்களை 94437 80661 மற்றும் 98659 22115 ஆகிய கைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்'' என்றார் அவர். தொடர்ந்து, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எல். பிரபாகரன், முன்னோடி விவசாயி பி. முருகேசன் ஆகியோர் பேசினர். முன்னதாக, ரைட்ஸ் நிறுவன இயக்குனர் ஆர்.அன்பழகன் வரவேற்றார். நிறைவில், தேசிய இணையக் கல்விக் கழக பிரதிநிதி எஸ். விஜிக்குமார் நன்றி கூறினார்.

 

மழைக் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேண்டுகோள்

Print PDF

தினமணி 30.08.2010

மழைக் காப்பீடு திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு வேண்டுகோள்

கடலூர்,ஆக.29: மழைக் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன் அடையுமாறு கடலூர் மாவட்ட விவசாயிகளை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

÷ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் வரும் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் மழைக் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 வட்டார விவசாயிகளும் சேரலாம். 25-8-2010 முதல் 10-2-2011 வரை பெறப்படும் மழை அளவைக் கணக்கில் கொண்டு வறட்சி ஏற்பட்டால் ஏக்கருக்கு |ரூ 6 ஆயிரம் வரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

÷இத்திட்டத்தில் விவசாயிகள் சேர்வதற்கு கடைசி நாள் 6-9-2010. இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய விரும்பும் நெல் விவசாயிகள், அந்தந்த வட்டாரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பிரீமியத் தொகையை அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஆக்ஸிஸ் வங்கிக் கணக்கில் சென்னையில் மாற்றத்தக்க வரைவோலையாகப் பெற்று, அத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் நிலத்துக்கான சிட்டா அடங்கல் ஆகியவற்றையும் இணைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநரிடமோ அல்லது அவ்வலுவலகத்தில் உள்ள காப்பீட்டு நிறுவன முகவரிடமோ அளிக்கலாம். வட்டார வாரியாக ஏக்கருக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள பிரீமியத் தொகை வருமாறு: கடலூர் |ரூ596, குறிஞ்சிப்பாடி ரூ 485, அண்ணா கிராமம் ரூ618, பண்ருட்டி| ரூ 529, குமராட்சி, விருத்தாசலம் மற்றும் கம்மாபுரம் வட்டாரங்கள் ரூ 386, நல்லூர் ரூ480, மங்களூர் ரூ518, கீரப்பாளையம் ரூ408, பரங்கிப்பேட்டைரூ 469, புவனகிரி ரூ 425, காட்டுமன்னார்கோவில் ரூ 452.

÷மேலும் விவரங்களுக்கு வேளாண் காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளரை (செல் 94438- 78513) அணுகலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

 


Page 2 of 7