Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சென்னையில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்

Print PDF

தினமணி              08.08.2021  

சென்னையில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்

posters

சென்னையை அழகுபடுத்தும் வகையில், இதுவரை, பொது இடங்களில் ஒட்டப்பட்டிருந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியா்கள் அகற்றி உள்ளனா்.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவுகளை அகற்றும் பணிகளும், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக மாநகரில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற மாதம்தோறும் ஒருவார காலத்திற்கு தீவிர தூய்மைப்பணி திட்டம், மாநகரில் அரசு மற்றும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அப்புறப்படுத்துதல் மற்றும் சுவர்களில் வரையப்பட்டுள்ள தனியார் விளம்பரங்களை அப்புறப்படுத்தி அவ்விடங்களில் வண்ண ஓவியங்களை வரைவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்கள் குறிப்பாக அரசு சுவர்கள், பாலங்கள், தூண்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்ற சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த ஒருமாத காலமாக மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டு வருகிறது.
 அதன் அடிப்படையில் இதுநாள்வரை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24,384 இடங்களில் 1,00,420 சுவரொட்டிகள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டுள்ளது. 

இதில் வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 7,498 இடங்களில் 25,403 சுவரொட்டிகளும், மத்திய வட்டாரத்திற்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 7,883 இடங்களில் 31,263 சுவரொட்டிகளும், தெற்க்கு வட்டாரத்திற்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 9,003 இடங்களில் 43,754 சுவரொட்டிகளும் அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


     

    9 இடங்களில் மீண்டும் கடைகள்: மாநகராட்சி அனுமதி

    Print PDF

    தினமணி        09.08.2021

    9 இடங்களில் மீண்டும் கடைகள்: மாநகராட்சி அனுமதி

    Chennaicorporation

    கோப்புப்படம்

    சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் மீண்டும் திங்கள்கிழமை முதல் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்ட ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பஜாா் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜாா் , என்எஸ்சி போஸ் சாலை, குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, ராயபுரம் சந்தை பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டா் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோயில் வரை, அமைந்தகரை சந்தை பகுதியில் அமைந்தகரை காவல் உதவி மையம் முதல், புல்லா நிழற்சாலை திருவிக நகா் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் சந்தை பகுதியில் ஆஞ்சநேயா் சிலை முதல் அம்பேத்கா் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகள், ஜூலை 31-ஆம் தேதி முதல் ஆக.9-ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பட தடை விதிக்கப்பட்டது.

    கொத்தவால் சாவடி சந்தை ஆக.1 முதல் ஆக.9-ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்படவும் அனுமதிக்கப்படவில்லை.

    அதற்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் திங்கள்கிழமை (ஆக.9) முதல் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தடை விதிக்கப்பட்டிருந்த 9 இடங்களில் வியாபாரிகளின் நலன் கருதி திங்கள்கிழமை முதல் கடைகள் செயல்படலாம். அதே நேரம், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும், கடைகளின் ஊழியா்களுக்கும் தடுப்பூசி செலுத்த விரைவுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளோம். இந்த விதிகளைப் பின்பற்றி கடைகள் செயல்படும் என வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் உறுதியளித்த பிறகே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றனா்.

     

    வரி பாக்கி ; வேலூர் மாநகராட்சி நோட்டீஸ்

    Print PDF

    தினமலர்     05.08.2021

    வரி பாக்கி ; வேலூர் மாநகராட்சி நோட்டீஸ்
     
    வேலூர்: வேலுார் மாநகராட்சியில் வரி பாக்கி வைத்துள்ள பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    வேலுார் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இங்கு தொழில் வரி, சொத்து வரி, மாநகராட்சிக்கு சொந்தமான 3,000 கடைகள் வாடகை என ஆண்டுக்கு 140 கோடி ரூபாய் வரை வருவாய் வந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியாக வரி வசூல் ஆகாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேலூர் மாநகராட்சிக்கு 200 கோடி ரூபாய் வரி வசூல் ஆகாமல் உள்ளது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது; கொரோனா பரவலை காரணம் காட்டி நிறைய பேர் வரி பாக்கி வைத்துள்ளனர். இதனால் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வரி பாக்கி வைத்தவர்களின் விவரங்களை சேகரித்து வரி பாக்கியை 15 நாட்களில் செலுத்தும்படி அவர்களுக்கு இன்று(ஆக-5) முதல் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

     
    • «
    •  Start 
    •  Prev 
    •  1 
    •  2 
    •  3 
    •  4 
    •  5 
    •  6 
    •  7 
    •  8 
    •  9 
    •  10 
    •  Next 
    •  End 
    • »


    Page 1 of 3988