Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

போட்டி தேர்வுக்கு வழிகாட்டும் மதுரை மாநகராட்சி வளாகம்: 4,000 பேர் அரசு பணியில் சேர உதவியது

Print PDF

தி இந்து           02.06.2017

போட்டி தேர்வுக்கு வழிகாட்டும் மதுரை மாநகராட்சி வளாகம்: 4,000 பேர் அரசு பணியில் சேர உதவியது

மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மர நிழல்களில் குழுக்களாக படித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் இளைஞர்கள். படங்கள்: ஆர்.அசோக்.
மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மர நிழல்களில் குழுக்களாக படித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் இளைஞர்கள். படங்கள்: ஆர்.அசோக்.

மதுரை மாநகராட்சி, காந்தி மியூசியம் வளாகம் 4 ஆயிரம் பேரை மத்திய, மாநில அரசு பணிகளுக்கு அனுப்பியதோடு, போட்டித் தேர்வர்களுக்கும் வழிகாட்டியாக உள்ளது.

வேலைவாய்ப்பு அலு வலகங்களில் பதிவு செய்தால் மட்டுமே, அரசு பணி என்ற நிலை குறைந்து, அரசின் 90 சதவீத துறைகளில் பணியில் சேர போட்டித் தேர்வில் தேர்வானால் மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது.

டிஎன்பிஎஸ்சி, வங்கி போட்டித் தேர்வுகளுக்கான ஆர்வம் அதிகரிப்பால் அதற்கான தனியார் பயிற்சி மையங்களும் பெருகிவிட்டன. தனியார் பயிற்சி மையங்கள் சிலருக்கு பயனுள்ளதாக இருந்தாலும், கட்டணம் செலுத்த இயலாத ஏழை இளைஞர்களுக்கு திறந்தவெளி ‘ஸ்டடி சர்க்கிள்’ வளாகமே உதவுகிறது. சமீபகாலமாக தென் மாவட்ட இளைஞர்களுக்கு மதுரை மாநகராட்சி அலுவலகம், காந்தி மியூசியம் மற்றும் பழநி ஆயக்குடி திறந்தவெளி பயிற்சி வளாகங்கள் பெரிதும் நம்பிக்கையை அளித்துள் ளன.

1994-ம் ஆண்டு காலகட்டத்தில் மதுரை சட்டக்கல்லூரி உட்பட சில கல்லூரி மாணவர்கள் மதுரை காந்தி மியூசியம், மாநகராட்சி வளாகத்தை தேர்ந்தெடுத்து போட்டித் தேர்வுகளுக்கு படிக்கத் தொடங்கினர். படிப்படியாக அரசு பணிக்கு பலர் சென்றதால் தற்போது, அங்கு படிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரு வளாகத்திலும் டிஎன்பிஎஸ்சி, வங்கி, ஆசிரியர் வாரிய தேர்வு உட்பட பல்வேறு தேர்வுகளுக்கு தயாராகின்றனர்.

தினமும் 800-க்கும் மேற்பட்டோர் குழுக்களாக கூடி, நண்பர்களாக பழகி படிக்கின்றனர். பெண்களும் அதிகமாக படிக்க வருகின்றனர். குறிப்பிட்ட ஒரு பாடத்தை படிக்கும்போது, மற்றவர்கள் கவனிக்கின்றனர். சந்தேகங்களை நிவர்த்தி செய்கின்றனர்.

நிசப்தமான சூழலில் ஒருங்கிணைந்த பயிற்சி வெற்றிக்கு வழிகாட்டுகிறது என அவர்கள் கூறுகின்றனர்.


மணிவண்ணன் - மலைச்சாமி

மணிவண்ணன் (கூடல்நகர்):

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே படித்ததால் சில வாய்ப்புகள் நழுவின. தற்போது முழுநேரமாக படிக்கிறேன். 1990-களில் இங்கு படித்து அரசு பணியில் இருப்பவர்கள் இங்கு வந்து அனுபவங்களை சொல்வது பயன் தருகிறது. விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், சங்கரன்கோவில், நெல்லை, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், ராமநாதபுரம் உட்பட தென் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் மதுரையில் அறை எடுத்து தங்கி படிக்கின்றனர். இங்கு வந்தால் போட்டித் தேர்வு ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. இவ்வளாகத்தில் படிக்க முடிந்த உதவியை மாநகராட்சி நிர்வாகம் செய்கிறது என்றார்.

ஏ.மலைச்சாமி (மதுரை):

நான் விருதுநகரில் கூட்டுறவுத் துறையில் உயர் அலுவலராக பணிபுரிகிறேன். 1994-ல் இங்கு படிக்கத் தொடங்கி 2000-ம் ஆண்டில் பணியில் சேர்ந்தேன். இங்கு வருவோர் நம்பிக்கை இழக்கக் கூடாது. ஒவ்வொரு தேர்விலும் சக நண்பர்கள் பணியில் சேரும்போது நம்பிக்கை பிறக்கும். நாங்கள் படிக்கும்போது, போட்டித் தேர்வு மிக குறைவு. தற்போது அதிக தேர்வுகள் வருகின்றன. மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை அதிகமாக எழுதலாம். விடுமுறையில் வருகிறோம். தேவையான உதவியை செய்ய தயாராக உள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இங்கு வந்தால் வழிகாட்டப்படும் என்றார்.

கோபிநாத் - பூமிநாதன்

மனம் தளரக் கூடாது

எஸ்.கோபிநாத் (மதுரை):

1994-ல் இவ்வளாகத்தில் 30 பேர் குழுவாக படிக்கத் தொடங்கினோம். நாங்களே முதல் குழு. எஸ்எஸ்சி தேர்வு மூலம் ரயில்வே துறையில் சேர்ந்தேன். நிதித்துறையில் மூத்த அதிகாரியாக பணிபுரிகிறேன். என்னுடன் படித்த 30 பேரும் பல்வேறு பணிகளில் உள்ளனர். முதலில் போட்டித் தேர்வர்களுக்கு நம்பிக்கை வேண்டும். நேர்காணல் போன்ற தேர்வில் தோல்வியைத் தழுவினாலும், மனம் தளரக் கூடாது.

இங்கு படிப்பவர்கள் ஒவ்வொரு தேர்விலும் 30 - 40 பேர் பணிக்குச் செல்கின்றனர். கடந்த 23 ஆண்டுகளில் சுமார் 4000 பேர் மத்திய, மாநில அரசு துறை பணிகளில் சேர்ந்துள்ளனர். இவ்வளாகம் வந்தாலே ஏதாவது ஒரு தேர்வில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை வருகிறது.

இங்கு தேர்வுக்கு வழிகாட்டுதலும் கிடைக்கும். டிஎன்பிஎஸ்சி தவிர, பிற தேர்வுகளையும் எழுதவேண்டும். என்னை போன்ற சிலர் விடுமுறையில் வந்து முடிந்த ஆலோசனையைத் தருகிறோம் என்றார்.

தேர்வுக்கு தயாராகும் பூமிநாதன் (கோ. புதூர்):

தனியார் பயிற்சி மையம் ஒன்றில் படித்தேன். அடிப்படையை மட்டுமே தெரிந்து கொள்ளலாம். இங்கு வந்தபின் குழுவாகச் சேர்ந்து படிப்பது பயனுள்ளதாக உள்ளது. அடுத்த தேர்வில் வெற்றிபெற்று விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

 

மறுசுழற்சிக்கு உதவாத 'பிளாஸ்டிக்' பைகள் : திடக்கழிவு மேலாண்மைக்கு சவால்

Print PDF

தினமலர்          26.05.2017

மறுசுழற்சிக்கு உதவாத 'பிளாஸ்டிக்' பைகள் : திடக்கழிவு மேலாண்மைக்கு சவால்

கோவை: பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் பைகளை, மறுசுழற்சி செய்ய முடியாத தால், திடக்கழிவு மேலாண்மை பணியில் ஈடுபடும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள பல நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி கள் திடக்கழிவு மேலாண்மை பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதில், ஊழியர்கள் பயிற்சி பெற, லட்சக்கணக்கில் அரசு செலவிடுகிறது.

தரம் பிரித்தல் : உள்ளாட்சி அமைப்புகள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, காய்கறி கழிவுகளை, மட்கும் மற்றும் மட்காத குப்பையாக தரம் பிரித்து, மட்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரித்து வருகின்றன. சில வகை பிளாஸ்டிக் பொருட்கள், இயந்திரத்தால் துாளாக்கப்பட்டு, அவை சாலை அமைக்க, தாருடன் கலக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் தார் கலவை மூலம் போடப்படும் சாலையின் உறுதித் தன்மை, வலுவாக இருக்கும் என, கூறப்படுகிறது. இந்நிலையில், மசாலா கம்பெனிகள் உட்பட, பல நிறுவனங்கள் பல வண்ணங்களில், பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கின்றன. மறுசுழற்சிக்கு உதவாத அத்தகைய பிளாஸ்டிக் பைகள், உள்ளாட்சி அமைப்புகளின் குப்பை குழிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை செய்யப்படும் இடங்களில், குவியலாக சேர்த்து வைக்கப்பட்டு உள்ளன.
பயன்படாது

உள்ளாட்சி அமைப்பின் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:மசாலா பாக்கெட்டுகள் உட்பட, பல வண்ணங்களில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகளின் உட்புறம், 'சில்வர் பூச்சு' இருப்பதால், அவற்றை மறுசுழற்சிக்கு, நிறுவனங்கள் வாங்குவதில்லை. இதனால், அவற்றை மேலாண்மை செய்வது, எங்களுக்கு கடினமாக உள்ளது. எனவே, பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கும் நிறுவனங்கள், மறுசுழற்சிக்கு ஏற்ற வகையில், பிளாஸ்டிக் பைகளை தயாரித்தால், அவற்றை மேலாண்மை செய்வது எளிதாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த தமிழகம் முழுவதும் கணக்கெடுப்பு பணி தீவிரம்

Print PDF

தி இந்து      21.05.2017

அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்த தமிழகம் முழுவதும் கணக்கெடுப்பு பணி தீவிரம்

கோப்பு படம்

கோப்பு படம்

அங்கீகரிக்கப்படாத மனைகளை வரன்முறைப்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கணக்கெடுக் கும் பணி தொடங்கியுள்ளது.

அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் விவகாரம் தொடர்பான வழக்கு, தற்போது சென்னை உயர் நீதிமன் றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு விரைவில் வரவுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அங்கீகார மற்ற வீட்டு மனைகளை வரன் முறைப்படுத்த, தமிழக அரசு தயா ராகி வருகிறது. அதன் ஒரு பகுதி யாக தமிழகம் முழுவதும் அங்கீகார மற்ற மனைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

உள்ளாட்சி பகுதிகளில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பு, அங்கீகரிக்கப் படாத மனைகளை வாங்கியோர் அதை வரன்முறைப்படுத்த, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை புதிய விதிகளை வெளி யிட்டுள்ளது. எனவே, அங்கீகரிக்கப் படாத மனைகளை வாங்கியோர், மனை பிரிவை உருவாக்கியோர், உடனடியாக சம்பந்தப்பட்ட உள் ளாட்சி அமைப்புகளின் அலுவல கத்தில் உரிய முறையில் விண்ணப் பித்து பயன்பெறலாம் என உள் ளாட்சி அமைப்புகள் சார்பில் அறி விப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அங்கீகரிக்கப் படாத மனைகள் கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக நகரமைப்பு அலுவலர் ஒருவர், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழ்நாடு நகரமைப்புத் திட்ட மிடல் சட்டம் 1971-ன் கீழ், தமிழ்நாடு அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் ஒழுங்குமுறை விதி - 2017 புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. நிலங்கள் கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன் உருவாக்கப்பட்டவையாக இருந்தால், வரன்முறைப்படுத்தும் விதியின்கீழ் கொண்டுவர முடியும். இந்த மனைகளை பதிவு செய்வதன் மூலம் நிலம் வாங்கியவர்கள், பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படும் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெறலாம். மின் இணைப்பும் பெற்றுக் கொள்ளலாம். உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறும் பட்சத்தில், வங்கியில் வீடு கட்ட கடனும் கிடைக்கும்.

எனவே, சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் இடத்தின் வரைபட நகலை நிலம் அமைந்துள்ள பகுதியின் உள் ளாட்சி அமைப்பு அலுவலகத்தில் 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். மேலும் உள்ளாட்சி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் நிலங்கள், மனைகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதியில் உள்ள அரசு உரிமம் பெற்ற சர்வேயர், ஆர்கிடெக், கட்டுமான நிறுவனத்தின் பொறியாளர்கள் ஆகியோர் கணக்கெடுப்புப் பணியை செய்யவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்தப் பணியில் ஈடு படுபவர்களுக்கு, அரசு சேவை கட் டணம் வழங்க உத்தேசித் துள்ளது.

கணக்கெடுப்புப் பணிகளை 20 நாட்களுக்குள் முடித்து அரசுக்கு அறிக்கை வழங்கப்படும். அதன்பிறகு சம்பந்தப்பட்ட இடங் களை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் உள் ளாட்சி நகர்ப்புற வளர்ச்சி துறையை சேர்ந்த வல்லுநர்கள் ஆய்வு செய்து அனுமதி வழங்குவர். இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள், வீடு, நிலம் விற்போர் பயன்படுத்தி, மனைகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 8 of 3988