Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் ரூ.38 கோடியில் குடியிருப்பு, அலுவலகங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்

Print PDF

தி இந்து       14.05.2017

வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் ரூ.38 கோடியில் குடியிருப்பு, அலுவலகங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.38 கோடியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், அலுவலக கட்டிடங்களை முதல்வர் கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கோவை மாவட்டம் குறிஞ்சி நகர் திட்டப் பகுதியில் ரூ.10 கோடியே 69 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 160 அடுக்குமாடி குடியிருப்புகள், சுகுணாபுரம் திட்டப் பகுதியில் ரூ. 4 கோடியே 33 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 64 அடுக்குமாடி குடியிருப்புகளை சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் முதல்வர் கே.பழனிசாமி திறந்துவைத்தார்.

இதுதவிர, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் சின்னாம்பாளையம் கிராமத்தில் ரூ.11 கோடியே 77 லட்சத்தில் 108 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள், கோவையில் ரூ.1.72 கோடியில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய கோட்ட அலுவலகம், சென்னை மாதவரம் ஜம்புலி காலனியில் சென்னை பெருநகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் மூலம் ரூ. 6 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளன. இவற்றையும் முதல்வர் திறந்துவைத்தார்.

திருச்சியில் நகர ஊரமைப்புத் துறை சார்பில் ரூ.1.56 கோடியில் மண்டல உதவி இயக்குநர் அலுவலகம், உள்ளூர் திட்டக் குழும அலுவலக கட்டிடம், திருநெல்வேலியில் ரூ.1.93 கோடியில் மண்டல துணை இயக்குநர் அலுவலகம், உள்ளூர் திட்டக் குழு அலுவலகம் என மொத்தம் ரூ.38 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கட்டிடங்களை முதல்வர் கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

புதிய மென்பொருள்

கட்டிட வரைபடம், மனைப் பிரிவு வரைபடம், நிலப்பயன் மாற்றம் குறித்த உத்தேசங்களுக்கு கணினி மூலம் ஒப்புதல் வழங்கு வதற்காக ரூ. 2 கோடியே 60 லட்சத் தில் தயாரிக்கப்பட்டுள்ள மென் பொருளையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த புதிய மென் பொருள் பயன்பாட்டுக்கு வந்துள்ள தால் www.tn.govt.in/tcp என்ற இணையதளத்தின் மூலம் கட் டிடங்களுக்கு அனுமதி பெற விண் ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள் வதுடன், திட்ட அனுமதி ஆணை, ஒப்புதல் வழங்கப்பட்ட வரைபட நகல்களையும் இந்த இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச் செய லாளர் கிரிஜா வைத்தியநாதன், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

 

கட்டிட பணி நிறைவு சான்றிதழ் விரைவாக கிடைக்க புதிய ஏற்பாடு: கட்டிட வல்லுநர்கள் மூலம் வழங்க சிஎம்டிஏ திட்டம்

Print PDF

தி இந்து    14.05.2017

கட்டிட பணி நிறைவு சான்றிதழ் விரைவாக கிடைக்க புதிய ஏற்பாடு: கட்டிட வல்லுநர்கள் மூலம் வழங்க சிஎம்டிஏ திட்டம்

கோப்பு படம்
கோப்பு படம்

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கட்டுப்பாட்டில் வரும் பகுதிகளில் 3 அடுக்கு மாடிகளுக்கு மேல் கொண்ட கட்டிடத்தை கட்ட வேண்டுமென்றால் அதற்கு சிஎம்டிஏ அனுமதி கட்டாயம் தேவை. அதேபோல 800 சதுர அடிக்கு மேல் பரப்பளவில் கட்டப் படும் கட்டிடத்துக்கும் சிஎம்டிஏ அனுமதி அவசியம். இதனைவிட சிறிய கட்டிடங்களுக்கான அனு மதியை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் பெற்றுக்கொள்ள லாம். சிஎம்டிஏ அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டிடமானாலும் பணி நிறைவு சான்று பெற வேண்டும்.

இந்த நிலையில் பலர் சிஎம்டிஏ அனுமதியை பெறாமலோ அல்லது சிஎம்டிஏ அனுமதி பெற்று, சில விதிமீறல்களுடனோ கட்டிடங்களை கட்டுகின்றனர்.

தற்போது கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் பணிநிறைவு சான்றிதழ் கேட்டு உரிமையாளர் சிஎம்டிஏவிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிமுறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்திருந் தால் பணிநிறைவு சான்று வழங் குவர். குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு, மின்சார இணைப்பு ஆகியவற்றை பெற இந்த பணிநிறைவு சான்று அவசியம்.

சென்னையைச் சுற்றி ஆயிரம் சதுர கிலோ மீட்டர்களுக்கு மேற் பட்ட பகுதிகள் சிஎம்டிஏ கட்டுப் பாட்டில் வருகின்றன. இதன் காரண மாக தற்போதுள்ள நடைமுறை யால் பல கட்டிடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ்கள் வழங்கும் பணி தாமதமாகிறது. இந்த நிலையில் மூன்றாம் நபர் மூலம் பணிநிறைவு சான்றிதழ் வழங்கும் நடைமுறையை செயல்படுத்துவது தொடர்பாக சிஎம்டிஏ பரிசீலித்து வருகிறது.

இது குறித்து சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியது:

தற்போதைய நடைமுறையில் பணிநிறைவு சான்றிதழ் வழங்க காலதாமதம் ஏற்படுகிறது. இந்த நிலையில் மூன்றாம் நபர் மூலம் பணிநிறைவு சான்றிதழ் வழங்கும் முறையை நடைமுறைப்படுத் தலாம் என்ற யோசனையை மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த யோசனையை பரிசீலித்து வருகிறோம். இது தொடர்பாக அரசிடம் அனுமதி கோரியுள்ளோம்.

இந்த புதிய முறைப்படி, கட்டிடங் களை கட்டித்தரும் கட்டிடக்கலை வல்லுநரே பணிநிறைவு சான்று வழங்கலாம். அவ்வாறு வழங்கும் போது விதிமீறல்கள் குறித்து அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். குறைகள் இருந்தால் சான்றிதழ் வழங்கக்கூடாது.

பணிநிறைவு சான்றிதழ்களை கட்டிடக்கலை வல்லுநர்கள் வழங்கினாலும், அவ்வப்போது சிஎம்டிஏ அதிகாரிகள் (ரேண்டம் முறையில்) ஆய்வு செய்வார்கள். ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பணிநிறைவு சான்று வழங்கிய கட்டிடக்கலை வல்லுநர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ் வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோயம்புத்தூரில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்–அமைச்சர் திறந்து வைத்தார்

Print PDF

தினத்தந்தி      14.05.2017

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோயம்புத்தூரில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்–அமைச்சர் திறந்து வைத்தார்


தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோயம்புத்தூரில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்–அமைச்சர் திறந்து வைத்தார்
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோயம்புத்தூரில் கட்டப்பட்ட 224 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் குறிஞ்சி நகர் திட்டப்பகுதியில் ரூ.10 கோடியே 69 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 160 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சுகுணாபுரம் திட்டப்பகுதியில் ரூ.4 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 64 அடுக்குமாடி குடியிருப்புகள் என 224 அடுக்குமாடி குடியிருப்புகளை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

திருமண மண்டபம்

மேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் சின்னாம்பாளையம் கிராமத்தில் பொள்ளாச்சி–உடுமலைப்பேட்டை பிரதான சாலையில் சிதிலமடைந்த 72 குடியிருப்புகளை இடித்து விட்டு புதிதாக அதே இடத்தில் ரூ.11 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 108 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகள்; கோயம்புத்தூரில் ரூ.1 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய சரக மற்றும் கோட்ட அலுவலக வளாகம்; சென்னை மாதவரம் ஜம்புலி காலனியில் சென்னை பெருநகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் மூலம் ரூ.6 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம்;

நகர் ஊரமைப்புத்துறையின் சார்பில் திருச்சியில் ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மண்டல உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் உறுப்பினர் செயலர், உள்ளூர் திட்டக்குழும அலுவலக கட்டிடம்; திருநெல்வேலியில் ரூ.1 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மண்டல துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் உறுப்பினர் செயலர், உள்ளூர் திட்டக்குழும அலுவலக கட்டிடத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மொத்தம் 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது.

மென்பொருள்

கட்டிட வரைபடம், மனைப்பிரிவு வரைபடம் மற்றும் நிலப்பயன் மாற்றம் குறித்த உத்தேசங்களுக்கு கணினி வாயிலாக ஒப்புதல் வழங்குவதற்கு ஏதுவாக ரூ.2 கோடியே 60 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட மென்பொருளை எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்த புதிய மென்பொருளால், விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை www.tn.gov.in/tcp என்ற இணையதளத்தின் வாயிலாக சமர்ப்பிக்கலாம்.

அவ்வாறு சமர்ப்பிக்கும் போது கணினியால் வழங்கப்படும் தனித்த எண்ணைக்கொண்டு மனுதாரர் தனது விண்ணப்பத்திற்கு ஒப்புதல் வழங்குவதன் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். ஒப்புதல் கோரும் அனைத்து விதமான விண்ணப்பங்களை நகர் ஊரமைப்பு துறையின் எந்த ஒரு சார்நிலை அலுவலகத்திற்கும் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கவும், இட நேராய்வு செய்யவும், திட்ட அனுமதி ஆணை மற்றும் ஒப்புதல் வழங்கப்பட்ட வரைபட நகல்களை இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திட்ட அனுமதி ஆணை

மேலும், விண்ணப்பம் இணையதளத்தின் வாயிலாக பெறப்பட்டதற்கு ஒப்பளிப்பு வழங்குதல், இட நேராய்வு தேதி குறித்த விவரம் தெரிவித்தல், கூடுதல் விவரங்கள் கோருதல், மனுதாரர் விரும்பினால் அலுவலர்களை சந்தித்து விளக்கம் தெரிவிக்க வாய்ப்பு வழங்குதல், கட்டணங்கள் செலுத்த கோரும் கடிதம் அனுப்புதல் மற்றும் திட்ட அனுமதி ஆணை வழங்குதல் ஆகியவற்றை குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மற்றும் மின்னஞ்சல் மூலம் (இ–மெயில்) மனுதாரருக்கு தெரிவிக்க உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 


Page 10 of 3988