Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 88.7 சதவீத தேர்ச்சி: கடந்த ஆண்டைவிட 2.5 சதவீதம் அதிகம்

Print PDF

தி இந்து        13.05.2017

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 88.7 சதவீத தேர்ச்சி: கடந்த ஆண்டைவிட 2.5 சதவீதம் அதிகம்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளில் 88.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னையில் 32 மேல்நிலைப் பள்ளி களை சென்னை மாநகராட்சி நடத்தி வருகிறது. இந்த பள்ளிகளில் படித்த 6,423 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதினர். இவர்களில் 2,580 பேர் மாணவர்கள், 3,843 பேர் மாணவிகள். தேர் வெழுதிய 6,423 பேரில் 5700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 88.7 சதவீதமாகும். கடந்த ஆண்டு மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் ஒட்டுமொத்த தேர்ச்சி 86.21 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

தேர்ச்சி பெற்றவர்களில் 2,085 பேர் மாணவர்கள், 3,615 பேர் மாணவிகள். தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகம் உள்ளனர். மாநகராட்சி பள்ளி மாணவர்களின் தேர்ச்சி வகிதம் 80.8 சதவீதமாக உள்ளது. அதேவேளையில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.1 சதவீதமாக இருக்கிறது.

தேர்ச்சி பெற்றவர்களில் 136 மாணவ, மாணவியர் 1,100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர், கடந்த ஆண்டு 61 பேர் மட்டுமே 1,100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தனர். மேலும் 524 பேர் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ள னர். கடந்த ஆண்டு இது 326-ஆக இருந் தது. கடந்த ஆண்டை விட முழு (200-க்கு 200) மதிப்பெண்கள் பெற்றவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு பெரம்பூர் மார்க் கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிஐடி நகர் சென்னை மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 3-ஆக இருந்தது. அதேபோல இந்தாண்டு 18 பள்ளிகள் 90 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

 

மாநகராட்சி, நகராட்சிகளில் பகுதிகளை சேர்ப்பது, நீக்குவது அரசின் கொள்கை முடிவு: உயர்நீதிமன்றம்

Print PDF

தினமணி           11.05.2017

மாநகராட்சி, நகராட்சிகளில் பகுதிகளை சேர்ப்பது, நீக்குவது அரசின் கொள்கை முடிவு: உயர்நீதிமன்றம்

மாநகராட்சி, நகராட்சிகளில் புதிய பகுதிகளைச் சேர்ப்பது, நீக்குவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளை (1,2) சென்னை மாநகராட்சியின் ஏழாவது மண்டலத்தில் சேர்க்க உத்தரவிடக் கோரி, அயப்பாக்கம் சர்வ இந்து திருக்கோவில் அறக்கட்டளை பொருளாளர் இளம்வழுதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வானது, சென்னை மாநகராட்சிக்குள் எந்த பகுதிகள் சேர்க்கப்பட வேண்டும், அம்பத்தூர் நகராட்சியில் எந்த பகுதியைச் சேர்க்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு. அதில், நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பூங்காவை சுத்தம் செய்து மரக்கன்று நடும் பணி

Print PDF

தினமணி        11.05.2017

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பூங்காவை சுத்தம் செய்து மரக்கன்று நடும் பணி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் என்.ஜி.ஓ.ஓ. காலனியில் உள்ள பூங்காவை சுத்தம் செய்து அதில் மரக்கன்று நடும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பூங்கா பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி, முட்புதர்கள் நிறைந்து இப் பகுதியில் குடியிருப்போர் இதனைப் பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தது.

விருதுநகர் மாவட்ட டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் தலைவி ஜெஸ்ஸி ஏஞ்சல், நகராட்சி நிர்வாகத்தினரை அணுகி, இதனை அறக்கட்டளை சார்பில் தூய்மைப்படுத்தி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க அணுமதி கோரியிருந்தனர். 

இதன் பேரில் நகராட்சி ஆணையாளர் டி.எம்.முகமது மைதீன், நகர் நல அலுவலர் டாக்டர் மா.சரோஜா ஆகியோர் தலைமையில், தன்னார்வ அறக்கட்டளையின் தலைவி ஜெஸ்ஸி ஏஞ்சல் முன்னிலையில் இளைஞர்கள் பூங்காவை சுத்தம் செய்தனர். பின்னர் நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதனை இந்த அறக்கட்டளையினர் தொடர்ந்து பராமரிப்பார்கள்.

நிகழ்ச்சியில் இப் பகுதி குடியிருப்போர், ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 11 of 3988