Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ஈரோடு மாநகராட்சியில் குடிநீர், குத்தகை இனங்களில் 100% வரி வசூலித்து சாதனை

Print PDF

 தி இந்து     31.03.2017

ஈரோடு மாநகராட்சியில் குடிநீர், குத்தகை இனங்களில் 100% வரி வசூலித்து சாதனை

ஈரோடு மாநகராட்சியில் குடிநீர், குத்தகை இனங்களில் 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் சீனி.அஜ்மல்கான் தெரிவித்தார்.

ஈரோடு மாநகராட்சியின் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி, மொத்த வருவாய் வரவு ரூ.497.47 கோடியாகும். இவற்றில் வருவாய் வரவினம் மூலம் ரூ.101 கோடியும், மூலதன வரவினம் மூலம் ரூ.396 கோடியும் மாநகராட்சிக்கு வருவாயாக கிடைக்கிறது. வருவாய் வரவினங்களில் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து வரிவிதிப்புகள் மூலமாக ரூ.20 கோடிக்கு மேல் வரி வசூல் செய்யப்படுகிறது.

தொழில்வரி மூலம் ரூ.3.50 கோடியும், வணிகவளாகங்கள் உள்ளிட்ட சொத்துக்களின் மூலம் ரூ.3.31 கோடி மற்றும் சொத்துவரி, குடிநீர் வரி, வாடகை மற்றும் குத்தகை இனங்கள் உள்ளிட்டவை மூலம் ரூ.101 கோடி வருவாய் வசூல் செய்யப்படுகிறது.

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, பழைய ரூபாய் நோட்டுகளை வரி செலுத்துவதற்கு பயன்படுத்தலாம் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டதால், நிலுவையில் உள்ள வரி இனங்களை செலுத்துவதில் பொதுமக்களும், தொழில் நிறுவனத்தினரும் ஆர்வம் காட்டினர். இதனால், மாநகராட்சியின் வரி வருவாய் கணிசமாக அதிகரித்தது.

இந்த நிதியாண்டு இன்று நிறை வடையவுள்ள நிலையில், ஈரோடு மாநகராட்சி சார்பில் வரிவசூல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. நீண்டகாலமாக வரி பாக்கி வைத்துள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் வரிவசூல் செய்யும் பணியை அதிகாரிகள் விரைவுபடுத்தியுள்ளனர்.

மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தத் தவறினால், கடைகளை மூடி சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. வரி வசூல் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் சீனி.அஜ்மல்கானிடம் பேசியபோது, “மாநகராட்சியில் பல்வேறு பணி களை மேற்கொள்ள வரி வசூலே பிரதானமாக இருந்து வருகிறது. 100 சதவீதம் வரிவசூலை எட்ட வேண்டும் என்ற இலக்கோடு, கடந்த சில மாதங்களாக தீவிரமாக அலுவ லர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுவரை 97 சதவீதம் வரிவசூல் நடந்து முடிந்துள்ளது.

குறிப்பாக குடிநீர் வரி, குத்தகை இனம் போன்றவைகளில் 100 சதவீ தம் வரி வசூல் செய்யப்பட் டுள்ளது. சொத்து வரியில் 98 சதவீதம் வசூலாகியுள்ளன. அரசு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் வசூல் செய்த தொழில்வரியை செலுத்தாமல் உள்ளன. இதனை வசூல் செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

 

தாம்பரம், பல்லாவரம், ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்கிறது

Print PDF

தினத்தந்தி                27.03.2017

தாம்பரம், பல்லாவரம், ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்கிறது


தாம்பரம், பல்லாவரம், ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்கிறது
தாம்பரம், பல்லாவரம், ஆவடி நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தலாம் என்று தமிழக அரசுக்கு நகராட்சி நிர்வாகங்கள் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளன.
சென்னை, 

தமிழ்நாட்டில், தலைநகர் சென்னை உள்பட மொத்தம் 12 மாநகராட்சிகள் உள்ளன. இதில், சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி பெருநகர மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பெருநகர சென்னை மாநகராட்சி அமைந்துள்ளது.

தற்போது, சென்னையை ஒட்டியுள்ள தாம்பரம், பல்லாவரம், ஆவடி ஆகிய 3 நகராட்சிகளையும் மாநகராட்சியாக தரம் உயர்த்தலாம் என்று அந்தந்த நகராட்சி நிர்வாகங்கள், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளன. அதாவது, தாம்பரம், பல்லாவரம், ஆவடி ஆகிய நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் இருந்து, அதே துறையின் முதன்மை செயலாளருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இணையும் பகுதிகள் எவை?

ஆவடி மாநகராட்சியில், ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளையும், திருநின்றவூர் நகர பஞ்சாயத்தையும், நெமிலிச்சேரி, நசரத்பேட்டை, காட்டுபாக்கம் உள்பட 11 கிராம பஞ்சாயத்துகளையும் இணைக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி உருவானால், 80 முதல் 100 வார்டுகள் இடம் பெறும். அதன் பரப்பளவும் 148 சதுர கிலோ மீட்டராக விரிவடையும். மக்கள்தொகையும் 6 லட்சத்து 12 ஆயிரம் என்ற அளவில் இருப்பார்கள்.

இதேபோல், பல்லாவரம் மாநகராட்சியில், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளையும், கவுல் பஜார் கிராம பஞ்சாயத்தையும் இணைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், தாம்பரம் மாநகராட்சியில், தாம்பரம், செம்பாக்கம் நகராட்சிகளையும், பெருங்களத்தூர், பீர்க்கண் காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம் ஆகிய 4 நகர பஞ்சாயத்துகளையும், மேடவாக் கம், வேங்கைவாசல், முடிச்சூர் உள்பட 7 கிராம பஞ்சாயத்துகளையும் இணைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

என்னென்ன வசதிகள் கிடைக்கும்?

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்போது, அரசு அதிக நிதியை ஒதுக்கும். பாதாள சாக்கடை, குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் - திடக்கழிவு மேலாண்மை வசதி, போக்குவரத்து வசதி போன்றவை செய்துகொடுக்கப்படும். மாநகராட்சி பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் உருவாக்கப்படும். ஊழியர்கள் அதிகம் நியமிக்கப்படுவார்கள். கட்டுமானங்கள் முறைப்படுத்தப்படும். நிலத்தின் மதிப்பும் அதிகரிக்கும்.

தாம்பரம், பல்லாவரம், ஆவடி நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து வரப்பெற்றுள்ள பரிந்துரை கடிதங்கள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, விரைவில் முடிவு அறிவிக்கப்படும்.
Last Updated on Monday, 27 March 2017 09:14
 

மேலும் 3 மாநகராட்சி: தமிழக அரசு பரிசீலனை

Print PDF

 தினமணி        27.03.2017

மேலும் 3 மாநகராட்சி: தமிழக அரசு பரிசீலனை

ஆவடி, தாம்பரம், பல்லாவரம் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில் ஆவடி, தாம்பரம், பல்லாவரம் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான பரிந்துரையை சென்னை மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம் அனுப்பிய இந்த பரிந்துரையை தமிழக அரசு தற்போது பரிசீலித்து வருகிறது. அவ்வாறு மாநகராட்சிகளாக அறிவிக்கப்படும் பட்சத்தில், தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 15ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Last Updated on Monday, 27 March 2017 08:03
 


Page 19 of 3988