சமுதாயக் கூடம் திறப்பு

Thursday, 20 May 2010 08:34 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print

தினமணி     20.05.2010

சமுதாயக் கூடம் திறப்பு

கும்மிடிப்பூண்டி,மே 19: கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தின் (படம்) திறப்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது.

ஆரணியில் லட்சுமி அம்மன் கோயில் அருகில் ரூ.22.5 லட்சம் மதிப்பில் இந்த சமுதாயக் கூடம் கட்டப்படுள்ளது. சிறப்பு பூஜையுடன் தொடக்க விழா நடைபெற்றது.

ஆரணி பேரூராட்சித் தலைவர் ஷேமபூஷணம் சமுதாய கூடத்தை திறந்து வைத்தார். வருவாய் அலுவலர் கன்னியப்பன் முன்னிலை வகித்தார்.

கவுன்சிலர்கள் சுகுமார், நைனியப்பன், ரகு, வள்ளி, சாந்தி, கலா உட்பட பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.