குடிசை மேம்பாட்டு திட்ட மானியத் தொகை பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம்

Wednesday, 11 August 2010 07:46 administrator நாளிதழ்௧ள் - சமூ௧ மேம்பாடு
Print

தினமலர் 11.08.2010

குடிசை மேம்பாட்டு திட்ட மானியத் தொகை பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம்

திருநெல்வேலி : ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டத்தில் குடிசை மேம்பாட்டு பணிகள் செய்ய ரூ.40 லட்சம் மானியத் தொகையை பயனாளிகளுக்கு மேயர் வழங்கினார்.

நெல்லை மாநகராட்சி ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டவும், வீடு மேம்பாட்டு பணிகள் செய்யவும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தச்சை மண்டலத்தில் 69 பயனாளிகள், பாளை., மண்டலத்தில் 109 பயனாளிகள், நெல்லை மண்டலத்தில் 54 பயனாளிகள், மேலப்பாளையம் மண்டலத்தில் 10 பயனாளிகள் என மொத்தம் 242 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. வீடு கட்ட மானியத் தொகையாக ரூ.40 லட்சத்து 71 ஆயிரத்து 689 ரூபாயை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். இதில் துணைமேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் சுப்பையன், மண்டல தலைவர்கள், மாநகர பொறியாளர், உதவிக்கமிஷனர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.